இன்று வைகாசி முதல் நாள்! இன்றைய தினம் இந்த ஒரு பொருளை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டால், நீங்கள் அந்த மகாலட்சுமி தாயை வீட்டிற்குள் அழைத்து வந்ததற்கு சமம்.

amman
- Advertisement -

பெரும்பாலும் இந்த வைகாசி முதல் நாளுக்கு நாம் அவ்வளவுவாக முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. வைகாசி மாசம் வந்துவிட்டால் நம் நினைவுக்கு வருவது வைகாசி விசாகம். இது முருகப்பெருமானுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வைகாசி மாதம் சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால், இன்றைய தினம் சிவன் வழிபாடும் சிறப்புமிக்கது. அது மட்டும் இல்லாமல் ஏகாதேசி விரதமும் இன்று அனுசிக்கப்படுகிறது.

விஷ்ணு பகவானுக்கு உரிய விஷ்ணுபதி புண்ணிய காலமும் இன்று தான். இப்படி பலவிதமான கடவுள்களையும் வழிபடக்கூடிய நன்னாளாக இது திகழ்கிறது. நேர்மறை ஆற்றல் நிறைந்த இந்த நன்னாளில் நம் பாவங்களை போக்கிக் கொள்ளவும், புண்ணியங்களை சேர்த்துக் கொள்ளவும், மகாலட்சுமி அருள் கடாட்சம் பெறவும் நாம் செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்பதை பற்றிய ஆன்மீகம் சொல்லும் பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

வைகாசி முதல் நாள் வழிபாடு:
இன்றைய தினம் வைகாசி ஒன்று பிறந்துவிட்டது அல்லவா. உங்களுக்கு இந்த மாத வழிபாடுகளை பற்றி தெரிந்து இருந்தாலும் சரி, தெரியவில்லை என்றாலும் சரி, இன்று மாலைக்குள் இதையெல்லாம் செய்து முடித்து விடுங்கள்.  உங்களுடைய வீட்டில் அருகில் சிவன் கோவில் இருந்தாலும் சரி, பெருமாள் கோவில் இருந்தாலும் சரி உங்களுக்கு எந்த கோவிலுக்கு செல்ல விருப்பம் இருக்கிறதோ அந்த ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் விஷ்ணு சிவன் இரண்டு கோவிலுக்கும் சென்று சேர்த்து வழிபாடு செய்யலாம்.

நிச்சயமாக சிவன் கோவிலில் அம்மன் சன்னதி இருக்கும். பெருமாள் கோவிலில் அம்பாள் சந்நிதி இருக்கும். நீங்கள் சக்தி தேவியை வழிபாடு செய்தாலும் சரி மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்தாலும் சரி, ஏதோ ஒரு அம்மனை இன்று கட்டாயம் தரிசனம் செய்ய வேண்டும். அம்மனை வழிபாடு செய்து விட்டால் எல்லா தெய்வத்தையும் வழிபாடு செய்ததற்கு சமம்.

- Advertisement -

அம்மன் கோவிலுக்கு உங்களுடைய கைகளால் வாசம் நிறைந்த தாழம்பூ குங்குமத்தை வாங்கி தானமாக கொடுங்கள். வாசனை நிறைந்த பூக்களை கட்டி மாலையாக போடுங்கள். இந்த மாதம் மல்லிகைப்பூ நிறைய கிடைக்கும். வாசமுள்ள மல்லிகை பூக்களை உங்கள் கையாலேயே தொடுத்து அம்மனுக்கு போட்டு வேண்டிய வரங்களை கேட்டால் அது உடனே கிடைக்கும். மகாலட்சுமி தாய் மனம் உருகி உங்களுக்கு தேவையான வரங்களை அள்ளிக் கொடுத்து விடுவாள்.

நீங்கள் கோவிலுக்கு சென்று திரும்பி வரும்போது நிச்சயமாக அம்மன் கோவில்களில் குங்குமம் பிரசாதமாக கிடைக்கும். புஷ்பங்கள் பிரசாதமாக கிடைக்கும் அல்லவா. அந்த இரண்டு பொருட்களையும் கொண்டு வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்தால் அந்த அம்பாள் உங்கள் வீட்டு பூஜை அறையில் வந்து அமர்ந்து விடுவாள். பூஜை அறையில் வைத்த பிரசாதத்தில் லிருந்து சிறிதளவு எடுத்து உங்கள் வீட்டு பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். இதை செய்யும்போது உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீரும். அதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் சுப காரிய தடை விலகும்.

இதையும் படிக்கலாமே: வாஸ்துபடி இந்த மூன்று செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் பணம் வாய்ப்பு என எதையும் நீங்கள் தேடி போக வேண்டாம். அவைகள் தானாகவே உங்களைத் தேடி வரும்.

எந்த ஒரு வழிபாட்டை செய்தாலும் அந்த வழிபாடு முழுமை பெற வேண்டும் என்றால் அன்றைய தினம் நாம் ஒரு தானத்தை செய்ய வேண்டும். அது என்ன தானமாக இருந்தாலும் சரி, உண்மையிலேயே இல்லாத பட்டவர்களுக்கு சரியாக போய் அந்த தானம் சேர வேண்டும். அது அன்னதானமாக இருந்தாலும் சரி, துணிமணிகளை தானமாக கொடுத்தாலும் சரி, அல்லது வாயில்லா ஜீவன்களுக்கு நீங்கள் உணவு வாங்கி கொடுத்தாலும் சரி அது உங்களுடைய நிதி நிலைமையை பொருத்தது. இல்லாதவர்களுக்கு யாருக்காவது ஒரு பொருளை இன்றைய தினம் உங்கள் கையால் தானம் செய்து விடுங்கள். இதனால் உங்களுடைய பாவங்கள் குறைந்து புண்ணியமும் சேரும். முடிந்தவர்கள் இன்றைய தினம் மேல் சொன்ன வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -