ஒருவருக்கு தெரியாமல் கூட இந்த ஒரு பரிசினை வழங்கி விடாதீர்கள், உறவு பகையாகிவிடும்! உறவு வலுபெறவும், பரிசினை பெறுபவர்களும், வாங்குபவர்களும் அதிர்ஷ்டசாலியாகவும் இந்த பொருளை பரிசளிக்கலாமே!

gift-knife-pot
- Advertisement -

எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை அளித்து அதன் மூலம் மகிழ்ச்சி காண்பது உண்டு. குறிப்பாக பிறந்தநாள் விழாக்களின் பொழுது நண்பர்கள், உற்றார், உறவினர்கள் என்று அனைவருமே நமக்கு பரிசளித்திருப்பார்கள். அது மட்டும் அல்லாமல் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு கூட பெரியவர்கள் சிறியவர்களுக்கு பரிசளிப்பதையும், அதில் அவர்கள் மகிழ்வதையும் நாம் கண்டிருப்போம். இப்படி பரிசளிப்பதன் மூலம் வரக்கூடிய அதிர்ஷ்டமும், ஆபத்தும் பற்றிய சுவாரஸ்ய ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நம்மிடமிருந்து ஒரு சில பொருட்கள் மற்றவர்களிடம் செல்லும் பொழுது நம்முடைய அதிர்ஷ்டத்தையும் கொண்டு செல்வதாக சில சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது அதில் மகாலட்சுமியின் படத்தை பிறருக்கு வழங்கினால் நம்மிடம் இருக்கும் லட்சுமி கடாட்சம் அவர்களுக்கு சென்று விடும் என்கிற ஐதீகமும் உண்டு. அது போல கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு பரிசு பொருளாக நாம் வழங்க கூடாது. இதனால் உறவு முறியும், பகை உண்டாகும் என்பது ஐதீகம்.

- Advertisement -

அதுபோல ஒருவருக்கு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்பும் பொழுது ஒற்றை வெற்றிலையை கொடுக்கக் கூடாது. வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து கொடுக்க வேண்டும். தனியாக வெற்றிலை கொடுத்தால் பகை உண்டாகும். சிலர் கர்சீஃப் கொடுக்கக் கூடாது, பேனா கொடுக்கக் கூடாது என்றெல்லாம் கூறுவதை நாம் கேட்டிருப்போம். இதெல்லாம் பரிசளித்தால் உறவில் பிரிவு ஏற்படுமாம். இது போல உங்களுக்கும் நிறைய பொருட்கள் தெரிந்திருக்கலாம். கண்ணாடி பொருட்களை ஒருவருக்கு ஒருவர் பரிசுப் பொருளாக பரிமாறிக் கொண்டால் அவர்களின் உறவு அந்த கண்ணாடியை போலவே நீண்ட காலம் இல்லாமல் குறைந்த காலத்திலேயே உடைந்து நொறுங்கி விடும் என்றும் நம்பப்படுவது உண்டு.

இந்த வகையில் அதிர்ஷ்டம் தரும் பொருட்களும் உண்டு. கற்சிலைகள், மரத்தாலான பொருட்கள் போன்ற உறுதியான பொருட்களை ஒருவருக்கு நாம் பரிசாக கொடுக்கும் பொழுது அந்த உறவும் உறுதியாக இருக்குமாம். உறவில் விரிசல் விழாமல் கடைசி வரை அந்த உறவு நீடிக்குமாம். உங்களுக்கு பிடித்தமான பொருட்களை உறுதியாக வாங்கிக் கொடுப்பது இதனால் நன்மை தரும்.

- Advertisement -

உறுதியற்ற பொருளாக இருந்தாலும் பூமியில் இருந்து இயற்கையாக கிடைக்கக்கூடிய மண்ணினால் ஆன பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள், பூந்தொட்டிகள் போன்றவையும் உறவை மேலும் மேலும் வலுப்படுத்தும் அற்புதமான ஆற்றல் படைத்த பொருளாக இருக்கிறது. எனவே நீங்கள் யாருக்காவது பரிசு கொடுக்க விரும்பினால் பூந்தொட்டிகள், மண் சிலைகள் போன்றவற்றையும் கொடுத்து மகிழலாம். இதனால் இரு தரப்பினரும் அதிர்ஷ்ட வளத்தை அடைவார்கள். இத்தகைய பொருட்களை பெறுபவர்களும், வாங்குபவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் பொழுது அவ் உறவானது கடைசி வரை நீடிக்கிறது. மேலும் அவர்களுக்கு கையில் பணமும் அதிகமாக வந்து சேருமாம்.

இதையும் படிக்கலாமே:
இந்த பூச்செடி உங்க வீட்ல இருக்கா? வேலை தேடி எங்கயுமே நீங்க அலைய வேண்டாம். கை நிறைய சம்பளத்தோட வேலை உங்க வீடு தேடி வரும்.

அந்த அளவிற்கு ரொம்பவே ஒரு விசித்திரமான மற்றும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த பொருட்கள் அதிர்ஷ்டம் தரக்கூடியவையாக அமைந்துள்ளது. ஒளி தரும் பொருட்கள் அதாவது ஒளி அமைப்பை ஏற்படுத்த கூடிய வகையில் நீங்கள் எந்த பொருட்களை வாங்கி கொடுத்தாலும் அது பன்மடங்கு மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யுமாம். லைட் லாம்ப், டார்ச் லைட், ஒளிரும் மின் விளக்குகள் போன்றவற்றை பரிசாக கொடுப்பதன் மூலம் வாழ்க்கையில் ஒளிமயமான பிரகாசம் உண்டாகுமாம். கடவுளுடைய படங்கள் கொடுப்பதனாலும் அதிர்ஷ்டம் வருமாம். சப்தங்களை எழுப்பக்கூடிய ஒலி வடிவில் ஆன பொருட்களை கொடுத்தாலும் அதிர்ஷ்டம் வருமாம்.

- Advertisement -