பசு மாட்டிற்கு தொடர்ந்து இந்த 1 பொருளை சாப்பிட கொடுத்து வந்தால் மகாலட்சுமியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

cow
- Advertisement -

மகாலட்சுமியின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெறுவதற்கு வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பெருக்குவதற்கு பசு மாட்டிற்கு உங்களால் முடிந்த பொருட்களை சாப்பிட வாங்கித் தர வேண்டும்.  அது மட்டும் இல்லாமல் கோவில்களில் இருக்கும் கோ சாலைகளுக்கு தேவையான பராமரிப்பு பணிகளை செய்வதற்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்யுங்கள். பசு மாடுகளை பராமரிப்பதற்கு தேவையான செலவுகளை சிறிதளவு செய்தால், செலவு செய்ததற்கான பணம் இரட்டிப்பாக கூடிய சீக்கிரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும். ஆக பசு மாட்டிற்கு செலவு செய்யக்கூடிய செலவை கணக்கு பார்க்காதீங்க. உங்களுடைய வருமானத்துக்கு தகுந்தவாறு ஒரு தொகையை மாதம் தோறும் பசுமாட்டிற்காக செலவு செய்யுங்கள். அதன் மூலம் உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.

குடும்பத்தில் ரொம்பவும் பணகஷ்டம் இருக்கிறது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. கடன் வாங்கி விட்டோம். வாங்கிய கடனுக்கு ஆனால் வட்டி கூட கட்ட  முடியவில்லை. கடனை திருப்பிக் கொடுப்பதற்கான வழியே இல்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறீர்கள் என்றால் பின் சொல்லக்கூடிய பொருளை பசு மாட்டிற்கு வெள்ளிக்கிழமை தோறும் உங்கள் கையால் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

வெற்றிலை 2 வாங்கிக் கொள்ளுங்கள். வெள்ளை பூசணியின் விதை நமக்கு இந்த பரிகாரத்திற்கு கட்டாயம் தேவை. திருஷ்டி பூசணிக்காய், கல்யாண பூசணிக்காய் என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த வெள்ளை பூசணிக்கு உள்ளே இருக்கும் விதையை எடுத்து நிழலில் காய வைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டாலும் சரிதான்.

அப்படி இல்லை என்றால் கடைகளிலேயே வெள்ளை பூசணி விதைகள் இப்போது நமக்கு கிடைக்கிறது. அதை வாங்கிக் கொண்டாலும் சரிதான். வெள்ளிக்கிழமை தோறும் உங்களுடைய வீட்டில் நிச்சயமாக பூஜை செய்வீர்கள். அந்த பூஜையில் இரண்டு வெற்றிலைக்கு உள்ளே, 3 பூசணி விதைகளை வைத்து மடித்து அப்படியே மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து பணக்கஷ்டம் தீர, வேண்டிக் கொள்ளுங்கள். பூஜை முடிந்த பின்பு அந்த வெற்றிலை பூசணி விதையை எடுத்து பசு மாட்டிற்கு சாப்பிட கொடுத்து விட வேண்டும். அவ்வளவு தான் பரிகாரம்.

- Advertisement -

வெற்றிலை சில சமயத்தில் இல்லை என்றால், சிறிய துண்டு வாழை இலையில் கூட இந்த பூசணி விதையை மடித்து பசு மாட்டிற்கு கொடுத்துவிடலாம். பசு மாட்டிற்கு கொடுக்கும் போது மகாலட்சுமியை மனதார நினைத்துக் கொண்டு கொடுக்க வேண்டும். தொடர்ந்து ஒரு ஐந்து வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்களேன். உங்களுக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய பண கஷ்டத்திற்கும் நிச்சயமாக ஒரு தீர்வு கிடைக்கும்.

ஐந்து வாரத்திற்குப் பின்பு இந்த பரிகாரம் செய்வதை நிறுத்த வேண்டாம். அப்படியே தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் செல்வ வளம் அதிகரிப்பதை உணர முடியும். கஷ்டங்கள் படிப்படியாக குறையும். இதோடு மட்டுமல்லாமல் உங்களால் முடிந்த பொருட்களை பசு மாட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வாங்கி கொடுத்துக் கொண்டே இருக்கலாம்.

கோசாலையில் இருக்கும் மாடுகளுக்கு அகத்திக்கீரை வாழைப்பழம் புண்ணாக்கு பருத்திக்கொட்டை போன்ற பொருட்களை உங்களால் முடிந்த அளவுகளில் வாங்கி கொடுங்கள். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -