கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் பஞ்சாய் பறந்து போக வாராகி அன்னைக்கு இந்த மலர் கொண்டு இந்த வார்த்தை சொல்லி அர்ச்சனை செய்தாலே போதும். கேட்டதை கேட்ட மாத்திரத்திலே கொடுக்கும் வாராகி அன்னை வழிபாடு.

- Advertisement -

இந்த கலியுகத்தில் நினைத்த உடனே நம் முன்பு தோன்றி நம் குறைகளை கேட்டு துயர் தீர்க்கும் அன்னையாய் விளங்குபவள் தான் இந்த வாராகி. பிள்ளையின் பசி அறிந்து பாலூட்டும் தாயைப் போல துன்ப காலத்தில் அவர் முன் நின்றாலே போதும். நம்முடைய துயர் அனைத்தையும் காணாமல் போக செய்திடும் சக்தி வாய்ந்த அன்னையுமாக திகழ்பவளும் இந்த அன்னை தான். இவர்களுக்கு பிடித்த ஒரு மலரை கொண்டு எப்படி வழிபாடு செய்து நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை குறித்து தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வாராகி அன்னை வழிபாடு:
நாம் ஒருவரை பார்க்க செல்கிறோம் என்றால் நமக்குப் பிடித்ததை வாங்கி செல்வதை விட, அவருக்கு பிடித்தமான பொருளை வாங்கி செல்லும் போது அவர்களுக்கு இன்னும் மன மகிழ்ச்சி அதிகரித்து சந்தோஷப்படுவார்கள். அதே போல் தான் இந்த வழிபாட்டிலும் நாம் இந்த தாயாருக்கு மிகவும் பிடித்த ஒரு மலராலே இவர்களுக்கு அர்ச்சனை செய்யும் போது மனம் மகிழ்ந்து நம் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றி தருவார்.

- Advertisement -

அப்படி இந்த தாயாருக்கு வைத்து வணங்க வேண்டிய மலர் ஒற்றை செம்பருத்தி பூ தான். பொதுவாகவே வாராகி அன்னைக்கு சிகப்பு நிறத்திலான மலர்கள் பிடிக்கும். அதிலும் இந்த ஒற்றை செம்பருத்தி மலர் இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த மலரை நாம் ஏழு, ஒன்பது, பதினொன்று என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டு இந்த வழிபாட்டை செய்யும் போது உங்கள் துயரங்கள் அனைத்தும் கலைந்து உங்களை கை தூக்கி விடுவார்.

இந்த வழிபாடை செய்வதற்கு பஞ்சமி, அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமை போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை. இந்த நாட்களில் ஏதேனும் ஒரு நாளை உங்கள் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் காலையில் குளித்து முடித்து உங்கள் பூஜை அறையில் சுத்தம் செய்து அனைத்து வேலைகளையும் முடித்த பின்பு, வாராகி அம்மன் படத்திற்கு ஏழு, ஒன்பது, பதினொன்று இப்படி ஒற்றை எண்ணிக்கையில் செம்பருத்தி மலர்களை மாலையாக தொடுத்து அணிவித்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் அன்னைக்கு நெய்வேத்தியமாக சக்கரை பொங்கல் செய்து வைத்து கொள்ளுங்கள். மேலும் இந்த மலர்களை இதே போல் எண்ணிக்கையில் ஒரு தட்டிலும் எடுத்து வைத்துக் கொண்டு அன்னைக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு தீபத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வைத்திருக்கும் மலர்களில் ஒவ்வொன்றாக எடுத்து வாராகி அம்மன் பாதத்தில் வைத்து ஓம் அதிசய காரிய சித்தி தாயே நமோ நமக என்ற இந்த மந்திரத்தை உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ சொல்லுங்கள். ஒவ்வொரு முறை இந்த மந்திரத்தை சொல்லும் போது ஒவ்வொரு மலராக எடுத்து வையுங்கள். இந்த செம்பருத்தி மலர்களே அப்படியே முழுதாக தான் வைக்க வேண்டும் பூக்களை பிரித்து வைக்க கூடாது. ஒருவேளை உங்களுக்கு இத்தனை செம்பருத்தி மலர்கள் கிடைக்காது இன்னும் பட்சத்தில் சிகப்பு செவ்வரளி பூக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமும், நகையும் வீட்டில் தங்கவில்லையா? அப்போ ஒரு முறை இதை செஞ்சு பாருங்க. உங்க வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுவதை உங்களால் உணர முடியும்.

இந்த வழிபாடு செய்யும் போது உங்கள் மனதில் ஏதாவது ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் வைத்து அதை நிறைவேற்றி தரும்படி அன்னையிடம் வேண்டி இந்த வழிபாட்டினை செய்து வாருங்கள். நீங்கள் நினைத்ததை விட விரைவாக உங்கள் வேண்டுதல் கைக் கூடும். சக்தி வாய்ந்த வாராகி தாயாரின் இந்த வழிபாட்டை செய்து உங்கள் துயர் அனைத்தையும் போக்கிக் கொண்டு துன்பமில்லா வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளுங்கள்.

- Advertisement -