பெண் பிள்ளைகள் வசீகரத் தோற்றத்தை பெற சிவன் வழிபாடு

sivan3
- Advertisement -

பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தான் இந்த வழிபாடா. ஆண் பிள்ளைகளுக்கு செய்யக்கூடாதா என்று சில பேர் கேட்கலாம். குறிப்பாக இந்த வழிபாடு பெண் பிள்ளைகளுக்காக மட்டும்தான். சில வீடுகளில் பெண் பிள்ளைகள் மந்தமாக இருப்பார்கள். அவர்களுக்கு அழகு, அறிவு, திறமை, சுறுசுறுப்பு எல்லாமே குறைந்த அளவில் இருக்கும். அதை குறை கூற வில்லை.

இருந்தாலும் பெண் பிள்ளைகள் லட்சணத்தோடு மகாலட்சுமி அம்சம் பொருந்தி அழகாக சுறுசுறுப்பாக அறிவாற்றலோடு இருந்தால்தானே அழகு. சில பெண் பிள்ளைகளுக்கு கடவுள் சில குறைகளை கொடுத்து விடுகின்றான். அந்த வரிசையில் உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் அழகிலும் அறிவிலும் திறமையிலும் குறைவாக இருக்கிறார்களா. கவலையே படாதீங்க.

- Advertisement -

இந்த வழிபாட்டை சிரமம் பார்க்காமல் ஒருமுறை செய்தீர்கள் என்றால், உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு அறிவும் அழகும் திறமையும் ஆற்றலும் தானாக வந்துவிடும். அந்த வழிபாடு என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படியுங்கள்.

பெண் பிள்ளைகள் திறமையாக வளர வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை அன்று சதய நட்சத்திரம் வரும் படி நாளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். இது கொஞ்சம் கஷ்டமான வழிபாடாக இருந்தாலும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் செய்து விட்டால் உங்கள் பெண் பிள்ளைக்கு இருக்கும் பிரச்சனை சரியாகிவிடும்.

- Advertisement -

நிறைய சிவன் கோவில்களில் சூரிய பகவானின் வெளிச்சம், சிவலிங்கத்தின் மீது விழும். சில நாட்களில் அரிதாக இந்த அதிசயம் நடக்கும். அப்படி ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சிவன் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சதய நட்சத்திரத்தில் சென்று அந்த சிவபெருமானை வழிபாடு செய்தால் உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் திறமைசாலியாக மாறிவிடுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

நிறைய கோவில்களில் சிவபெருமானின் மீது இந்த சூரியன் ஒளி, ஒரு சில நாட்களில் விழும். உங்கள் வீட்டின் அருகில் இப்படிப்பட்ட கோவில் எங்கே இருக்கிறது என்பதை மட்டும் கொஞ்சம் தேடி கண்டுபிடிங்க. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நீங்கள் ஞாயிற்றுக்கிழமை சதய நட்சத்திரத்தன்று சென்று அந்த சிவபெருமானை வழிபாடு செய்தால் போதும். உங்கள் குழந்தைக்கு இருக்கும் அழகு சார்ந்த அறிவு சார்ந்த பிரச்சனைகள் சரியாகிவிடும்.

- Advertisement -

எந்த பெண் பிள்ளைக்கு பிரச்சினையாக இருக்கிறதோ, அந்த குழந்தையை கூட்டிச் சென்று அந்த சிவபெருமானின் முன்பு அமர்ந்து, அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து அந்தப் பெண் குழந்தை திறமைசாலியாக மாற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து சிறிது நேரம் அந்த கோவிலில், அந்தப் பிள்ளையைப் பெற்றவர்கள் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், உங்கள் பெண் பிள்ளைக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் பிள்ளைகளுக்கு அழகு குறைவாக இருக்கிறது என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். சில பெண் பிள்ளைகளுக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் இருக்கும். சில ஊனங்கள் பிறவியிலேயே இருக்கும். அதற்கெல்லாம் சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு ட்ரீட்மென்ட் போய்க்கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட பிள்ளைகளை எல்லாம் குணமாக்கவும் இந்த வழிபாடு நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: தீய சக்தியை விரட்டி அடிக்கும் லட்சுமி நரசிம்மர்.

ஒருவேளை உங்களால் இந்த சூரிய ஒளி படக்கூடிய கோவில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலுக்கு ‘ஞாயிற்றுக்கிழமையும் சதய நட்சத்திரமும்’ சேர்ந்து வரும்போது சென்று வழிபாடு செய்தாலும் நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -