பல பரிகாரங்கள் செய்தும், பல கோவில்களுக்கு சென்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு கூட நிச்சயம் திருமணம் நடக்கும். இந்த 3 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டு விட்டாலே போதும்.

- Advertisement -

பலபேருக்கு நல்ல வேலை, சொந்த வீடு, நல்ல எதிர்காலம், வாகனம் சொத்து சுகம் எல்லாம் இருக்கும். ஆனால், இதை எல்லாம் அனுபவிப்பதற்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருவார்கள். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு திருமண வயதை கடந்தும், திருமணம் ஆகவில்லை என்றால் இதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கும் வருத்தம் இருக்கும். குறிப்பாக அந்த பிள்ளைகளை பெற்ற பெற்றோருக்கு தீர்க்க முடியாத மன கவலை இருந்து வரும். நம் குடும்பத்திற்கு அடுத்த வாரிசு வருமா என்ற சந்தேகம் இருப்பவர்களும், இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயம் பலன் உண்டு என்பதில் சந்தேகமே கிடையாது.

marraige-couple

வழிபாட்டு முறைகள், பரிகாரங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது மூலிகைகள். சித்தர்கள் நமக்கு விட்டுச் சென்ற சில மூலிகைகளின் மகத்துவம் நமக்கு என்னவென்று தெரியாமலே போகிறது. அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த 3 பொருட்களைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். நாட்டு மருந்து கடைகளில் விற்கும் இந்த மூன்று பொருட்களை வாங்கி, பின் சொல்லப்படும் பரிகாரத்தை முறையாக செய்தால் 48 நாட்களில்  இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு, திருமணம் நிச்சயம் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

- Advertisement -

உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் அந்த 3 பொருட்களில் முதலாவது லோஅத்திரைப்பட்டை அல்லது இதை லோத்திரைபட்டை என்று சொல்லுவார்கள். இரண்டாவதாக ஆவாரம்பூ, மூன்றாவதாக தாமரை பூ இதழ்கள், ஆவாரம் பூ காய்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை. தாமரை பூ இதழ்கள் காய்ந்தது இருந்தாலும் பரவாயில்லை. தவறு ஒன்றும் கிடையாது. இந்த இரண்டு பூக்களும் வாடாமல் புதியதாக கிடைத்தாலும் சரி பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இந்த மூன்று பொருட்களையும் வைத்து ஒரு நூல் போட்டு சிறிய முடிச்சு போல கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

manjal-mudichu

தயார் செய்த இந்த மூட்டை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே ஒரு அலமாரியில் இருக்கலாம். தினமும் காலை எழுந்தவுடன் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, இந்த முடிச்சை உங்களது உச்சந்தலையில் ஒரு 30 வினாடிகள் வைத்து, மனதார உங்களுக்கு இருக்கக்கூடிய தோஷம் நீங்க வேண்டும். திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மீண்டும் அந்த முடிச்சை உங்கள் முன்பாக ஒரு தட்டின் மீதோ அல்லது ஒரு சிறிய கிண்ணத்தின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள். (திருமணமாகாத ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களுக்கு பரிகாரம் செய்ய முடியாத மாதவிலக்கு நாட்களில், அந்த நாட்களை தவிர்த்துக் கொண்டு மீண்டும் தொடரலாம்.)

- Advertisement -

அதன்பின்பு, வாசனை மிகுந்த தூபத்தை ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சுக்கு காண்பிக்க வேண்டும். அடுத்தபடியாக இருகைகளையும் கூப்பி பின்வரும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான திருமணத்தடையை போக்கக்கூடிய அந்த மந்திரம் இதோ!

praying-god1

ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம் ஐம்
ஐம் ஸ்ரீம் க்லீம் ஐம் ஓம்.

- Advertisement -

அவ்வளவுதாங்க, 48 நாட்கள் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். 48வது நாள் இந்த பூஜை நிறைவடையும் இப்போது, உங்களுடைய வீட்டில் தூபம் போடும் தூபக்கால் கட்டாயம் இருக்கும். அதில் நெருப்பு மூட்டி விட்டு, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அந்த மஞ்சள் நிற முடிச்சை லோத்திரப்பட்டை, ஆவாரம் பூ, தாமரை இதழ், கொண்ட முடிச்சை அந்த நெருப்பில் போட்டு, 2 ஸ்பூன் நெய் விட்டு அக்னி ஹோமம் நடத்தி விடுங்கள்.

முடிச்சு கழட்ட வேண்டாம். துணையோடு போட்டு ஹோமம் நடத்தி விடலாம். உங்கள் பூஜை அறையில் இந்த ஹோமம் செய்து நிவர்த்தி செய்து விட்டால், உங்களுடைய தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகி, விமோசனம் கிடைக்கும். திருமணம் உங்களுக்கு கூடிய விரைவில் நிச்சயிக்கப்படும். உங்களுடைய ஜாதக கட்டத்தில் பிரச்சினை மிகவும் வலிமையாக இருந்தால் கூட மூன்று மாதத்திற்குள் உங்களுக்கு நிச்சயம் திருமணம் ஆகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
புண்ணியத்தை சேர்ப்பதற்கு இதை விட சுலபமான வழி இந்த உலகத்தில் வேறு எதுவுமே இருக்க முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -