மனதில் நினைத்த வரை கரம்பிடிக்க இந்த சக்திவாய்ந்த பரிகாரத்தை முறையாக செய்து கொண்டால் போதும்

marriage
- Advertisement -

ஆண், பெண் இருவரும் இன்றைய சமூகத்தில் சம உரிமையுடன் பழகிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் மிகவும் தெளிவாக தங்கள் முடிவை எடுக்கின்றனர். அவ்வாறு ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு முழு உரிமை இருக்கிறது. அப்படி ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் மனதார விரும்பி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தால் அதனை பெற்றோர்களிடம் சொல்லி பெரியவர்களின் விருப்பத்துடன் மணமுடிக்க வேண்டும். ஆனால் இதனை பெற்றோர்களிடம் சொல்வதற்கு சிலர் தயக்கம் கொள்கின்றனர். வீட்டில் உள்ளவர்கள் நமது இந்த விருப்பத்தை ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்களா? என்ற பயம் அவர்களின் மனதில் இருக்கிறது. இவ்வாறான பயத்தை அடியுடன் விரட்டவும், நினைத்தவருடன் திருமணம் நடைபெறவும் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் நல்ல பலன் கிடைத்து விடும். இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் என்ற பதிவின் மூலம் தெரிந்து கொள்ளு போகின்றோம்.

husbund-and-wife3

ஒருவரை ஒருவர் மனதார விரும்புபவர்களாக இருந்தாலும் அல்லது கணவன் மனைவி பிரச்சனையில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருப்பவர்களாக இருந்தாலும் இவர்கள் ஒன்று சேர்வதற்காகவும் செய்யக்கூடிய இந்த பரிகாரம் மிகவும் எளிமையான பரிகாரம். அத்துடன் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயம் அதற்கான பலன் கிடைத்து விடும்.

- Advertisement -

ஒருவருடன் ஒருவர் சேருவதற்கு முன்னர் ஆண், பெண் இருவருக்கும் புரிதல் என்பது அவசியம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து இனிமையாக வாழ அவர்களுக்குள் எப்பொழுதும் சண்டை வருவது மட்டுமல்லாமல் அதனை சமாதானம் செய்யவும் தெரியவேண்டும். எவரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து போனால் மட்டுமே வாழ்க்கை நல்லதாக அமையும். நீ பெரியவளா? நான் பெரியவனா? என்ற எண்ணம் மனதில் தோன்றிவிட்டால் கணவன் மனைவி வாழ்க்கை என்பது போர்க்களமாக மாறிவிடும்.

husbund-and-wife

இப்படி கணவனை புரிந்து கொள்ளாத மனைவியும், மனைவியை புரிந்து கொள்ளாத கணவனும் சண்டையிட்டு பிரிந்து வாழ்கின்றனர். அதிலும் ஒரு சிலர் விவாகரத்து வேண்டி கோர்ட் படிகளில் நின்று கொண்டிருக்கின்றனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். நமது முன்னோர்கள் திருமண வாழ்க்கையை தங்களின் உயிர் போல மதித்தனர். ஆனால் இப்பொழுது உள்ளவர்கள் தங்களின் கோபத்தையும், தன்மானத்தையும் மட்டுமே பெரியதாக எண்ணி திருமண வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

- Advertisement -

ஆனால் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்து, ஒற்றுமையாக வாழ்ந்தால் மட்டுமே கணவன் மனைவி உறவு இறுதிவரை சுகமாக இருக்கும். இவ்வாறு ஒருவரை ஒருவர் பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேர்வதற்கும், விரும்பியவரை கரம் பிடிப்பதற்கும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இரட்டை வாழைப்பழத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

banana 5

அந்த வாழைப்பழத்தில் ஆண், பெண் இருவரின் பெயர்களையும் எழுதிக்கொண்டு, மனதில் விநாயகரை நினைத்து, சங்கல்பம் செய்ய வேண்டும். நாங்கள் இருவரும் ஒன்றாக சேர வேண்டும் என்று ஒருமனதாக வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பழத்தை பசு மாட்டிற்கு தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு 9 முறை தானம் செய்வதன் மூலம் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடைபெறும்.

- Advertisement -