திங்கட்கிழமை இதை மட்டும் செய்தால் தீராத நோய்கள் தீரும். எவ்வளவு பெரிய கொடிய நோயும், சொல்லாமல் கொள்ளாமல் உடம்பை விட்டு செல்லும்.

sivan
- Advertisement -

இன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் என்னவென்று நம்மில் பல பேருக்கு தெரியாது. எல்லோ வீட்டிலும் அரிசி மூட்டை இருக்கிறதோ இல்லையோ, மருந்து மூட்டை இருக்கிறது. அன்றாடம் மருந்து சாப்பிடாத நாளே கிடையாது. தொட்டதுக்கெல்லாம் மருந்து மருந்து. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீராத உடல் உபாதைகள் இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று அலசி ஆராய்ந்தால் அதற்கு பல காரணங்களை சொல்லலாம்.

ஆனால் அந்த காரணங்களை எல்லாம் சொல்லுவதன் மூலம் என்ன பலன். நோய் குணமாக போகின்றதா. ஆரோக்கியம் கிடைக்கப் போகிறதா. நிச்சயம் இல்லை. அந்த காலத்தில் இருந்த பழைய பழக்க வழக்கங்களை நாம் மறந்ததும், நாகரீகம் என்று சொல்லி நம் முன்னோர்கள் சொன்ன விஷயங்களை கடைப்பிடிக்காமல் விட்டதும் தான், இன்று ஆரோக்கியம் கெட்டுப் போனதற்கு முதல் காரணம். சரி, தீராத நோய் தீருவதற்கு ஆரோக்கியத்தை பெறுவதற்கு, மருந்து மாத்திரை சாப்பிடுவதை குறைப்பதற்கு, ஆன்மீகம் சார்ந்த ஒரு வழிபாடு நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

தீராத நோய் தீர சிவன் வழிபாடு:
வாரந்தோறும் மொத்தமாக 21 திங்கட்கிழமைகள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பெண்களாக இருந்தால் மாதவிடாய் வரக் கூடிய அந்த ஒரு வார திங்கள் கிழமை மட்டும் தவிர்த்து விடலாம். மற்றபடி வேறு எந்த காரணத்திற்காகவும் இந்த பரிகாரம் செய்வதை 21 வாரங்கள் தவற விடாதீர்கள். உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு சிவன் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த சிவன் கோவிலில் கட்டாயமாக கிணறு அல்லது குலம் இருக்க வேண்டும். சில சிவன் கோவில்கள் பக்கத்தில் ஆறு கூட இருக்கும் எப்படி இருந்தாலும் சரி, தண்ணீர் சார்ந்த இடம் சிவன் கோவிலில் இருக்க வேண்டும். அப்படி ஒரு கோவிலாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

திங்கட்கிழமை நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு விளக்கு போட்டு, நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு, மனதார நோய் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, மண்டை வெல்லம் 1/2 கிலோ அளவு வாங்கி அந்த கோவிலில் இருக்கும் கிணற்றில் அல்லது குளத்தில் போட்டு விட வேண்டும். அவ்வளவு தான் பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை இதை மட்டும் செய்தால், 6 ரூபாய், 6 லட்சம் ரூபாயாக சீக்கிரம் மாறி விடும். சீக்கிரம் பணக்காரராக சூட்சம பரிகாரம்.

21 திங்கட்கிழமை இந்த வெல்லத்தை மட்டும் சிவன் கோவில் தண்ணீரில் போட்டு வந்தால் உங்கள் உடல் உபாதைகள் படிப்படியாக குறையும். நோய்கள் தீரும். மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஆரோக்கியமாக வாழலாம். இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -