பெண்கள் அழகாக இருக்க ஆன்மீக குறிப்பு

mahalashmi10
- Advertisement -

பெண்கள் என்றாலே அவர்கள் பேரழகை கொண்டவர்கள் தான். பெண்கள் மகாலட்சுமியின் சொரூபத்தைக் கொண்டவர்கள். அழகு என்ற வார்த்தைக்கு சொந்தம் கொண்டாட கூடிய ஆண் என்றால் அது அழகன் முருகன் மட்டும் தான். அடுத்தபடி அழகு என்ற வார்த்தை சொன்னாலே அது பெண்களை குறிப்பதாகத்தான் அர்த்தம்.

சில பெண்கள் இயற்கையாகவே பேரழகை கொண்டவர்களாக இருப்பார்கள். சில பெண்களுக்கு அந்த அழகு கொஞ்சம் குறைவாக இருக்கும். இதை ஒரு குறையாக சொல்லவில்லை. ஆனால் அழகு குறைவாக இருக்கும் பெண்கள், தங்களுடைய அழகை பேரழகாக மாற்றிக் கொள்வதற்கு செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

சில பெண்களுக்கு தான் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை இருக்கும். அப்படி கிடையாது. பூமியில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் அழகானது தான். நீங்கள் பெண்களாக இருந்து ஒரு வேலை உங்களுக்கும் இந்த தாழ்வு மனப்பான்மை இருக்கிறது, உங்களுடைய அழகும் குறைவாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

பெண்களுக்கு அழகு தரும் குறிப்பு

மயில். இது அழகான ஒரு பறவை. எல்லோருக்கும் பிடித்தமான பறவை. அழகன் முருகனது வாகனம். கண்ணன் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் இறகு மயிலிறகு. மயில் தோகை விரித்து ஆடும் போது அந்த அழகை ரசிக்க நமக்கு இரண்டு கண்கள் பத்தாது. இந்த மயில் இறகை அடிக்கடி யார் பார்த்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு அழகு கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உண்மையான மயிலிறகை வாங்கி வந்து உங்களுடைய வீட்டில், உங்கள் கண்களுக்கு அடிக்கடி படும்படியான இடங்களில் அப்படியே சுவற்றில், ஒரு டேப் போட்டு ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அழகான ஒரு பவுலில் ஒரு கட்டாக மயிலிறகை வாங்கி போட்டு வீட்டில் வைக்கலாம்.

நீங்கள் தூங்கக்கூடிய இடத்தில் தலையணைக்கு அடியில் இந்த மயிலிறகை வைத்து தூங்கலாம். நீங்கள் படிக்கின்ற மெத்தைக்கு பக்கத்தில் இந்த மயிலிறகை ஒட்டி வைக்கலாம். இப்படி மயிலிறகு உங்களோடு எந்த அளவுக்கு ஒன்றிணைந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு உங்களுடைய அழகு கூடிக் கொண்டே செல்லும் என்பது ஒரு சில ஆன்மீகவாதிகளின் கருத்தாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உதாரணத்திற்கு அந்த காலத்தில் மின்விசிறி வசதி எல்லாம் கிடையாது. அதனால் மயிலிறகை சாமரமாக செய்து அதை வீசுவார்கள். மயிலிறகில் இருந்து வெளிவரக்கூடிய காற்று மகாராணிக்கு காற்றை கொடுப்பதோடு, இளமையையும் அழகையும் சேர்த்து தரும் என்ற நம்பிக்கை இருந்தது. இதனால் தான் பெண்களின் அழகை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்திக்கொள்ள இந்த மயிலிறகை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள்.

பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்க இன்னொரு அழகான குறிப்பு. மரிக்கொழுந்து, பூக்கள்விற்கக்கூடிய கடைகளில் இது கிடைக்கும். இதுவும் ஒரு பூ வகையை சேர்ந்ததுதான். ஆனால் பச்சை நிறத்தில் இலை போல தான் பார்ப்பதற்கு இது இருக்கும். ஒரு கட்டுமரிக்கொழுந்து 20 ரூபாய், 30 ரூபாய் அந்த விலையில் தான் விற்கும். இந்த மரிக்கொழுந்தை வீட்டிற்கு வாங்கி வந்து, நிழலிலேயே அதை காய வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் தினமும் இந்த மரிக்கொழுந்து கொழுந்து பொடியை சிறிதளவு சேர்த்து அந்த தண்ணீரில் குளித்து வந்தாலும் பெண்களின் அழகு கூடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். பெண்களாக பிறந்தவர்கள் யாருமே அழகில் குறைந்தவர்கள் கிடையாது. எல்லோருமே அந்த மகாலட்சுமியின் ஸ்ரூபமானவர்கள் தான்.

இதையும் படிக்கலாமே: சித்திரை மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை வழிபாடு

மீண்டும் அதை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம். இருப்பினும் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது என்னும் பட்சத்தில் மேல் சொன்ன அழகு குறிப்புகள் எல்லாம் உங்களுடைய அழகை இன்னும் கொஞ்சம் அழகாக்குவதற்கு உதவி செய்யும் என்பதற்காகத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த அழகு குறிப்புகள் உங்களோடு பகிரப்பட்டுள்ளது தேவைப்படுபவர்கள் இதை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -