ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சூப்பரான பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்யணும்ன்னா இதை சேர்த்து தாங்க செய்யனும். இப்படி மட்டும் செஞ்சு பாருங்க எந்த ரெஸ்டாரண்ட்ல வாங்கினதுன்னு கேட்பாங்க. டேஸ்ட் அப்படி இருக்கும்.

panner butter masala
- Advertisement -

நாண், பன்னீர் போன்ற உணவு வகைகளை நாம் வீட்டில் எப்படித் தான் சமைத்தாலும் ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வருவதில்லை. இதற்கு காரணம் அதில் சேர்க்கும் ஒரு சில பொருட்களும் செய்முறையும் தான். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும் பன்னீர் பட்டர் மசாலாவை போல ஒரு சூப்பரான பன்னீர் பட்ட மசாலா தேவி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

பன்னீர் பட்டர் மசாலா செய்வதற்கு முதலில் மசாலா அரைக்க வேண்டும். அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, அரை இன்ச் இஞ்சி, 2 பச்சை மிளகாய் இதையெல்லாம் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இரண்டு பெரிய தக்காளியை நறுக்கி அதையும் சேர்த்த பிறகு பத்து முழு முந்திரியை சேர்த்த பின் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து இவையெல்லாம் குழைந்து வரும் வரை நன்றாக வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே ஆற விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தது ஒரு கப் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு அப்படியே ஊற விடுங்கள். இப்படி ஊற வைத்து செய்யும் போது தான் கடைகளில் கிடைப்பது போல பன்னீர் மிகவும் சாஃப்ட்டாக வெந்து கிடைக்கும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் பேன் வைத்து சூடானதும் நான்கு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை பட்டர் சேர்த்து செய்யும் போது தான் சுவை அப்படியே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இருக்கும். பட்டர் சூடாகி உருகிய பிறகு அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை இதில் சேர்த்த பிறகு ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை ஸ்பூன் வறுத்த சீரக பொடி, கால் டீஸ்பூன் உப்பு இவையெல்லாம் சேர்த்து ஒரு முறை கலந்து கொள்ளுங்கள்.

இந்த கிரேவிக்கு தண்ணீருக்கு பதிலாக வீட்டில் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து கொள்ளுங்கள். இதற்கு பதிலாக உங்களிடம் மில்க் க்ரீம் இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி பால் அல்லது கிரீம் சேர்த்து செய்தால் தான் அசல் ரெஸ்டாரன்ட் சுவையவில் கிரேவி கிடைக்கும். அதன் பிறகு ஊற வைத்த பன்னீரை இதில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து மறுபடியும் கால் கப் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த சமயத்திலும் பாலுக்கு பதிலாக மில்க் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு அரை ஸ்பூன் கஸ்தூரி மேத்தி இலைகளை நன்றாக கசக்கி சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு கால் டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து வெண்ணை பிரிந்து வந்தவுடன், கொத்த மல்லி தழைகளை தூவி கடைசியாக ஒரு ஸ்பூன் பட்டறை மேலே போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இன்ஸ்டன்ட் கோதுமை அடை செய்முறை: (Instant wheat rava Adai recipe in Tamil)

இந்த முறையில் செய்யும் போது ரெஸ்டாரன்ட் களில் கிடைக்கும் பன்னீர் பட்டர் மசாலா சுவையிலே இந்த கிரேவி இருக்கும். இப்படி நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -