பணத்தின் மீது இருக்கும் கண் திருஷ்டி விலக பரிகாரம்

cash1
- Advertisement -

கண் திருஷ்டியில் ஏகப்பட்ட வகைகள் உண்டு. சில பேர் கண் திருஷ்டி வைத்தால் உடல்நிலை சரியில்லாமல் போகும். சில பேர் கண் திருஷ்டி வைத்தால் நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும். சில கண் திருஷ்டி நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும். இப்படி ஒவ்வொருவருடைய பார்வை ஒவ்வொரு பிரச்சனைகளை நமக்கு கொடுக்கும்.

அந்த வகையில் ஒட்டுமொத்த பேரின் பார்வையும் இருக்கக்கூடிய ஒரு இடம் என்றால், அது பணம்‌. அடுத்தவர்கள் எப்படி செல்வந்தர்களாக வாழ்கிறார்கள், அவர்களுக்கு பணம் எப்படி வருகிறது, அவர்கள் நினைத்த பொருளை எல்லாம் வாங்குவதற்கு பணத்தை எப்படி சேமித்து வைக்கிறார்கள், எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள், இதைப் பற்றின நோட்டம் கட்டாயம் சக மனிதர்களிடத்தில் இருக்கும்.

- Advertisement -

உங்க கையில் இருக்கும் பணத்தையும் அடுத்தவர்கள் நோட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறார்களா. உங்களுடைய வருமானத்தையும் அடுத்தவர்கள் துருவி துருவி கேட்டு ஆராய்ச்சி செய்கிறார்களா. இதனால் உங்கள் வீட்டு செல்வ வளத்தில் பிரச்சனை வருகிறதா. வீட்டில் இருக்கும் பணத்தின் மீது படக்கூடிய அந்த கண் திருஷ்டியை விளக்குவது எப்படி ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

பணத்தின் மீது இருக்கும் கண் திருஷ்டி விலக பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முதலில் மூன்று இலைகள் தேவை. எருக்கன் இலை, துளசி இலை, வேப்ப இலை. இந்த மூன்று இலைகளையும் எடுத்து நன்றாக நசுக்கி இதிலிருந்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணிக்கை என்பது உங்களுடைய கணக்கு தான்.

- Advertisement -

எருக்கஇலை பெருசாக இருக்கும். ஒரு இலை எடுத்துக்கோங்க. 10 துளசி இலை போடுங்க. 10 வேப்ப இலை போட்டு இது மூன்றிலும் கொஞ்சம் தண்ணீர் விட்டு நசுக்கி கூட சாறு எடுத்துக் கொள்ளலாம். மொத்தமாக இரண்டு ஸ்பூன் அளவு இந்த இலைகளில் இருந்து சாறு கிடைத்தாலும் போதும்.

பிறகு ஒரு பசு மாட்டின் கோமியம் நமக்குத் தேவை. அந்த கோமியத்தில் இந்தச் சாறை கலந்து இதில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை கலந்து, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு இந்த தீர்த்தத்தை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். வெள்ளிக்கிழமை மாலை பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமிக்கு உண்டான பூஜையை செய்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு வீடு முழுவதும் புகை நிரம்பி இருக்கும் படி சாம்பிராணி தூபம் மணக்க மணக்க போட வேண்டும். அந்த சமயத்தில் இந்த தீர்த்தத்தை வீட்டுக்கு உள்பக்கத்திலிருந்து வெளிப்பக்கம் வரை தெளித்து வர உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, குறிப்பாக உங்க வீட்டு செல்வ வளத்தில், பணத்தில் இருக்கக்கூடிய கண் திருஷ்டி ஆனது விலகிவிடும். தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வீட்டில் நிச்சயம் பணம் வீண் விரயம் ஆகாது.

நிறைய பேர் வீட்டில், பெண்கள் பணத்தை சேமித்து வைக்க கூடிய வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இதில் ஏதாவது வீட்டுக்கு தேவையான உபயோகமான பொருட்கள் வாங்க வேண்டும் என்று பணம் சேர்ப்பாங்க. ஆனால் கணவருக்கு அவசர தேவை இருக்கிறது, மருத்துவ செலவு வந்து விட்டது, வண்டி ரிப்பேர் ஆகிவிட்டது, என்று சொல்லி அந்த பத்தாயிரம் ரூபாயையும் தேவையில்லாத ஒரு செலவுக்காக வீண் விரயம் செய்திருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய பூஜை

இப்படி உங்கள் கையில் இருக்கும் பணத்தின் மீது ஏதோ ஒரு கண் திருஷ்டி பட்டிருக்கிறது. அதனால் தான் அந்த பணத்தை நீங்கள் நினைத்த செலவுக்காக பயன்படுத்த முடியவில்லை. இந்த கண் திருஷ்டியில் இருந்து விலக மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -