சொத்து பிரச்சனை தீர வழிபாடு

pooviga sothu
- Advertisement -

நாம் நம்முடைய வாழ்க்கையில் கடினமாக உழைத்து பணத்தை சம்பாதித்து அதன் மூலம் சொத்துக்களை சேர்த்து வைப்போம். இந்த சொத்துக்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற சுயநலம் கருதி அல்லாமல் நம்முடைய வருங்கால சங்கதிகள் அதை அனுபவிக்க வேண்டும் என்ற பொது நலத்துடன் செய்வது தான் இந்த சொத்துக்களை சேர்ப்பது. அப்படி சேர்த்த சொத்துக்களை அடைவதற்கு ஒரு சிலருக்கு தடைகள் ஏற்படும். அந்த தடைகளை நீக்குவதற்குரிய வழிப்பாட்டு முறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அன்றைய காலத்தில் சொத்து பிரச்சனை என்பது ஏற்பட்டாலும் அதை பஞ்சாயத்து மூலமாக உடனடியாக தீர்த்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சொத்து பிரச்சனை என்று வந்தவுடன் கோர்ட்டு கேஸ் என்று பல வருடங்களாக இந்த பிரச்சினைகளை இழுத்துக் கொண்டே தான் செல்கிறோம். நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்க வேண்டும் என்று போராடுபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், யாருக்கும் சொத்து தரக்கூடாது தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நியாயமான சொத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் கண்டிப்பான முறையில் அவர்களின் சொத்துக்கள் அவர்கள் கைவசம் வந்து சேரும்.

- Advertisement -

சொத்துக்களை நாம் இரண்டு வகைகளில் பிரிக்கலாம். தந்தை வழி சொத்து, தாய் வழி சொத்து என்று இரண்டு வகைகளாக நாம் பிரிக்கலாம். தந்தை வழி சொத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு வழிபாடும் தாய் வழி சொத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மற்றொரு வழிப்பாடும் இருக்கிறது.

தந்தை வழி சொத்தில் இருக்கக்கூடிய தடைகளும் தாமதங்களும் பிரச்சனைகளும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஞாயிற்றுக் கிழமையில் முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று அவருக்கு செவ்வரளி பூக்களால் மாலை தொடுத்து அணிவித்து இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்துவர தந்தை வழியில் வரக்கூடிய சொத்து பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி விரைவிலேயே அவர்களின் சொத்து கைவசம் வரும்.

- Advertisement -

இதே போல் தாய் வழி சொத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்கள் கடற்கரை ஓரத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதன் மூலம் தாய் வழி சொத்துக்கள் விரைவிலேயே வந்து சேரும்.

பத்திர ரீதியாக பிரச்சனை ஏற்பட்டு அதன் மூலமாக சொத்துக்கள் கிடைக்கவில்லை என்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாட்டு முறை. அவர்கள் இருக்கும் ஊரில் இருக்கக்கூடிய பச்சை அம்மன் கோவிலுக்கு சென்று பத்திர நகலை அம்மனின் காலடியில் வைத்து மனதார வழிபட்டு அவளுக்கு பச்சை நிற ஆடையை சாற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பத்திரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டியை நீக்கும் பரிகாரம்

முழு மனதுடனும், நம்பிக்கையுடனும் இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விரைவிலேயே நீங்கி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சொத்து அவர்களை வந்து சேரும்.

- Advertisement -