11.04.2024 இன்று பங்குனி கிருத்திகை வழிபாடு

murugar1
- Advertisement -

வேலவனை கும்பிடாமல் அப்படி என்ன வேலை. தினம் தினம் நமக்கு எவ்வளவு வேலை பளு இருந்தாலும் சரி, வேலவனை வழிபாடு செய்ய மறக்கவே கூடாது. அதிலும் இன்று பங்குனி மாதத்தில் வந்திருக்கக்கூடிய கிருத்திகை நட்சத்திரம். வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. ஆகவே குரு பகவானின் அருள் ஆசியும் இந்த இடத்தில் நமக்கு நிறைவாக இருக்கும்.

வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்க, நடக்கவே நடக்காது என்ற நல்ல காரியங்கள் எல்லாம் நடக்க, நாம் இழந்ததை எல்லாம் திரும்பவும் மீட்டெடுக்க, இந்த நாள் ஒரு வரப்பிரசாதம். இந்த நாளில் குரு பகவானையும் முருகப்பெருமானையும் சேர்ந்து வழிபாடு செய்தால், உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். இன்றைய தினம் முருகப்பெருமான் வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே எப்படி செய்யலாம் ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

பங்குனி கிருத்திகை வழிபாடு

இன்று மாலை வீட்டில் வேல் வைத்திருப்பவர்கள் எல்லாம் அந்த வேலுக்கு அபிஷேகங்கள் செய்து, ஏதாவது ஒரு பிரசாதம் செய்து, பூஜை அறையில் தீபங்கள் ஏற்றி, கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை தவற விடாதீர்கள்.

இதோடு சேர்த்து உங்களுடைய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு தர எளிமையான பரிகாரம். ஒரு மஞ்சள் நிற துணி எடுத்துக்கோங்க. அதில் ஒரே ஒரு விரலி மஞ்சள், ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை முருகப்பெருமானின் பாதத்திற்கு கீழே வைத்து விடுங்கள்.

- Advertisement -

உங்களுடைய பிரச்சினைகள், ஏதோ ஒரு பிரச்சனை தீர்க்க முடியாத துன்பங்கள் துயரங்கள் இருக்கிறது. அந்த ஒரு வேண்டுதலை முருகனின் பாதத்தில் இறக்கி வையுங்கள். முடிவே இல்லாத அந்த பிரச்சனைக்கு முடிவு கொடு முருகா என்று வேண்டுதலை வைத்து, இந்த முடிச்சை கட்டி வைத்தால், கூடிய சீக்கிரத்தில் உங்கள் பிரச்சினையை அந்த முருகப்பெருமான் தீர்த்து வைப்பார்.

உங்களுடைய வேண்டுதல் நிறைவேறிய பிறகு இந்த முடிச்சை என்ன செய்வது. உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகப்பெருமாள் கோவிலில் உண்டியலில் இதை கொண்டு போய் சேர்த்து விடுங்கள் போதும். நிறைய பேருக்கு முருகப்பெருமானின் அறுபடை வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

- Advertisement -

ஆனால் ஏனோ தெரியாது. அந்த கோவிலுக்கு செல்லக்கூடிய பாக்கியம் மட்டும் நமக்கு கிடைக்காது. அப்படிப்பட்டவர்களும் இந்த முடிச்சை முருக பெருமானின் பாதத்தில் காணிக்கையாக முடிந்து வைத்து வேண்டுதல் வைக்கலாம். முருகா எப்படியாவது உன்னை காண்பதற்காக, என்னை அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல் என்று பிரார்த்தனை செய்தால் சீக்கிரமே அந்த திருத்தலங்களுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்யக்கூடிய பாக்கியம் கிடைக்கும். அப்போது மறக்காமல் இந்த முடிச்சை கொண்டு போய் ஏதாவது ஒரு முருகன் கோவிலில் உண்டியலில் செலுத்தி விடுங்கள்.

இது அல்லாமல் சொந்த வீடு வேண்டும், கடன் பிரச்சனை உள்ளது பண பிரச்சினை உள்ளது, என்பவர்கள் எல்லாம் இன்று மாலை முருகனுக்கு வெற்றிலைக்கு மேலே 6 விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா. இன்றைய தினம் பாலாடை அதாவது, சங்கடை என்று சொல்லுவார்கள் அதில் நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி முருகப் பெருமானை வழிபாடு செய்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரனின் அருள் ஆசியை பெற்றுத் தரும் விளக்கு

இப்படி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று மனமுருகி அந்த முருகனை கேளுங்களேன். அந்த வேலவன் உங்களுக்கான வரங்களை வாரி வாரி கொடுக்கக் கூடிய வேலையை செய்ய இன்றே தொடங்கி விடுவான். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. முருக பக்தர்கள், இன்றைய முருகர் வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -