பண வரவு அதிகரிக்க உள்ளங்கை பரிகாரம்

sukiran cash
- Advertisement -

இன்று ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை ஓடி ஓடி உழைப்பதும் பாடுபடுவதும் எல்லாம் பணம் சம்பாதிக்க தான். இந்த பணம் என்ற ஒன்று நம் கையில் இல்லை என்றால் நம்மை யாரும் ஒரு மனிதராக மதிப்பதே கிடையாது. பணம் இல்லாத இடத்தில் நாம் பிணமாக கூட இருக்க முடியாது. அப்படி ஒரு காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆகையால் தான் பணத்தின் தேவை என்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. இந்த பணத்தை நாமும் சம்பாதிக்க வேண்டும் அதிகமாக சேமிக்க வேண்டும் நம் கையிலும் தாராளமாக பணம் புழங்க வேண்டும் இப்படி எல்லோரும் ஆசைப்படுவதுண்டு.

- Advertisement -

நியாயமான முறையில் உழைத்து சம்பாதிப்பது எனில் அது தவறு ஒன்றும் இல்லை. அதிலும் உழைப்பவர் எல்லாரிடமும் பணம் இருக்குமா என்றால் அது சந்தேகம் தான். அப்படியானால் பணம் நம்மிடம் தங்கவும் சில பரிகார முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அப்படியான பரிகார முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணம் கையில் தங்க பரிகாரம்

நம் கையில் பணம் எப்போதும் தாராளமாக இருக்க வேண்டும் எனில் செல்வத்தை அருளக்கூடிய தெய்வங்களின் கடாட்சம் நமக்கு நிச்சயமாக இருக்க வேண்டும். அதில் முக்கியமானவராக கருதப்படுவது சுக்கிர பகவான் அந்த சுக்கிர பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தாலே அவர் செல்வ நிலையில் மேலோங்கி இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

ஒருவேளை நம்முடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் பலம் இழந்து இருக்கிறார் என்றால் அப்பொழுது நிச்சயமாக நமக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும். அதை சமாளிக்க சுக்கிர பகவானின் அருள் பெற சில தாந்திரீக வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கிறது .அதில் ஒன்றை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.

இந்த பரிகாரத்திற்கு சந்தனாதி தைலம் அல்லது ரோஸ் வாட்டர் ரோஜா நறுமணம் கொண்ட பெர்ஃப்யூம் இதில் ஏதேனும் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் கையின் ஆற்காட் டி விரலுக்கு கீழே உள்ள பகுதி தான் சுக்கிர மேடு என்று சொல்வார்கள். அந்த இடத்தில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் நறுமண பொருட்களை கையில் லேசாக தொட்டு சிறிது நேரம் தேய்த்துக் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அப்போது ஓம் சுக்கிராய நமக என்ற இந்த மந்திரத்தை 11 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு அந்த பெர்ஃப்யூம் அல்லது தைலம் எதுவோ அதை உங்கள் கை முழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். இதை 21 நாட்கள் தொடர்ந்து செய்யும் போது சுக்கிரன்யுடைய அனுகிரகம் உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சொத்து பிரச்சனை தீர வழிபாடு

இதனால் பண வரவு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் பெருகும். இத்துடன் நம் கையில் பணம் இல்லை என்ற வார்த்தையை கூட நாம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அளவிற்கு ஏதோ ஒரு வகையில் பண வரவு வந்து கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -