வீட்டில் வாஸ்து தோஷம் நீங்க, தொழிலில் லாபம் கிடைக்க இந்த சிறப்பான பரிகாரத்தை முறையாக செய்து பலன் பெறுங்கள்

poojai
- Advertisement -

புதிய வீடு கட்டும்பொழுது வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டுவதுதான் அந்த வீட்டிற்கும், வீட்டில் வாழ போகிறவர்களுக்கும் நன்மையை அளிக்கும். நமது சொந்த வீடாக இருந்தால் இவ்வாறு வாஸ்து பார்த்து அனைத்தையும் முறையாக செய்திடலாம். ஆனால் வாடகை வீட்டில் வசிக்கிறோம் என்றால் அங்கிருக்கும் வாஸ்து பிரச்சனைகளை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும். இவ்வாறு பிரச்சனை இருக்கும் வீட்டில் வசித்து வருபவர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் ஏதேனும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இவ்வாறான வாஸ்து பிரச்சனைகள் நீங்கி தொழிலிலும் லாபம் கிடைக்க வீட்டில் இருக்கும் மஞ்சளை வைத்து இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நல்ல பலனை பெற முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

புதியதாக வீடு மாறி வந்திருக்கும் பொழுது அந்த வீட்டிலிருக்கும் வாஸ்து குறைபாட்டினால் கணவன் மனைவி சண்டை, வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை, தொழிலில் நஷ்டம் இவ்வாறு மனதிற்கு நிம்மதி இல்லாத பல குழப்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து விடுபட மங்கலப் பொருளான மஞ்சளை வைத்து பரிகாரம் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனை நீங்கி நல்ல பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

மஞ்சளின் மகிமைகள்:
மஞ்சள் என்றாலே மங்களம் என்றுதான் பொருள்படும். எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்னரும் முதலில் மஞ்சள் குங்குமம் வைத்து தான் தொடங்குவார்கள். பரிகார பூஜைகள், சுபநிகழ்ச்சிகள், கடவுளுக்கான பூஜைகள் இவை அனைத்திலும் மஞ்சள் குங்குமத்திற்கு தான் முதலிடம இருக்கும்.

அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மஞ்சள், குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. மஞ்சள் வைத்து துவங்கும் எந்த ஒரு காரியமும் நன்மையில் தான் முடியும்.

- Advertisement -

வாஸ்து பிரச்சனை தீர மஞ்சள் பரிகாரம்:
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தினத்தில் இறைவனுக்கு பூஜை செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் எப்போதும்போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்கும் பொழுது அதனுள் சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு சிவப்பு நிற துணியில் 5 விரலி மஞ்சளை எடுத்து மூட்டையாக கட்டி பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

அதன் பிறகு கற்பூரம் ஏற்றி பூஜை செய்துவிட்டு கடவுளின் முன் அமர்ந்து பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரின் மீது இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்து மூன்று முறை வாஸ்து காயத்திரி மந்திரத்தை உச்சரித்து உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் வைத்து கட்டிய முட்டையை வீட்டில் எவர் கண்ணிலும் படாத இடத்தில் வைத்துவிட வேண்டும். இவ்வாறு வெள்ளிக்கிழமை துவங்கிய பூஜையை தொடர்ந்து 15 வாரங்கள் செய்து வந்தால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

வேலை மற்றும் தொழில் செய்யும் இடத்தில் மஞ்சள் பரிகாரம்:
ஒரு மஞ்சள் துணியில் மூன்று விரலி மஞ்சள் மற்றும் கோமதி சக்கரம் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு கருப்பு கயிறு பயன்படுத்தி மூட்டையாக கட்டி அதனை நீங்கள் வேலை செய்யும் இடமாக இருந்தால் உங்கள் மேஜையிலும், தொழில் செய்யும் இடமாக இருந்தால் சுவாமி படங்கள் இருக்கும் இடத்திலும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகள் அழிந்து உங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும். லாபம் பெருகி கொண்டே இருக்கும்.

- Advertisement -