வீட்டில் தங்கம் தங்க வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டியது

guru bhagavan Gold
- Advertisement -

தங்கம் என்பது வெறும் அழகியல் சார்ந்த விஷயம் மட்டும் இல்லை. இந்த தங்கமானது முதலீடாகவும் அதை நேரத்தில் மிகப்பெரிய சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் தான் தங்கத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. அதை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இப்படி ஆர்வமும் ஆசையும் அதிகரிக்க அதிகரிக்க தான் அதை சேமிப்பதற்கான வழியும் குறைந்து கொண்டே செல்கிறது. தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்த உடனே இப்போது எல்லாம் வாங்க முடிவதில்லை. அதன் விலையும் அந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஆகையால் சாதாரணமானவர்களுக்கு இன்று தங்கம் வாங்குவதெல்லாம் எட்டாக்கனியாகத்தான் உள்ளது.

- Advertisement -

இந்த தங்கம் அதிக அளவில் சேர வேண்டும் நம்மிடம் தங்கம் நிலைத்து நிற்க வேண்டும் என நினைத்தால் நம்முடைய ஜாதகத்தில் குரு பகவான் உடைய அனுகிரகம் தேவை என்று சொல்லப்படுகிறது அதாவது தங்கத்திற்கான அதிபதி எனில் குரு பகவான் தான். ஆகையால் அவரின் அருளை நாம் முதலில் பெற வேண்டும். அதைப் எப்படி பெறுவது என்பதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தங்கம் அதிகம் சேர

இந்த தங்க நகைகள் சேர வேண்டுமெனில் குரு பகவான் அருள் வேண்டும். அந்த அருளை முழுமையாக பெற வாய்ப்புள்ளவர்கள் நிச்சயம் திருச்செந்தூர் ஆலயம் சென்று வாருங்கள். ஏனெனில் குரு ஸ்தலமாக விளங்குவது அந்த ஆலயம் தான். அத்துடன் இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதற்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஹேரை தான் சிறந்த நேரம். இந்த பரிகாரத்தை நீங்கள் பணம் நகை வைக்கும் இடத்தில் தான் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் ஒரு சொம்பு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் எட்டு ஒரு ரூபாய் நாணயம், எட்டு மஞ்சள், இரண்டு ஏலக்காய் அனைத்தையும் சேர்த்த பிறகு தண்ணீரை கைகளில் வைத்து மற்றொரு கையால் மூடி விடுங்கள்.

இப்போது கண்களை மூடி ஓம் சுதர்சனாய நமஹ ஓம் மஹாலக்ஷ்மி தாயே நமக என்று இந்த மந்திரத்தை 16 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த சொம்பில் உள்ள தண்ணீரை பணம் வைக்கும் இடத்தில் தெளித்த பிறகு, வீடு முழுவதும் தெளித்து விடுங்கள்.

- Advertisement -

இதனால் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் சுக்கிர ஹோரையில் செய்வதால் சுக்கிர பகவானுடைய அனுகிரகம், குரு பகவான் அனுபவம் அனைத்தும் கிடைத்து தங்கம் மலை மலையாக வீட்டில் குவிய கூடிய யோகத்தை தரும்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரன் அருள் பெற்று பணவரவை அதிகரிக்க பரிகாரம்

இந்த பரிகாரத்துடன் நீங்கள் தங்கம் சேர்க்க அல்லது வாங்க எடுக்க வேண்டிய முயற்சிகளை எடுங்கள். நிச்சயம் வெற்றியில் தான் முடியும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -