பல ஜென்ம பாவங்களும் தொலைந்து புண்ணியத்தை சேர்க்க நிலை வாசலில் இதை தூவி விடுங்கள்.

sad man nilai vasal
- Advertisement -

இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு துன்பமும், இன்பமும் நம்முடைய பூர்வ ஜென்மத்தின் பலனே என்று சொல்லப்படுகிறது. இதை தான் கர்ம வினை என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதன்படி நாம் இந்த ஜென்மத்தில் செய்யும் பாவங்கள் அடுத்து வரும் நம் சந்ததியினர் வரை தாக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால் இப்போதைய காலத்தில் நாம் புண்ணியத்தை சேர்க்கவில்லை என்றாலும் , நம்முடைய சந்ததியினருக்கு பாவத்தை சேர்க்காமல் இருப்பது பெரிய காரியம் என்று சொல்லப்படுகிறது.

நாம் செய்யும் ஒரு செயல் மற்றவரை துன்பத்திற்கு உள்ளாக்கும் எனத் தெரிந்து செய்யும் ஒவ்வொன்றும் பாவத்தின் கணக்கிலே சேரும். ஆகையால் முடிந்த வரையில் நாம் யாருடைய துன்பத்திற்கும் ஆளாகாமல் நம்முடைய வாழ்க்கையை நல்ல முறையில் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் பாவமே செய்யாமல் வாழ முடியுமா? என்றால் அது கொஞ்சம் கடினம் தான். நாமும் ஒரு சில நேரங்களில் தெரியாமல் ஏதேனும் ஒரு பாவத்தை செய்து விடுகிறோம் தான்.

- Advertisement -

அதுமட்டுமின்றி நம் முன்னோர்கள் செய்த பாவங்கள் முதல் இந்த பிறவியில் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் கூட தொலைந்து போக இந்த ஒரு எளிய பரிகார முறையை செய்யலாம். இப்போது தெரியாமல் செய்த பாவங்கள் தொலைந்து போகவும் நம் முன்னோர்கள் செய்த பாவங்கள் தொலையவும் என்ன செய்ய வேண்டும் என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாவங்கள் தொலைந்து புண்ணியம் சேர

இந்த பரிகாரத்தை வீட்டில் பெண்கள், ஆண்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இதை இரவு உறங்க செல்வதற்கு முன்பு தான் செய்ய வேண்டும். அதுவும் வீட்டிற்கு வெளியில் நிலை வாசலில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

இதற்கு நீங்கள் கருப்பட்டியை வாங்கி தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கருப்பட்டியை இரவு அனைத்து வேலையும் முடித்த பிறகு நிலை வாசலில் உள்ளே நீங்கள் நின்று கொண்டு கருப்பட்டியை வாசலுக்கு வெளியே கொஞ்சமாக தூவி விட்டு வந்து விடுங்கள். அவ்வளவு தான் இது மிக மிக எளிய பரிகாரம் தான். இதை எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம் தொடர்ந்து செய்யலாம்.

இந்த பரிகாரத்தால் நம்முடைய பாவங்கள் தொலையுமா? என்று கேட்கலாம். நிச்சயமாக தொலையும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஏனெனில் நாம் தூவும் இந்த இனிப்பை எறும்புகள் வந்து உண்ணும். எறும்புகள் ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் அந்த உணவை இட்டோருக்கு நன்றி சொல்வதுடன், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டுவதாக ஐதீகம் உண்டு.

- Advertisement -

அந்த வகையில் இந்த இனிப்பை எறும்புகள் எடுத்து உண்ணும் பொழுது நிச்சயம் அவைகள் வேண்டிக் கொள்ளும். அந்த வேண்டுதல் உங்களுடைய கர்ம பலன்களை குறைக்கும். இந்த ஜென்மத்தில் நீங்கள் தெரியாமல் செய்த பாவங்களை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி வாயில்லா பூச்சிகள், வண்டுகள் போன்றவையும் இதை உண்ணும் போது அதற்கான பலனும் சேர்த்து உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தங்கம் தங்க வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டியது

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பாவங்கள் தொலைவதோடு மட்டுமின்றி வீட்டிற்கும் நல்ல லக்ஷ்மி கடாட்சம் தரும் என்று சொல்லப்படுகிறது. இதனால் வீட்டில் இருக்கும் தேவையற்ற மனக்கசப்புகள் நீங்கி நல்ல சூழ்நிலை நிலவும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதை செய்யும் போது உங்களுக்கே இது போன்ற மாற்றங்கள் தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -