எத்தனை ஜென்ம பாவமாக இருந்தாலும் அவற்றை ஒரே நொடியில் கரைக்க வல்லது இந்த பருத்திப்பால். உங்கள் பாவம் தீர்ந்து இனிமேல் நடக்கும் அனைத்தும் நன்மையாகவே நடக்கும்

milk
- Advertisement -

எவ்வளவு கடினமாகவும், உண்மையாகவும் உழைத்தாலும் ஒரு சிலரின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. பறக்க பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை என்பது பழமொழியாகும். இவ்வாறு கடின உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், நேர்மையும் இருந்தாலும் இவர்களின் உழைப்பாற்க்கு கிடைக்கும் ஊதியம் குறைவாகவே இருக்கும். அல்லது இவர்களின் வருமானம் இவர்களின் குடும்ப சூழ்நிலைக்கு போதுமானதாக இருக்காது. கையில் பணம் வந்த இடமும் போன இடமும் தெரியாமல் போய்விடும். நமது வாழ்க்கையை எப்படி முன்னேற்ற வேண்டும் என்று யோசனை மட்டுமே இருந்து கொண்டிருக்கும். ஆனால் முன்னேறுவதற்கென்று வழியொன்றும் கிடைக்காது. இவ்வாறு ஒருவரின் வாழ்க்கை முன்னேறாமல் இருப்பதற்கு நாம் செய்த பூர்வ ஜென்ம பாவங்கள் கூட காரணமாக இருக்கலாம். இவ்வாறு செய்த பாவத்திலிருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கைத் தரம் மேன்மேலும் உயர்ந்து கொண்டே செல்லும். இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

karma

ஒவ்வொரு மனிதன் வாழ்கின்ற வாழ்க்கையிலும் அவன் செய்த கர்ம வினைகளின் பலனாகவே கஷ்டம், நஷ்டம், சந்தோஷம், வறுமை, இனிமை என அனைத்தும் இருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் சனி பிடிப்பதும் இவ்வாறான கர்ம வினைகளின் பலனாகத்தான் விளைகிறது. நாம் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மையும், செய்த பாவங்களுக்கு ஏற்ப துன்பமும் கிடைக்கிறது.

- Advertisement -

இவ்வாறு செய்த பாவங்களின் பலன்கள்கள் நிச்சயம் ஒரு ஜென்மத்தில் நம்மை பாதிக்கும். அவ்வாறு மனித பிறவியாக இருந்தால் நிச்சயம் அவற்றிற்கான கெடுபலன்களை நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். இவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு வழி ஒன்றும் கிடையாது.

cotton

இவ்வாறான கர்மவினைகளின் மூலம் ஒருவரின் மானம், மரியாதை இழந்து மிகவும் மோசமான நிலைக்குக் கூட செல்ல வேண்டியிருக்கும். இது போன்ற நிலைமைகளை சமாளிப்பதற்கும், நமது கர்மவினைகளின் தாக்கத்தை குறைக்கவும் இந்த பருத்திப்பால் பரிகாரத்தை செய்ய வேண்டும். அதற்காக முதலில் பருத்திக் கொட்டைகளை வாங்கி கொள்ள வேண்டும்.

- Advertisement -

அவற்றை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மறுநாள் அவற்றை அரைத்து பருத்திப்பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது. மிகவும் சுத்தமான கலப்படமில்லாத பருத்தி பால் எடுக்க வேண்டும். பின்னர் இதனை பூஜை அறையின் முன் வைத்துவிட வேண்டும்.

milk1

பிறகு பூஜை அறையில் அமர்ந்து கண்களை மூடி இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். நான் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிக்க வேண்டும் என்று. பிறகு ஏதேனும் ஒரு பசு மாட்டிற்கு அதன் தலையில் இருக்கும் கொம்புகளையும், பாதங்களையும் தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி விட வேண்டும்.

cow

பிறகு பருத்தி பால் ஊற்றி அதன் கொம்பையும், பாதங்களையும் கழுவி விட்டு, மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, பசுமாட்டை தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பாவங்களின் பலன்கள் குறைந்து, அவற்றின் மூலம் ஏற்படுகின்ற பிரச்சனைகளின் வீரியமும் குறைந்து இனிமேல் உங்கள் வாழ்க்கை இனிமையாக மாறும்.

- Advertisement -