பாவத்தை போக்கும் பார்லி அரிசி

bird
- Advertisement -

நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்பத்தான் இறைவன் நம்முடைய தலையெழுத்தை எழுதி வைத்திருக்கிறான். நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்றவாறுதான், நவகிரகங்கள் கட்டங்களில் அமர்ந்து கொண்டு நம்முடைய எதிர்காலத்தை சொல்லுகிறது. உங்களுடைய ஜாதக கட்டத்தில் கர்மவினையும், செய்த பாவங்களும் அதிகமாக இருக்கிறதா. வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறீங்களா. அந்த பாவங்களை எல்லாம் படிப்படியாக குறைக்க எளிமையான ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பாவத்தை போக்கும் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் பார்லி அரிசி. இந்த பொருள் பெரும்பாலும் மளிகை பொருட்கள் விற்கும் கடைகளிலேயே உங்களுக்கு சுலபமாக கிடைக்கும். பார்லியை சிறிதளவு வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு வெள்ளை துணியில் 1 ஸ்பூன் பார்லியை வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதை உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். மறுநாள் காலை எழுந்து இந்த பார்லி அரிசியை உங்கள் கைகளால் பறவைகளுக்கு இறையாக போடணும். எங்கள் வீட்டில் மொட்டை மாடி, பால்கனி எதுவுமே இல்லை. பறவைகளுக்கு இதை இறையாகவே போட முடியாது என்று சொல்பவர்கள், தினம் தினம் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கக்கூடிய பார்லியை எல்லாம் அப்படியே சேகரித்து வையுங்கள்.

வாரத்தில் ஒரு நாள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த பார்லியை அப்படியே கொண்டு போய் மரம் செடி கொடிகளில், பறவைகள் தங்கி இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் தூவி விட்டு வந்து விடுங்கள். பறவைகள் அதை சாப்பிட்டுக் கொள்ளும் அல்லது அங்கு இருக்கும் எறும்புகள் சாப்பிட்டாலும் நன்மையே.

- Advertisement -

இதை ஒருநாள் செய்துவிட்டால் முழு பலனையும் எதிர்பார்க்க முடியாது. செய்த பாவங்கள் எல்லாம் கரைந்து போகாது. தினம் தினம் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர உங்களுடைய பாவத்திற்கு உண்டான தண்டனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு பரிகாரம்.

இது தவிர ஜாதக கட்டத்தில் ராகுவால் பிரச்சனை இருக்கிறது. இல்லற வாழ்க்கை சரி இல்லை எதிரிகளால் தொல்லை, வாழ்க்கையின் நரகமாக செல்கிறது என்பவர்கள் பின் சொல்லக் கூடிய பரிகாரத்தை சனிக்கிழமை செய்யணும். ராகுவை அவ்வளவு சுலபமாக நினைக்காதீங்க. சனி பகவானை விட பல மடங்கு இவர் பிரச்சனைகளை நமக்கு கொடுப்பார்.

- Advertisement -

சனிக்கிழமை இரவு ஒரு சுத்தமான பாத்திரத்தில் கொஞ்சமாக பார்லி, கொஞ்சமாக காய்ச்சிய பாலோ, காய்ச்சாத பாலோ ஏதோ ஒரு பாலை அதில் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். மறுநாள் எழுந்து ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்து, சூரிய பகவானை வழிபாடு செய்து விட்டு, பாலில் ஊரின இந்த பார்லியை கொண்டு போய் பசு மாட்டிற்கு உங்கள் கைகளால் கொடுத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணம் வீட்டில் தங்க இந்த தாந்த்ரீக முறைகளை பின்பற்றுங்கள்.

அப்படி இல்லை என்றால் பறவை காக்கை குருவிகளுக்கு இதை உங்கள் கைகளால் போடலாம். ஏதோ ஒரு ஜீவராசிக்கு இந்த பார்லியை சாப்பிட்டு வர ராகுவால் உங்கள் ஜாதக கட்டத்தில் உண்டாக்கப்பட்ட தோஷம் நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்பட்டுள்ளது. எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த இரண்டு பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -