கண் திருஷ்டி விலக அமாவாசை பரிகாரம்

amman1
- Advertisement -

நாளைய தினம் 8-04-2024 அன்று இந்த தமிழ் வருடத்தில் கடைசி அமாவாசை வருகின்றது. 8-04-2024 அன்று காலை 2:55 மணி முதல், 9-04-2024 ஆம் தேதி அதிகாலை 12:36 மணி வரை இந்த அமாவாசை திதி இருக்கின்றது. இந்த வருடத்தின் கடைசி அமாவாசை திதியில் கண் திருஷ்டி விலக, நம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே அமாவாசை திதி பிறந்து விடுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு நீங்கள் தூங்க செல்லும் போதே இந்த பரிகாரத்தை செய்து, உங்கள் நிலை வாசல் படியில் வைத்து விடுங்கள். அமாவாசை தொடங்கக்கூடிய அந்த குறிப்பிட்ட நேரத்தில் இருந்து, அமாவாசை முடியும் நேரம் வரை இந்த ஒரு பொருள் உங்கள் நிலை வாசலில் இருந்தால் உங்கள் வீட்டை பிடித்த கண்திருஷ்டி விலகும்.

- Advertisement -

பீடை விளக்கும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி எல்லாம் விலகி ஓடிவிடும். வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் விலகும். இதற்காக நாம் செய்ய வேண்டிய அந்த பரிகாரம் என்ன. நிலை வாசலில் வைக்கக்கூடிய அந்த பொருள் என்ன. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கண் திருஷ்டி விலக அமாவாசை பரிகாரம்

இந்த பதிவை படித்த பிறகு மஞ்சள் நிறத்தில் கரும்புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை கடைக்கு போய் வாங்கிட்டு வாங்க. அங்கு கூடையில் கொட்டி விற்பார்கள். உங்கள் கையாலேயே ஒரு எலுமிச்சம் பழத்தை தேர்ந்தெடுத்து அதற்கு உரிய தொகையை பேரம் பேசாமல், பணம் கொடுத்துவிட்டு வாங்கிட்டு வந்திருங்க.

- Advertisement -

வீட்டிற்கு வந்து இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்கவும்‌. வாங்கி வந்த எலுமிச்சம் பழத்தை கழுவி விட்டு, குலதெய்வத்தின் திருவுருவப்படத்தில், பாதத்தில், இந்த எலுமிச்சம் பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு வையுங்க. விளக்கு ஏற்றி குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை, அதாவது இன்று மாலையே இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து விட வேண்டும்.

விளக்கு ஏற்றி குலதெய்வத்திடம் மனதார பிரார்த்தனையை செய்து பூஜை எல்லாம் செய்து முடித்து விட்டீர்கள். இரவு உங்களுடைய வேலையை எல்லாம் முடித்து விடுங்கள். இன்று இரவே தூங்கச் செல்வதற்கு முன்பாக இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக அறுத்து ஒரு பக்கம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும் குங்குமம்.

- Advertisement -

ஒரு பக்கம் மஞ்சள் தடவி இதை உங்கள் நிலை வாசல் படியில் இரண்டு பக்கமும் வைத்து விட்டு தூங்கச் செல்லுங்கள். அவ்வளவுதான். அமாவாசை திதி நாளைய தினம் காலை 2:55க்கு பிறக்க இருப்பதால், அமாவாசை திதி தொடங்கும் போது இந்த எலுமிச்சம் பழம் உங்கள் நிலை வாசல் படியில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஞாயிற்றுக்கிழமை இரவே இந்த பரிகாரத்தைச் செய்யச் சொன்னது.

இந்த எலுமிச்சம் பழத்தை திங்கட்கிழமை முழுவதும் எடுக்கக் கூடாது. திங்கட்கிழமை இரவும் இதை எடுக்கக் கூடாது. செவ்வாய்க்கிழமை விடியும் போது நிலை வாசல் படியை கூட்டுவீர்கள் அல்லவா அப்போது இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து குப்பையில் போட்டு விடலாம். குலதெய்வத்தை வேண்டி திருஷ்டி நீங்க வேண்டும் என்பதற்காக உங்களுடைய வீட்டில் இந்த எலுமிச்சம் பழத்தை நிலை வாசலில் வச்சிருக்கீங்க.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ அருள் கிடைக்க பரிகாரம்

உங்களுடைய வேண்டுதலும் குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் ஒரு சேர கிடைத்து இந்த அமாவாசை நாளில் உங்களைப் பிடித்த கண் திருஷ்டியை எல்லாம் விளக்கக்கூடிய வேலையை இந்த ஒரு எலுமிச்சம்பழம் பார்த்துக் கொள்ளும். இந்த வருடத்தின் கடைசி அமாவாசை திதியில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது, இந்த வருடம் முழுவதும் கடந்து வந்த கண் திருஷ்டி எல்லாம் அந்த நாளிலேயே உங்களை விட்டு விலகி விடும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -