வாஸ்து பிரச்சினையை சரி செய்யும் எளிமையான பரிகாரம்

vinayagar vasthu
- Advertisement -

இன்று இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் வாஸ்து பிரச்சனை கொஞ்சம் பெரிய அளவில் பூதாகரமாக பார்க்கப்படுகிறது என்றே சொல்லலாம். ஒரு வீட்டில் வாஸ்து சரியாக அமையா விட்டால் அந்த வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கும். வீட்டில் உள்ளவருக்கு உடல் நலக் கோளாறு, வருமானத்தடை போன்ற ஏதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கும்.

இவை அனைத்திலும் விட நாம் தெய்வ வழிபாட்டை கூட சரிவர செய்ய முடியாது. அந்த அளவிற்கு வாஸ்து பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போதைய சூழ்நிலையில் வீடு கிடைப்பதே பெரியதாக இருக்கும் நிலையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எல்லாம் இந்த வாஸ்து பிரச்சனையை பற்றி யோசிக்கக் கூட முடியாது. சொந்த வீட்டுகாரர்களுக்கும் இந்த பிரச்சினை உண்டு தான். புதிதாக கட்டிய வீட்டில் ஏதேனும் வாஸ்து பிரச்சனை என்றால் என்ன செய்வது?.

- Advertisement -

இப்படியான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய எளிய ஒரு பரிகார முறையைத் தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த பதிவில் உள்ள பரிகாரங்கள் செய்தால் எளிமையான முறையில் வாஸ்து பாதிப்புகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

வாஸ்து பிரச்சனை சரி செய்ய எளிய பரிகாரம்

இந்தப் பதிவில் வாஸ்து பிரச்சனைக்காக இரண்டு பரிகார முறைகளை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இரண்டும் மிக மிக எளிமையானது தான் எல்லோராலும் செய்யக் கூடியது தான். முதல் பரிகாரமானது வீட்டின் தென்மேற்கு திசையில் வடகிழக்கு திசையை பார்த்தவாறு வயிறு பெருத்த பொம்மையை வாங்கி வைக்க வேண்டும். வயிறு பெருத்த குபேர பொம்மை, விநாயகர் அல்லது மகாராஜா போன்ற தோற்றமுடைய பொம்மை இவற்றை வாங்கி வைக்கலாம்.

- Advertisement -

பெரும்பாலான கோவில்களில் தென்மேற்கு திசையில் நிருதி மூலை அல்லது கன்னி மூலை என்று சொல்வார்கள். இந்த மூலையில் விநாயகரை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். கோவில்களில் ஏற்படும் வாஸ்து தோஷத்தை நீக்கக் கூடிய இந்த முறையை தான் நாம் வீட்டிலும் பின்பற்றுகிறோம். இந்த ஒரு பரிகாரம் வாஸ்து பிரச்சனையை பெருமளவு சரி செய்யக் கூடியது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக இன்றைய சூழ்நிலையில் எல்லோர் வீட்டிலும் கேன் வாட்டர் தான் பயன்படுத்துகிறோம். இந்த பரிகாரத்திற்கும் ஒரு கேன் வாட்டர் புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கல் உப்பை வாங்கி போட்டு விடுங்கள். அதன் பிறகு அதன் மூடியில் சின்ன சின்ன துளைகள் போட்டு விடுங்கள். அதாவது உப்பு கலந்த பின்பு அந்த தண்ணீர் நீராவியாக வெளிவர வேண்டும் இதுதான் முறை.

- Advertisement -

இதை வீட்டின் வடகிழக்கு மூலையில் அதாவது ஈசானி மூலையில் கொண்டு வைத்து விடுங்கள். இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒரு முறை வெளியில் கொட்டி விட்டு புதிதாக தண்ணீர் ஊற்றி இதே போல உப்பையும் கொட்டி வைத்து விட்டால் இதுவும் வாஸ்து சம்பந்தமான பிரச்சனைகளை பெருமளவு தடுக்கக் கூடிய ஒன்று.

இதையும் படிக்கலாமே: வாஸ்து குறைபாடு நீங்க உதவும் தீபம்.

இன்றைய சூழ்நிலையில் வீடு கட்டுவதும், வீடு மாறுவதும் பெரிய விஷயமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் இது போன்ற பிரச்சனைகளுக்காக நம்மால் அடிக்கடி மாற்றிக் கொண்டு அல்லது சரி செய்து கொண்டு இருக்க முடியாது. அந்த வகையில் வாஸ்து சாஸ்திரங்கள் கொடுத்துள்ள இந்த எளிமையான பரிகாரங்களை செய்து நம் வாழ்க்கையில் தொடரிருக்கும் பெரும் பிரச்சனைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -