இந்த ஒரு பொருளை உங்கள் வீட்டின் வாசலில் மாட்டினால் பெரும் மாற்றங்கள் நிகழும் – வீட்டில் எத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்யும் சக்தி இதற்க்கு உண்டு.

panjalogam vasakaal
- Advertisement -

வீடு என்றால் அதில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருக்க தான் செய்யும். ஆனால் எப்போதும் வீட்டில் சண்டை மட்டுமே இருக்கிறது, மனநிம்மதி என்பது துளி கூட இல்லை, வரவுக்கு மேல் செலவு இருக்கிறது, இப்படி ஏதோவது ஒரு கஷ்டம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் குறைவாக உள்ளது என்றே அர்த்தம். அந்த நேர்மறை ஆற்றலை வீட்டிற்கு எப்படி பெருகச்செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

வீட்டின் நுழைவு வாயில் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அந்த நுழைவு வாயில் சரியாக இல்லை என்றால் வீட்டில் நிச்சயம் பல பிரச்சனைகள் வரக்கூடும். அந்த நுழைவு வாயிலில் நாம் சில விடயங்களை செய்வதன் மூலம் நேர்மறை ஆற்றல்களை கிரகிக்க முடியும்.

- Advertisement -

நேர்மறை ஆற்றலை அதிகளவில் கிரகிக்கக் கூடிய ஆற்றல் பஞ்சலோகத்திற்கு உண்டு. இந்த பஞ்சலோகம் என்பது பொதுவாக பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். இதை வாங்கும் முன்பு உண்மையில் இது பஞ்சலோகம் தானா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும்.

Dollar material

இந்த பஞ்சலோகத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டின் வாசலில் ஒட்டிவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் நீங்கள் பல மாறுதல்களை படிப்படியாக உணர ஆரமிப்பீர்கள். எதிர்மறை ஆற்றல் படிப்படியாக குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்க துவங்கும். ஒருகட்டத்தில் எதிர்மறை ஆற்றல்கள் முழுவதுமாக நீங்கி வீட்டில் நேர்மறை ஆற்றல் வியாபித்து, அந்த வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் பல நல்ல பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -

Dollar material

ஒருவேளை உங்களுக்கு பஞ்சலோகம் கிடைக்கவில்லை என்றால், இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் ஆகிய ஐந்து பொருட்களை சிறிய அளவில் எடுத்துக்கொண்டு அதை வாசலில் ஒட்டி வைக்கலாம். இது தவிர வீட்டு வாசற்படியில் வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் குங்குமம் இட்டு விளக்கேற்ற வேண்டும்.

அதேபோல செம்பினால் ஆன ஓம் என்ற பிரணவ மந்திரத்தை கதவில் ஒட்டி வைப்பதன் மூலமும் வீட்டில் நற்பலன்கள் அதிகரிக்கும். முடிந்தால் வாசலில் வெள்ளருக்கன் பிள்ளையாரை வையுங்கள். அதன் மூலமும் நல்ல பலன்கள் வீட்டிற்கு வந்தடையும்.

- Advertisement -