வீட்டிலிருக்கும் தீய சக்தி, தரித்திரத்தை விரட்டி அடிக்க இந்த ஒரு தீபத்தை ஏற்றினாலே போதும். வீட்டில் செல்வ செழிப்பை பெருகி ஹோமம் செய்த பலனை தரக் கூடிய அற்புத தீபம்.

pancha kaviya vilakku
- Advertisement -

வீட்டில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது நம் முன்னோர்கள் முதற்கொண்டு வழி வழியாக செய்து வரும் வழிபாட்டு முறை. காலை மாலை தினமும் தீபம் ஏற்றி வழிபடும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்றும், எந்த துன்பம் வந்தாலும் அவர்களை ஒன்றும் செய்யாது என்றும் நம் வீட்டு பெரியவர்கள் சொல்ல கேள்வி பட்டிருப்போம் அப்படியான ஒரு தீபமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

மனிதனுக்கு பிரச்சனைகள் என்று சொன்னால் அது ஏராளம் உண்டு. ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அதை பார்த்து சந்தோஷப்படுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் மட்டும் நன்றாக இருக்கிறார்களே நாம் இப்படி துன்பப்படுகிறோமே என்ற எண்ணங்களும், பொறாமை பார்வைகளும் எப்பேர்ப்பட்டவர்களையும் ஒன்றும் இல்லாமல் சாய்த்து விடும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஒரு சில வீடுகளில் எப்போதும் சண்டை சச்சரவாகவே இருக்கும் பணவரவு என்பது ஒரு தடையாகவே இருக்கும் எவ்வளவு தான் பாடுபட்டு உழைத்தாலும் முன்னேற்றம் என்பதே இருக்காது. இது எல்லாம் அந்த வீட்டின் கிரக தோஷம் அல்லது வீட்டில் இருப்பவர்களுக்கான கண் திருஷ்டி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இது போல பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பொழுது வீட்டில் ஹோமம் செய்தால் சரியாக இருக்கும் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதையும் எல்லோராலும் செய்ய முடியாது ஏனென்றால் அதற்கு அதிக பணம் செலவழி கூடும். இப்படி செலவழித்து செய்யக் கூடிய ஒரு பெரிய ஹோமத்தை செலவே இல்லாமல் எல்லோராலும் செய்யக் கூடிய ஒரு தீபமுறையில் சரி செய்து விடலாம் அது தான் பஞ்ச கவ்ய தீபம்.

- Advertisement -

மஹாலஷ்மி அருள் பெற பஞ்ச கவ்ய தீபம்
பஞ்ச கவ்யவியம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை கொண்டு செய்யப்படும் விளக்கு. பசுவில் முப்பது முக்கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள். அது மட்டும் இன்றி மகாலட்சுமி தாயாரும் வாசம் செய்கிறார் . இவற்றில் இருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் இந்த ஒரு விளக்கு வீட்டில் எரிந்தால் போதும் அத்தனை தீய சக்திகளும் கெட்ட எண்ணங்களின் பார்வைகளும் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் பண தொடர்பான பிரச்சனைகள் இப்படி சொல்லிக் கொண்டே போக கூடிய அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அதற்கு தீர்வாக இந்த தீபத்தை தினமும் நம் வீட்டில் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றுவது சிறந்தது. முடியாதவர்கள் மாலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள்ளாக ஏற்றி விடுங்கள். இந்த தீபத்தை ஏற்றும் போது ஒரு சின்ன தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் வெற்றிலை அல்லது மாவிலை வெற்றிலை என்றாலே வெற்றியை கொடுக்கும் என்பது தான் பொருள். அதிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறார் அது மட்டும் இன்றி மாயிலை பற்றி சொல்லவே தேவையில்லை. அத்தனை தெய்வ சக்தி வாய்ந்த ஒரு இலை. இந்த தீபத்தை ஒரு பஞ்ச கவ்ய விளக்கை ஒன்று அல்லது ஐந்து விளக்கு வைத்து ஏற்றலாம். இந்த தீபத்தை நெய் ஊற்றி ஏற்றி விடுங்கள். இவை எரிந்து முடிந்தவுடன் அப்படியே விளக்கும் சேர்ந்து எரியும். எனவே இந்த தீபம் ஏற்றும் போது அருகில் இருக்கும் பொருட்களை எல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு ஏற்றுங்கள்.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க எளிமையான 3 பரிகாரங்கள்

பூஜை அறையில் வைத்து இந்த தீபத்தை ஏற்று வழிபட்ட பிறகு தீபத்தை அப்படியே எடுத்து வீட்டில் அனைத்து இடங்களிலும் சாம்பிராணி தூபம் காட்டுவது போல செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைத்து கெட்ட சக்திகளும் எதிர்மறை ஆற்றலும் மறைந்து விடும். இந்த தீபம் எரிந்த பிறகு சாம்பலை விபூதி போல நெற்றியில் பூசிக்கொள்ளலாம். இத்தகைய சக்தி வாய்ந்த இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதனால் நமக்கு இத்தனை நன்மைகள் கிடைக்கிறது. இனி வீட்டில் தினமும் ஏற்றும் தீபத்துடன் இந்த ஒரு தீபத்தையும் சேர்த்தே ஏற்றலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -