மாட்டுப் பொங்கல் அன்று வீட்டில் ஏற்ற வேண்டிய விளக்கு.

panja-kavya-vilakku
- Advertisement -

இன்று மாட்டுப்பொங்கல். பசு சம்பந்தமாக, காளைமாடு சம்பந்தமாக நாம் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அது நமக்கு பல மடங்கு பலனை தரும். அப்படி இருக்கும்போது, இப்படி ஒரு அற்புதம் வாய்ந்த இந்த விளக்கை இன்று நம்முடைய வீட்டில் ஏற்றவில்லை என்றால் இன்றைய மாட்டுப் பொங்கல் வழிபாடு எப்படி நிறைவாகும்.

கூடவே சேர்த்து உங்களுக்கு ஒரு மந்திரமும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள், இந்த விளக்கை ஏற்றி இந்த மந்திரத்தை சொல்லுபவர்கள். வீட்டில் சுபிட்சம் மட்டும் தான் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. அது என்ன விளக்கு அதை வீட்டில் எப்படி ஏற்றனும், உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த விரிவான தகவல் இதோ உங்களுக்காக.

- Advertisement -

சுபிட்சம் தரும் விளக்கு

இன்று நாம் வீட்டில் ஏற்ற வேண்டிய விளக்கு பஞ்சகவ்ய விளக்கு. இது முழுக்க முழுக்க பசுமாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களில் இருந்து செய்யப்பட்ட விளக்கு. பல பேருக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இந்த விளக்கானது பசுவில் இருந்து எடுக்கப்பட்ட பால், நெய், கோமியம், தயிர், சாணம், இந்த ஐந்து பொருட்களை சேர்த்து செய்யக்கூடிய விளக்கு.

பூஜை பொருட்கள் விற்கும் கடை, நாட்டு மருந்து கடைகளில் இந்த விளக்கு கிடைக்கும். இன்று புதுசாக இந்த விளக்கை வாங்கலாம் தவறு கிடையாது. இன்று மாலை பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி, கோமாதாவை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். சின்ன மண் அகல் விளக்குக்கு மேலே இந்த விளக்கை வைத்து நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி விடுங்கள். இந்த விளக்கு மற்ற விளக்கு போல கிடையாது.

- Advertisement -

அகல் விளக்கு போல தான் இருக்கும். இந்த விளக்கும் முழுவதும் அப்படியே நெருப்பில் எரிந்து பஸ்பமாகி இதிலிருந்து புகை வரும். இந்த புகையை கொண்டு போய் உங்கள் வீடு முழுவதும் காண்பியுங்கள். வீட்டுக்குள் இருக்கும் தரித்திரம் பீடை கெட்டது எல்லாம் வீட்டை விட்டுவிட்டு நீங்கும். வீடு முழுவதும் மகாலட்சுமியின் கடாட்சம் நிறைவாக இருக்கும். அதுவும் இந்த மாட்டுப்பொங்கல் அன்று இந்த விளக்கு ஏற்றுவது ரொம்ப ரொம்ப விசேஷ பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே யாரும் இத தவற விடாதீங்க.

இந்த விளக்கு வாங்க நிறைய செலவு ஆகாது. குறைந்த விலையிலேயே கிடைக்கக்கூடிய பொருள்தான் இது பசுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள். இப்படி இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்கும் போது ‘ஓம் கோமாத்ரே நமஹ’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே அந்த புகையை வீடு முழுவதும் காமியுங்கள் உங்கள் கஷ்டம் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்படும்.

இதையும் படிக்கலாமே: மாட்டுப் பொங்கல் அன்று, நந்தி பகவான் வழிபாடு

இன்று இந்த வழிபாட்டை உங்களுடைய வீட்டில் மேற்கொண்டால் பல ஆயிரம் முறை இந்த விளக்கை வீட்டில் ஏற்றிய புண்ணியத்தை ஒரு சேர பெற முடியும். ஆகவே இந்த நாளை யாரும் தவற விடாதீங்க. இன்று மாலை நேரத்திற்கு 6 மணிக்கு பிறகு, இரவு 8 மணி அல்லது 9 மணிக்குள்ளாகவாவது இந்த விளக்கை ஏற்றலாம் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -