செதுக்கி வச்ச பளிங்கு சிலை போல ஜொலிக்க உங்களுக்கும் ஆசையா? அப்போ இந்த குறிப்பு உங்களுக்காக மட்டும் தான்.

face9
- Advertisement -

அப்படியே செதுக்கி வச்ச பளிங்கு கல் சிலை போல பளபளன்னு ஜொலிக்க உங்களுக்கும் ஆசை இருக்கா. அப்ப இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். பொதுவாகவே பப்பாளி பழத்திற்கு சருமத்தை வெள்ளையாக்க கூடிய சக்தி அதிகமாக உள்ளது. இந்த பப்பாளி பழத்தோடு இன்னும் ஒரு பொருளை சேர்த்து ஒரு ஜெல் தயார் செய்யப் போகின்றோம். இந்த ஜெல்லை தினம் தோறும் முகத்திற்கு கைகளுக்கு கால்களுக்கு போட்டு வந்தால் உங்களுடைய சருமம் அப்படியே பளபளன்னு ஜொலிக்க ஆரம்பித்து விடும். சொன்னா நிச்சயம் நம்ப மாட்டீங்க. சுலபமான இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். சருமத்தில் வரக்கூடிய வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் பப்பாளிப்பழம். இரண்டாவது பொருள் வெந்தயம். எல்லோர் வீட்டு சமையல் அறையிலும் இந்த வெந்தயம் இருக்கும் அல்லவா. ஆக இதற்கு பெரியதாக செலவும் ஆகாது. ஒரு சிறிய கிண்ணத்தில் 3 ஸ்பூன் வெந்தயத்தை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 4 லிருந்து 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பப்பாளி பழத்தில் ஒரு சிறிய துண்டை எடுத்து தோல் சீவிக் கொள்ள வேண்டும். அளவு என்று பார்த்தால் ஒரு 100 கிராம் அளவு பப்பாளி பழ துண்டு இருந்தால் கூட போதும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து, ஊற வைத்த வெந்தயத்தை தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் போட்டுக்கோங்க. கூடவே தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டிய பப்பாளி பழத்தை போட்டு ஸ்மூத் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விழுதை ஒரு ஃபில்டரில் வடிகட்ட வேண்டும். வடிகட்டினால் நமக்கு கொழகொழவென ஒரு ஜெல் கிடைத்திருக்கும் அல்லவா. அதோடு 1 டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல்லை ஊற்றி நன்றாக அடித்து கலக்கினால் பேஸ் ஜெல் தயார். இந்த ஜெல்லை ஒரு பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தால் ஏழு நாட்கள் வரை கெட்டுப்போகாது. இந்த ஜெல்லை எப்படி பயன்படுத்துவது.

- Advertisement -

இரவு தூங்க செல்வதற்கு முன்பாக இந்த ஜெல்லை விரலால் தொட்டு முகத்தில் ஆங்காங்கே புள்ளிகள் போல வைத்து நன்றாக மசாஜ் செய்து தேய்த்து விடுங்கள். அதேபோல கை கால்களில் கூட இந்த ஜெல்லை தேய்த்து விட்டால் அப்படியே சருமம் உறிஞ்சிக் கொள்ளும். ஐந்து நிமிடத்தில் ஜெல் காணாமல் போய்விடும். அப்படியே தூங்க செல்லலாம். மறுநாள் காலை எப்போதும் போல முகம் கழுவி குளித்துக் கொள்ளலாம். இதே போல தினமும் இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் உங்களுடைய சருமத்தில் இருக்கக்கூடிய கருமை நிறம் படிப்படியாக குறையத் தொடங்கும்.

வாயை சுற்றி கருவளையம். கண்ணுக்கு கீழே கருவளையம் கைமுட்டியில் கருப்பு போன்ற பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் வீட்டில் இருப்பவர்களாக இருந்தால் பகல் நேரத்திலும் இந்த ஜல்லை அப்ளை செய்து கொள்ளலாம் தவறு கிடையாது. ஒரு சில நாட்களில் உங்களுடைய சருமம் அப்படியே பளபளனு ஜொலிப்பதை காணலாம். தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள் வித்தியாசம் தெரிவதற்கு 30 நாட்கள் நிச்சயமாக எடுக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க அழகுக்கு அழகு சேர்க்க இது ஒரு சுலபமான இயற்கையான குறிப்பு.

- Advertisement -