சிறந்த வேலை கிடைக்க பரிகாரம்

pariharam to get good job in tamil
- Advertisement -

நமது பொருளாதார நிலை உயரவும், நமது உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் செயல்படவும், நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் உழைக்க வேண்டும். ஒரு சிலர் சொந்த தொழில், வியாபாரம் செய்வார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் அரசாங்கம் அல்லது தனியார் துறையில் ஏதாவது ஒரு வேலைக்கு செல்பவர்களாக இருப்பார்கள். இன்னும் அதிகம் பேர் தங்களுக்கு ஏற்ற வேலை கிடைக்க பல மாதங்கள், வருடங்களாக தீவிர முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். தங்களுக்கேற்ற வேலை கிடைக்கவும் பொருளாதாரம் ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் திருப்தி இல்லாமல் இருக்கின்ற வேலையில் இருந்து வேறு நல்ல வேலை கிடைக்க முயற்சி முயற்சி செய்பவர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

நல்ல வேலை கிடைக்க பரிகாரங்கள்

தினமும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, முடித்துவிட்டு கொஞ்சம் மஞ்சள் நிற பூக்களை எடுத்துக் கொண்டு ஒரு சிறிய அளவிலான செம்பு கிண்ணத்தில் சுத்தமான நீரை ஊற்றி, அதில் சிறிதளவு வெல்லம் கலந்து, நன்கு கரைத்து இரண்டையும் சூரிய பகவானுக்கு அர்ப்பணம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை தினந்தோறும் காலையில் 7:00 மணிக்கு முன்பாகவே செய்துவிட வேண்டும். இப்பதிகாரம் செய்கின்ற பொழுது சூரிய பகவானுக்குரிய ஸ்தோத்திரங்களை துதிப்பது பரிகாரத்தை வெற்றி பெறச் செய்து தாங்கள் விரும்பிய வேலை கிடைக்க வழி வகுக்கும்.

- Advertisement -

அரிசி, கோதுமை, கருப்பு உளுந்து, கருப்பு கொண்டைக்கடலை, கம்பு, பார்லி, பச்சைப்பயிறு ஆகிய ஏழு தானியங்களை நன்கு கலந்து, தினமும் பறவைகளுக்கு உணவாக கொடுத்து வருவதும் உங்களுக்கு விரைவிலேயே விரும்பிய படி நல்ல வேலை கிடைக்க வழி வகுக்கும். ஏற்கனவே வேலையில் இருக்கின்றவர்கள் உயர்ந்த பதவிகளையும், அதிக ஊதியத்தையும் பெறக்கூடிய வாய்ப்பையும் இந்த தாந்திரீக பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும் என கூறப்படுகிறது.

ஏதேனும் ஒரு திங்கட்கிழமை தினத்தன்று அருகில் உள்ள சிவபெருமான் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கு சிறிய அளவிலான 21 கோமதி சக்கரங்கள் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட வேண்டும். மேலும் திங்கட்கிழமைகள் தோறும் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு சுத்தமான தண்ணீர் அல்லது பசும்பாலை அளித்து வருவதாலும் வேலை கிடைக்காமல் தவிப்பவர்கள், விரைவில் நல்ல வேலை சிவபெருமானின் அருட்கடாச்சத்தால் கிடைக்க பெறுவார்கள்.

- Advertisement -

வேலை தேடி வெளியில் கிளம்புபவர்கள் அல்லது இருக்கின்ற வேலையை எடுத்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்கிற முயற்சிகள் இருப்பவர்கள் தினமும் வீட்டை விட்டே வெளியில் செல்லும் பொழுது உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு மண் அகல் விளக்கில் திரியிட்டு, கடுகு எண்ணெய் ஊற்றி அதில் 2 லவங்க துண்டுகளை போட்டு தீபம் ஏற்றி செல்ல வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வர விரைவிலேயே உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

தங்களுக்கு ஊதியம் அதிகமுள்ள நல்ல வேலை கிடைக்க வேண்டும் என விரும்புபவர்கள் செவ்வாய் கிழமைகளில் அனுமன் கோயிலுக்கு செல்ல வேண்டும். அங்கு அனுமனின் விக்கிரகத்தில் வலது கால் கட்டை விரலில் இருக்கின்ற செந்தூரத்தை எடுத்து தங்களின் நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். இந்த ரகசிய தாந்திரீக பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வருபவர்களுக்கு அனுமனின் அருளால் மனதிற்கினிய வேலை வாய்ப்பு அமையப் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே: மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாதத்திற்கு இரவு முறை தங்கள் சக்திக்கு ஏற்ப உடல் ஊனமுற்ற நபர்களுக்கு அன்னதானம் அளித்து வருவதாலும் தாங்கள் விரும்பிய வேலை கிடைப்பதில் இருக்கின்ற தடைகள் நீங்கி, விரைவிலேயே உங்களுக்கு அந்த வேலை கிடைக்கும். அன்னதானம் அளிக்க முடியாதவர்கள் அவர்களுக்கு பணமாக கொடுத்து உதவிகள் செய்யலாம்.

- Advertisement -