பாவம் தீர முருகன் மந்திரம்

pavam theera
- Advertisement -

இன்று ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நாளும் புலம்பும் ஒரு வார்த்தை நான் என்ன பாவம் செய்தேனோ இந்த பிறவியில் இவ்வளவு துன்பப்படுகிறேன் என்று தான். இதை ஓரளவுக்கு நன்றாக வாழ்பவர் முதல் துன்பப்படுபவர் வரை அனைவரும் சொல்லத் தான் செய்கிறார்கள்.

ஏனென்றால் இது நமக்கே நன்றாக புரிகிறது. இன்றைய நம்முடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் முன்பு நாம் செய்த பாவம் தான் காரணம். இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் மட்டுமின்றி ஏழு ஜென்ம பாவமும் நமக்கு கர்மாக்களாக நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வரும் என்பது நம்பிக்கை. அத்தகைய பாவத்தை தீர்த்து வாழ்க்கையில் முன்னுக்கு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

- Advertisement -

இப்படி வாழ்க்கையில் துன்பப்படுபவர்கள் வழிபட வேண்டிய கடவுளையும் சொல்ல வேண்டிய மந்திரத்தையும் பற்றி மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஏழு ஜென்ம பாவம் தொலைய

இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்பமாக இருக்கட்டும் துன்பமாக இருக்கட்டும் கடன் தொல்லை போன்ற எந்த வித துன்பமாக இருந்தாலும் அனைத்திற்கும் காரணம் நம்முடைய முன்வினைகள் தான். கிரக சூழ்நிலைகள் நேரம் சரியில்லை போன்றவை எல்லாம் இதற்கு அடுத்த படியாக வருவது தான். இதுவும் ஒரு வகையில் அதனுடைய தொடர்ச்சி என்றே கூட சொல்லலாம்.

- Advertisement -

இத்தகைய பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ள நாம் பற்றி கொள்ள வேண்டிய கடவுள் கந்த கடவுள் தான். கந்தா என்றவுடன் வந்து நிற்கக் கூடிய கருணைமிக்க கடவுள் தான் நம்முடைய முருகப் பெருமான்.

கேட்டவருக்கு கேட்ட வரத்தை அள்ளித் தரக்கூடிய பேராற்றல் கொண்ட தெய்வமும் அவர் தான். ஆகையால் தான் இன்று உலக அளவில் அநேகமானோர் முருகரின் பக்தர்களாகவும் அவரின் பின்பற்றுபவராகவும் இருக்கிறார்கள்.

- Advertisement -

முருகப்பெருமானை வழிபட எல்லா நாளும் சிறந்த நாள் என்றாலும் செவ்வாய்க்கிழமை மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. இது ஒரு மந்திர வழிபாட்டு முறை தான். இந்த மந்திர வழிபாட்டை துவங்க நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.

துன்பம் என்று நினைத்த மாத்திரத்தில் இந்த வழிபாட்டை நீங்கள் ஆரம்பித்து விடுங்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்று விட்டு அதன் முன் அமர்ந்து கண்மூடி மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஓம் க்ரீம் ஐம் வேல் காக்க

இந்த ஒரு அற்புதமான மந்திரத்தை 10 நிமிடம் வரை தொடர்ந்து பாராயணம் செய்யுங்கள். அந்த நேரம் முழுவதும் முருகப்பெருமானை மனதார நினைத்து உங்களுடைய பாவங்கள் தொலைந்து குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க வேண்டும். உங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ பரிகாரம்

உங்களுடைய இந்த வேண்டுதலை நிச்சயமாக முருகப்பெருமான் தீர்த்து வைப்பார். அத்துடன் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள உங்களை கை கொடுத்து கட்டாயமாக காப்பாற்றுவார் என்றும் சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -