இன்று மூன்றாம் பிறை தரிசனம். வேண்டுதல் உடனே பலிக்க பிறையை பார்க்கும் போது, இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும்.

pirai
- Advertisement -

வெள்ளிப் பிறை என்று சொல்லப்படும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை நாம் பார்ப்பதன் மூலம் வாழ்க்கையில் நமக்கு சந்தோஷம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. அமாவாசை தினத்திலிருந்து மூன்றாவது நாள் வரக்கூடிய சந்திர தரிசனத்தை தான், பிறை தரிசனம் என்று சொல்லுவோம். இந்த பிறை தரிசனத்தை செய்வதன்மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய பலன் என்ன. பிறை தரிசனத்தை முறையாக எப்படி செய்வது. பிறை தரிசனம் செய்யும்போது நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன. என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான சில தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

பிறைநிலவு படிப்படியாக எப்படி வளர்ந்து கொண்டே செல்கின்றதோ அதேபோல நம் வாழ்க்கையிலும் படிப்படியாக முன்னேற்றமும் வளர்ந்து கொண்டே செல்லும் என்பது ஐதீகம். இதற்காகத்தான் பிறை நிலவை தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள். நிலவு சரியாக மாலை 6.30 மணியிலிருந்து 7.00 மணிக்குள் சில நிமிடங்கள் மட்டுமே தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. சில நேரம் பிறை நிலவு தெளிவாக தெரியும். சில நேரம் பிறை நிலவு தெளிவாக தெரியாது. மேகங்களுக்கிடையே மறைந்திருக்கும். பரவாயில்லை, பிறை நிலவு தெரிந்தாலும் தெரியவில்லை என்றாலும் மூன்றாம் பிறை அன்று நீங்கள் இந்த வேண்டுதலை மாலை 6.30 மணிக்கு வெட்டவெளியில் செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு அல்லது பால்கனிக்கு அல்லது கொல்லைப்பக்கமோ, வாசல் பக்கமுமோ எந்த பக்கமாக இருந்தாலும் சரி, ஆகாயம் உங்களுக்கு தெரியும் படி பார்த்துக் கொள்ளுங்கள். பிறை நிலவை தரிசனம் செய்யும் போது உங்களுடைய கையில் வெள்ளி நகை அல்லது தங்க நகை வைத்துக்கொள்வது நல்லது. எதுவுமே இல்லை என்றால் ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டுமாவது கையில் வைத்துக்கொள்ளுங்கள். (கையில் நாணயம் வைத்திருந்தால் தரிசனத்தை முடித்துவிட்டு அந்த ரூபாய்க்கு கோவிலுக்கு கற்பூரம் வாங்கிக் கொடுத்து விடலாம். அல்லது உண்டியலில் போட்டு விடலாம்.)

இந்த மூன்றாம் பிறை நிலவை சந்திரமௌலீஸ்வரர் என்று சொல்லுவார்கள். இந்த பிறை நிலவைத் தன் தலையில் சூடிக் கொண்டிருக்கும் சிவபெருமானை நம் மனதார நினைத்து கொள்ள வேண்டும். கஷ்டங்கள் அனைத்தும் நம்மை கடந்து போக வேண்டும் என்று நினைத்து, நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு எது தேவையோ அதைமனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். வீடு வாங்க வேண்டும். நிலம் வாங்க வேண்டும். சொத்து சுகம் சேர்க்க வேண்டும். நோய் நொடி இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை தேவை. வாழ்க்கையில் உங்களுக்கு எதிலெல்லாம் முன்னேற்றம் தேவையோ அதையெல்லாம் நீங்கள் இந்த பிறை தரிசனத்தின் போது நினைத்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நம’ என்ற மந்திரத்தை கண்களை மூடி தியான நிலையில் உச்சரிக்கவேண்டும். ஒரு இடத்தில் அமர்ந்து பிறை நிலவை பார்த்தபடி உச்சரிக்க முடியும் என்றால் இன்னும் சிறப்பு. அமர முடியவில்லை என்றால் நின்று கொண்டு இரண்டு கைகளை ஏந்தி இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு பிறைநிலவு தரிசனத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். நிச்சயம் வாழ்க்கையில் நீங்கள் நம்ப முடியாத வளர்ச்சி உங்களை தேடி வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -