வீட்டில் பணம் சேர வாஸ்து

money vasthu
- Advertisement -

எல்லா காலத்திலும் பணம் நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாகும். பணம் இல்லாமல் ஒரு நாள் கூட வாழ்வது என்பது முடியாத காரியம். பணத்தை வைத்து தான் ஒரு மனிதனின் தரத்தையே எடை போடுகிறார்கள். அப்படியான காலக்கட்டத்தில் தான் இப்பொழுது நாம் வாழ்கிறோம். இதனால் தான் நம் முன்னோர்கள் அன்றே பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை கூட சொல்ல வைத்திருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு பணம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த பணம் நம்மிடம் வந்து சேர்வதற்கும் தங்குவதற்கும் நாம் செய்யும் ஒரு சில செயல்கள் முக்கிய பங்காக கருதப்படுகிறது. அதுவும் வீட்டில் நாம் செய்யும் ஒரு சில தவறுகளால் பணம் நம்மை வந்து அடையாது என்று வாஸ்து சாஸ்திரங்களும் சொல்கிறது. அது என்ன தவறு எப்படி அதை சரி செய்வது என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணம் சேர வாஸ்து

பணம் சேர நாம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்களில் முக்கியமான ஒன்று படுக்கையறை வாஸ்து தான். இந்த படுக்கையறை நாம் நிம்மதியாக உறங்கி எழும் ஒரு இடமாகும். அந்த இடத்தில் எப்பொழுதும் சூரிய ஒளியும் காற்றும் உள்ளே வந்து செல்லும் படி அமைய வேண்டும். ஆகையால் ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது படுக்கையறை ஜன்னல்களை திறந்து காற்று, வெளிச்சம் உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.

அடுத்து வீட்டில் மாட்டியிருக்கும் கடிகாரம் எந்த சூழ்நிலையில் போடாமல் நின்று விடக் கூடாது. அப்படி நின்றால் உடனே அதை சரி செய்ய வேண்டும். அது முடியாத பட்சத்தில் வேறு மாற்றி விடுங்கள். கடிகாரமானது வாஸ்துவில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கடிகாரம் போடாமல் நின்றாலோ அல்லது பின்னோக்கி ஓடினாலும் பணத்தேக்கம் நிச்சயம் ஏற்படும்.

- Advertisement -

அதே போல் வீட்டின் தென்கிழக்கு பகுதியில் நீரூற்றுத் தொடர்பானவற்றை வைக்க வேண்டும். இப்பொழுது கடைகளில் மெவுண்டன் அல்லது நீர் சார்ந்த அலங்கார பொருட்கள் பெரும் அளவில் விற்கப்படுகிறது. அதில் ஒன்றை வாங்கி அந்த இடத்தில் வைக்கும் பொழுது பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். என்று சொல்லப்படுகிறது.

அதே போல் பழைய இரும்பு பொருட்களை வீட்டில் தேக்கி வைக்கக் கூடாது. பழைய இரும்பில் சனியின் வாசம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இதை அப்புறப்படுத்துவது முக்கியமானது. அது மட்டும் இன்றி மொட்டை மாடியில் பலரும் தேவையற்ற பழைய பொருட்கள், இரும்பு சார்ந்தவற்றை வைத்திருப்பார்கள். அதையும் உடனே அப்புறப்படுத்தி விடுங்கள். மொட்டை மாடி எப்பொழுதும் சுத்தமாகவும் நீட்டாகவும் இருக்க வேண்டும். இது பணவரவை அதிகரிக்க கூடியதாக அமையும்.

- Advertisement -

அதே போல் வீட்டில் இருந்து வெளியேறும் அழுக்கு நீர் வடக்கு திசை நோக்கி செல்வது போல அமைக்க வேண்டும். இந்த அமைப்பில் வீடு கட்டினால் அங்கு பணவரவு அதிகரித்து குடும்பத்தின் மகிழ்ச்சி கொடுக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இத்துடன் பலரும் வீட்டில் டைனிங் டேபிள் பயன்படுத்துகிறார்கள். அதை மரத்திலால் ஆனதாக பயன்படுத்துவது மிகவும் நல்லது. மரம் சுக்கிரனுக்குரியதாக கருதப்படுகிறது.

அத்துடன் டைனிங் டேபிள் இருக்கும் திசைக்கு எதிரில் ஒரு கண்ணாடியை மாட்டி வைப்பது சிறந்தது. டைனிங் டேபிள் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்க வேண்டும். அப்படி இருக்கும் வீட்டில் வறுமை ஏற்படாது. அதே போல் சமையலறையில் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை படங்கள் பதித்த டைல்ஸ் பதிப்பதும் வீட்டில் பணத்தையும் உணவு தட்டுப்பாடையும் வராமல் தடுக்கும்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம்

வாஸ்து சாஸ்திரம் சொல்லும் இந்த முறைகளை சரியான முறையில் கடைபிடிக்கும் போது ஒரு ரூபாய் கூட கையில் இல்லாமல் துன்பத்தில் இருப்பவர்களுக்கு கூட மேலும் மேலும் பணம் வருவதற்கான வாய்ப்புகள் பெருகும். இதனால் பொருளாதாரத்தில் நல்ல நிலையை அடைவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறைகளை தாராளமாக பின்பற்றலாம்.

- Advertisement -