இனி பீர்க்கங்காய் வாங்கினால் இது போல கடையல் செய்து பாருங்க. இதெல்லாம் ஒரு காயா அப்படின்னு சொன்னவங்க கூட இனிமே இந்த காய வாங்கி தந்து சமைக்க சொல்லுவாங்க.

peerkkangai kadaiyal
- Advertisement -

காய்கறிகளிலே இந்த பீர்க்கங்காய் நீர்ச்சத்து மிக்கது. இது உடல் எடையை குறைக்க, கொழுப்பை கரைக்க அதிக அளவு உதவி செய்யும். அது மட்டுமின்றி இதன் தோலை வைத்து துவையல் அரைத்தாலும் அத்தனை அட்டகாசமாக இருக்கும். என்ன தான் இருந்தாலும் நம்மில் பலருக்கும் பீர்க்கங்காய் என்றால் பிடிக்காது. பீர்க்கங்காய் மட்டுமல்ல பொதுவாக காய்கறிகள் என்றாலே அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். அப்படியானவர்கள் கூட இந்த முறையில் கடையல் செய்து கொடுத்தால் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் பீர்க்கங்காய் கடையல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த கடையல் செய்ய முதலில் கால் கிலோ பீர்க்கங்காய் வாங்கி மேல் தோல் நீக்கி சின்ன சின்னதாக அரிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தோலை நீங்கள் துவையலாகவும் அரைத்து சாப்பிடலாம் வீணாக்க தேவையில்லை. அதேபோல் 10 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு இது இரண்டையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த கடையல் செய்ய அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானவுடன் கால் டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு கால் டீஸ்பூன் வெந்தயம், அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து அதுவும் பொரிந்த பிறகு உரித்து வைத்த வெங்காயம் பூண்டு இரண்டையும் சேர்த்து வதக்குங்கள்.

இத்துடன் இரண்டு காய்ந்த மிளகாய், இரண்டு பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை இவைகளையும் சேர்த்த பிறகு வெங்காயம் சாஃப்ட் ஆகும் வரை வதக்க வேண்டு.ம் அதன் பிறகு ஒரு பெரிய மீடியம் சைஸ் தக்காளியை சின்னதாக அரிந்து அதையும் இதில் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த பீர்க்கங்காயும் சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் நன்றாக கலந்த பிறகு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை வேக விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து இதை அடுப்பில் இருந்து இறக்காமல் ஒரு சிறிய கரண்டி அல்லது மத்து வைத்து லேசாக இதை கடைந்து விடுங்கள். அதன் பிறகு கரைத்து வைத்த புளித்தண்ணீரை இதில் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடுங்கள். இப்போது மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டாம்.

இதையும் படிக்காலமே: பெங்களூர் ஹோட்டல்களில் இட்லிக்கு சாம்பார் இப்படித்தான் வெப்பாங்க! நீங்களும் இப்படி ஒருமுறை சாம்பார் வச்சிங்கன்னா, பிறகு தினம் தினம் உங்க வீட்டில பெங்களூரு சாம்பாரு தான்.

பீர்க்கங்காய் கடைந்த பிறகு ஐந்து நிமிடம் கொதிக்க வேண்டும் அதன் பிறகு கொஞ்சம் கொத்தமல்லியை பொடியாக அரிந்து இதன் மேல் தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான பீர்க்கங்காய் கடையல் தயார். இந்த பீர்க்கங்காய் கூட்டு இட்லி தோசை போன்றவற்றின் கூட வைத்து சாப்பிடலாம் கத்தரிக்காய் பஜ்ஜி செய்வது சாப்பிடுவது போல் நன்றாக இருக்கும். சாதத்துடன் வைத்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -