நீங்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு பெயர், புகழ் , அந்தஸ்து, செல்வ செழிப்பு என சகல சௌபாக்கியத்துடன் வாழ வீட்டில் இந்த ஒரு பொருளை அதிகமாக பயன்படுத்துங்கள்.

mahalashmi water cash
- Advertisement -

நாம் பூஜைக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுமே தெய்வ அம்சம் நிறைந்தவை தான். அதிலும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கான தனித்துவமும் அதற்கான தனிப்பட்ட பலனும் உண்டு. அப்படியான பொருட்களில் நாம் ஒரு பொருளை அதிக அளவில் பயன்படுத்தும் போது நமக்கு தேவையான அனைத்தும் நம்மை தேடி வரும் என்று ஆன்மிகம் ஆணித்தரமாக நம்புகிறது. அது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே நம் முன்னோர்கள் ஒரு சில பொருட்களை வீட்டில் அதிகம் செலவழிக்க கூடாது என்று சொல்வார்கள். உதாரணமாக தண்ணீர் அதிகமாக செலவழியும் வீட்டில் பணம் கையில் தாங்காது என்பார்கள். அதே போல் ஒரு சில பொருட்கள் அதிகம் கையாளும் போது அந்த வீட்டு லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்கும் என்று சொல்வார்கள். அப்படியான ஒரு பொருளாக இந்த பதிவில் நாம் பச்சை கற்பூரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நினைத்தது அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வழி செய்யும் பச்சை கற்பூரம்:
கடவுளுக்காக நாம் படைக்கும் வாங்கும் பொருட்களிலே இந்த பச்சை கற்பூரத்திற்கென தனி பெரும் பெருமை உண்டு. இது மகாலட்சுமியின் அம்சம் பெருமாளின் அனுக்கிரகம் பெற்றது என பச்சை கற்பூரத்திற்கு அனைத்து தேவர்களின் தெய்வங்களின் ஆசீர்வாதமும் உண்டு. அதே நேரத்தில் இந்த பச்சைக் கற்பூரம் அனைத்து பரிகாரத்திற்கும் முக்கியமாக பயன்படக்கூடியது.

இப்படியான இந்த பச்சை கற்பூரத்தை நாம் வீட்டில் அதிக அளவில் பயன்படுத்தி வரும் போது நம்முடைய செல்வ நிலை பன்மடங்கு உயரும் என்றும், இதன் மணம் நம்மை சுற்றியும் நம் வீட்டை சுற்றியும் இருக்கும் போது நம்மிடமும் நம் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், அதிர்வலைகள் அனைத்தும் நீங்கி நல்லதொரு ஆற்றல் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த பச்சை கற்பூரத்தை வீட்டில் ஆங்காங்கே கைப்படாத இடத்தில் சின்ன சின்ன துண்டுகளாக வைத்து விடலாம். பூஜை அறையில் எப்போதும் பச்சைக் கற்பூரம் நிச்சயம் இருக்க வேண்டும். அதே போல் இந்த பச்சை கற்பூரத்தை குளியல் அறையில் கூட நம் கொஞ்சம் வைக்கலாம். பணம் வைத்து எடுக்கும் இடம், பீரோ போன்ற இடங்களில் எல்லாம் பச்சை கற்பூரம் கட்டாயமாக இருக்க வேண்டும். உங்கள் மணிபர்சில் கூட பச்சை கற்பூரத்தை ஒரு துண்டு பேப்பரில் சுற்றி போட்டு வைக்கலாம். இதில் பணத்தை ஈர்க்கக் கூடிய ஆற்றில் அதிகம் உண்டு.

அது மட்டும் இன்றி நீங்கள் தினமும் நெற்றிக்கு விபூதி சந்தனம் குங்குமம் என எதை வைப்பதாக இருந்தாலும், அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை தூள் செய்து போட்டு வைக்கும் பொழுது உங்கள் உடம்பில் உள்ள ஆராக்கள் தூண்டப்பட்டு நேர்மறை சிந்தனைகள் உருவாகி நல்ல முன்னேற்ற பாதையில் உங்களைக் கொண்டு செல்லும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் பஞ்சாய் பறந்து போக வாராகி அன்னைக்கு இந்த மலர் கொண்டு இந்த வார்த்தை சொல்லி அர்ச்சனை செய்தாலே போதும். கேட்டதை கேட்ட மாத்திரத்திலே கொடுக்கும் வாராகி அன்னை வழிபாடு.

இந்த பச்சைக் கற்பூரம் வாசனை இருக்கும் இடத்தில் மகாலட்சுமி நிச்சயமாக வாசம் செய்வார் என்பது ஆன்மீகத்தில் சொல்லப்படும் கருத்து. எனவே இனி நீங்கள் இந்த பச்சை கற்பூரத்தின் பயன்களை அறிந்து உங்கள் வீட்டில் அதிக அளவில் பயன்படுத்தி இதற்கான முழு பலனையும் பெற்று வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழலாம்.

- Advertisement -