வீட்டில் தொடர்ந்து நல்ல காரியங்கள் நடக்க, வற்றாத செல்வவளம் பெருக, நாளை பங்குனி மாத அமாவாசை வழிபாட்டை யாரும் தவறவிடாதீர்கள்.

amavasai-kuladheivam
- Advertisement -

அமாவாசை தினம் என்றாலே அது குலதெய்வ வழிபாட்டிற்கும், முன்னோர்கள் வழிபாட்டிற்கும் உரிய நாளாக தான் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பங்குனி மாதம் வரக்கூடிய அமாவாசை அன்று, நம்முடைய முன்னோர்களையும் குல தெய்வத்தையும் வழிபாடு செய்வதன் மூலம், நம்முடைய வீட்டில் சுப காரிய தடை அகலும். வீட்டில் நல்லது நடக்க மாட்டேங்குது, ஒரு சுப காரியம் நடக்க வேண்டும் என்றால் அதற்கு படாத பாடு படவேண்டியதாக உள்ளது. வீட்டில் நிறைய நல்லது சந்தோசமாக நடக்க வேண்டும் என்றால் இந்த பங்குனி மாத அமாவாசை குலதெய்வ வழிபாடு நமக்கு கைமேல் பலனை கொடுக்கும்.

இந்த பங்குனி மாத அமாவாசையானது நாளைய தினம் அதாவது மார்ச் மாதம் 31.03.2022 ஆம் நாள் மதியம் 1:10 மணியிலிருந்து, வெள்ளிக்கிழமை மதியம் 12:45 வரை இருக்கின்றது. இரண்டு நாட்கள் சேர்ந்து அமாவாசை திதி வந்திருப்பதால் எந்த நாளில் வீட்டில் வழிபாடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். இந்த பங்குனி மாத அமாவாசையை நாளையதினம் வியாழக்கிழமை மதிய நேரத்தில் தான் நம்முடைய வீட்டில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இதோடு சேர்த்து இந்த அமாவாசை தினத்தில் ஆயில்ய நட்சத்திரகாரர்களும், மகம் நட்சத்திர காரர்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனதிற்குள் உங்களுடைய குலதெய்வ பெயரை உச்சரித்துக் கொண்டே இருங்கள். அனாவசியமாக யாருடைய பிரச்சினைக்கும் செல்ல வேண்டாம். வம்பு சண்டைக்கு வீன் வாக்கு வாதத்திற்கு போகவே கூடாது.

சரி, வழிபாட்டிற்கு வருவோம். நாளைய தினம் அமாவாசை என்பதால் இன்றைய தினமே உங்கள் வீட்டு பூஜை அறை, உங்கள் வீடு முழுவதையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். நாளை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தலைக்கு குளித்துவிட்டு, உங்களுடைய அமாவாசை விரதத்தை தொடங்க வேண்டும். வழக்கம்போல மதியம் உங்கள் முன்னோர்களுக்கு பிடித்த சமையலை சுத்தபத்தமாக செய்து, முன்னோர்களுக்கு படையலிட்டு இந்த வழிபாடு செய்ய வேண்டும். அதன் பின்புதான் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.

- Advertisement -

கூடவே உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து, அந்த குலதெய்வத்தை வீட்டிற்கு அழைத்து மனம் குளிர குடும்பத்தோடு வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக முன்னோர்களுக்கு நாளைய தினம் கட்டாயமாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.

வழிபாட்டை எல்லாம் முடித்து விட்டு சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய வீட்டில் சுப காரியங்களில் தடை உள்ளது. அந்த சுபகாரியங்களை தடையில்லாமல் நடத்தி தருவதற்கு முன்னோர்களின் துணையும், குலதெய்வத்தின் துணையும் தேவை என்று ஒரு ஐந்து நிமிடம் மனதார தியான நிலையில் குடும்பத்துடன் இறைவனிடம் வேண்டுதல் வைக்க வேண்டும்.

முடிந்தால் நாளையதினம் குலதெய்வ கோவிலுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு இருந்தால் குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நம் வீட்டிற்கு செல்வத்தை பெற்றுத் தரும். இதில் எதுவுமே எங்களால் செய்ய முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக நாளைய தினம் அமாவாசை தின வழிபாட்டையும், குல தெய்வம் வழிபாட்டையும் செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது.

உங்களால் எவ்வளவு முடியுமோ, குறைந்தது மூன்று பேருக்காவது வயிறு நிரம்ப சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அன்னதானம் செய்ய வேண்டும். நிறைவான அன்னதானம் ஆக இருக்கட்டும். பசியோடு இருக்கும் மூன்று ஏழைகளுக்கு இந்த தானத்தை செய்யுங்கள். உங்களுடைய தலைமுறை செழிக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -