இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா 40 பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.
இந்த போட்டியில் இளம் அதிரடி வீரரான பண்ட் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி வீசிய பந்தில் ஒற்றை கையால் சிக்ஸ் அடித்தார். பந்து பேட்டில் பட்டதும் ஒரு கை நழுவியது. இருப்பினும் ஒருகையால் பேட்டை சுழற்ற பந்து பறந்தது. இதனை எதிர்புறம் இருந்த தோனி ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தார். இதோ அந்த வீடியோ இணைப்பு :
— MS (@premchoprafan) February 8, 2019
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும்.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்