பசுமாட்டிற்கு உங்கள் கைகளால் இந்த 1 பொருளை மட்டும் சாப்பிட கொடுக்கவே கூடாது. ஏழேழு ஜென்மத்திற்கும் பாவம் பின்தொடரும்.

cow
- Advertisement -

நம்முடைய இந்து சாஸ்திரப்படி பசுமாடும் காகமும் தெய்வசக்தி நிறைந்த ஒரு உயிரினமாக தான் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக பசுமாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த மகாலட்சுமியும் குடியிருப்பதாக நாம் நம்புகின்றோம். தெய்வ சக்தி நிரம்பிய பசு மாட்டிற்கு நம்முடைய கைகளால் எந்த பொருட்களை கொடுத்தால் நமக்கு இருக்கும் கஷ்டங்கள் தீரும், எந்த பொருட்களை நம்முடைய கைகளால் பசு மாட்டிற்கு கொடுக்கவே கூடாது என்பதை பற்றிய சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

banana-for-cow

நிறைய வடமாநிலத்தவர்கள் பசுவை தங்களுடைய தெய்வமாக நினைத்து வழிபாடு செய்வார்கள். எந்த இடத்தில் பசுமாட்டை பார்த்தாலும், அந்தப் பசு மாட்டினை தங்களுடைய குலம் காக்கும் தெய்வம் என்று எண்ணி பணிவோடு தொட்டு வணங்குவார்கள். இது சில பேருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அவர்கள் கஷ்டப்படாமல் வசதி படைத்தவர்களாக இருப்பதற்கு, அவர்களிடம் இருக்கும் இந்த குணமும் ஒரு காரணம் தான்.

- Advertisement -

சரி, பசுமாட்டிற்கு எந்த பொருளை கொடுக்கக்கூடாது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக பசுமாட்டிற்கு எந்த பொருளை கொடுத்தால் நாம் செல்வச் செழிப்போடு இருக்கலாம் என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். நம்முடைய வீட்டில் நம் கையால் செய்த சப்பாத்தியோடு நெய் சேர்த்து ஏதாவது ஒரே ஒரு துண்டு இனிப்பு பொருளை அந்த சப்பாத்தியுடன் வைத்து மடித்து பசுமாட்டிற்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

pasu-agathikeerai

பக்தியோடு பணிவோடு அந்த பசு மாட்டினை தெய்வமாக நினைத்து இந்த உணவினை பசுமாட்டிற்கு சாப்பிடக் கொடுத்தால் நிச்சயமாக ஒருவருக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் படிப்படியாக குறைந்து வரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. சப்பாத்தியில் உள்ளே ஒரு ஸ்பூன் நெய் கலந்த சர்க்கரையை கூட வைத்து சுருட்டி கோமாதாவிற்கு சாப்பிட கொடுத்துவிடலாம். இது தவிர உங்கள் வீட்டில் இருக்கும் வாழைப்பழம் பிஸ்கட் போன்ற எந்த பொருட்களை வேண்டுமென்றாலும் நீங்கள் பசுமாட்டிற்கு சாப்பிட கொடுக்கலாம். குறிப்பாக சில மாடுகள், சில வீடுகளின் வாசலில் போய் நிற்கும். அப்படி உங்கள் வீட்டு வாசலில் முன்பு பசுமாடு வந்தால் அதற்கு கட்டாயம் ஏதாவது ஒரு பொருளை சாப்பிட கொடுக்க வேண்டும்.

- Advertisement -

தினந்தோறும் நம்முடைய வீட்டில் சப்பாத்தி செய்வது வழக்கமாக இருக்காது. இருப்பினும் சப்பாத்தி செய்யும்போது கொடுப்பது நன்மை தரும். சரி எந்த பொருளை பசுமாட்டிற்கு கொடுக்கக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய கைகளால் எச்சில் பண்டங்களை பசுமாட்டுக்கு கொண்டுபோய் கொடுக்காதீர்கள். நிறைய பேர், தான் சாப்பிட்ட எச்சில் இலைகள், தான் சாப்பிட்டு தட்டில் மீதம் வைத்த பொருட்களை வழித்து பசுமாடு சாப்பிடும் தொட்டியில் போட்டு, அதாவது அந்த கழனீர் தண்ணீரில் போட்டு அதை கலந்து அப்படியே பசுமாட்டிற்கு கொடுப்பார்கள்.

பசுமாடு ரோட்டில் இருக்கும் எச்சில் இலைகளை சாப்பிடும். ரோட்டில் கிடக்கும் எச்சில் பண்டங்களை சாப்பிடும். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால், நீங்கள் உங்கள் கைகளால், உங்கள் வீட்டிலிருந்தே எச்சில் பண்டங்களை பசுமாட்டுக்கு சாப்பிடுவதற்கு கொண்டுபோய் வைக்கக்கூடாது அது தவறு. அதன் மூலம் நமக்கு ஏழு ஜென்மத்துக்கு பாவம் வந்து சேரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த தவறை நீங்கள் செய்பவர்களாக இருந்தால் சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், பசு மாட்டினை நீங்களும் தெய்வமாக நினைப்பவர்கள் ஆக இருந்தால், இந்த தவறை இனி செய்யவேண்டாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -