இந்த மந்திரத்தை வாழ்க்கையில் தினமும் 1 முறை உச்சரித்தாலும் 8 வகையான செல்வங்களையும், புத்திர பாக்கியம், பூரண ஆயுள், துன்பமில்லா வாழ்வும் விரைவில் அடைந்துவிடலாம் தெரியுமா?

vinayagar
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு மனிதன் அதிகம் ஆசைப்படுவது ஒரு சில விஷயங்களை தான். அதில் புத்திர பாக்கியம், துன்பம் இல்லாத வாழ்வு, நோய் நொடி இல்லாத ஆரோக்கியம், தீர்காயுள், எதையும் எதிர் கொள்ளக் கூடிய தைரியம், குடும்ப ஒற்றுமை ஆகியவை முதன்மையாக விளங்குகின்றது. இவைகள் இருக்கப் பெற்றாலே, ஒரு மனிதன் பூரணத்துவத்தை அடைந்து விடுகிறான். இந்த ஒரு மந்திரத்தை தினமும் காலையில் எழுந்தவுடன் உச்சரித்தால் விநாயகருடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதனால் மேற்கூறிய அத்தனை விஷயங்களையும் விரைவில் அடைந்து விடலாம் என்கிறது விநாயக புராணம். ஆதிசங்கரர் அருளிய இந்த மஹா கணேச பஞ்ச ரத்தின ஸ்லோகம் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்லோகம் 1:
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்

- Advertisement -

ஸ்லோகம் 2:
நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்

ஸ்லோகம் 3:
ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்

- Advertisement -

ஸ்லோகம் 4:
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

ஸ்லோகம் 5:
நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்

ஸ்லோகம் 6:
மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.

ஆறு ஸ்லோகங்கள் அடங்கிய இந்த பாடலை முழுமனதோடு, மனதை தியான நிலையில் அமைதிப்படுத்தி, ஒருநிலையில் கொண்டு வந்து, முழு பக்தியுடனும், தீவிரமான நம்பிக்கையுடனும் விநாயகரை நினைத்து காலையில் எழுந்ததும் ஒருமுறை உச்சரித்தாலும் எல்லா வகையான செல்வங்களையும் அடைந்து விடலாம். தீதில்லா நல்ல ஒரு வாழ்க்கை அமைய பெற இத்தகைய இந்த மந்திரத்தை ஒருமுறை போற்றி தினமும் உச்சரிப்போம், பலன் பெறுவோம்.

- Advertisement -