செல்வம் பெருக தேய்பிறை ஏகாதசி தீப வழிபாடு

perumal agal dheepam
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் திதிகளுக்கு மிக மிக முக்கியமான பங்கு உண்டு. அந்தந்த திதிகளுக்குரிய தெய்வங்களை அந்தந்த நாளில் வணங்கும் போது அதற்கான முழு பலனையும் பெறலாம். அந்த வகையில் ஏகாதசி திதி என்பது பெருமாளுக்கு உரியது. அன்றைய தினத்தில் நாம் பெருமாளை நினைத்து செய்யக் கூடிய அனைத்து வழிபாடுகளும் நல்ல பலனை தரும்.

இந்த வருடத்தின் முதல் ஏகாதசி திதியானது நாளை 7.1.24 அன்று வருகிறது. இந்த நாளில் நாம் வீட்டில் ஏற்றக் கூடிய இந்த ஏழு தீபத்தினால் பெருமாளின் அருளை பரிபூரணமாக பெற்று நல்ல செல்வ வளத்துடன் வாழலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் எங்கு ஏற்ற வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வசியம் ஏற்பட ஏகாதசி தீபம்

இந்த வழிபாட்டிற்கு நாம் ஏழு தீபங்கள் ஏற்ற வேண்டும். ஏழு தீபங்களையும் அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தான் ஏற்ற வேண்டும். முதலாவது தீபத்தை நாளை காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து முடித்த பிறகு பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் பூஜையறையில் ஒரு நெய் தீபத்தை ஏற்றுங்கள்.

அடுத்து வீட்டில் துளசி செடி இருந்தால் அந்த இடத்தில் ஒரு தீபம் ஏற்றுங்கள். அதே போல் வீட்டின் நிலை வாசலில் ஒரு நெய் தீபத்தை ஏற்றுங்கள். சிலர் வீட்டில் சாலிகிராம கல், எந்திரம், வலம்புரி சங்கு போன்றவற்றை வைத்திருப்பார்கள். இவையெல்லாம் இருந்தால், இவை ஒவ்வொன்றிற்கும் முன்பும் தனித்தனியாக ஒவ்வொரு நெய் தீபம் ஏற்றுங்கள்.

- Advertisement -

இத்துடன் பூஜை அறையில் பெருமாள் படம் வைத்து வழிபடுபவர்கள். அந்த படத்திற்கு முன்பும் தனியாக ஒரு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். மொத்தத்தில் ஏழு நெய் தீபம் இதில் உங்களால் எத்தனை தீபம் ஏற்ற முடியுமோ அந்த தீபத்தை மட்டும் ஏற்றினால் போதும். சிலர் வீட்டில் இந்த சாலிகிராம கல், எந்திரம், துளசி செடி போன்ற போன்ற வைகள் இருக்காது. அப்படியானவர்கள் உங்கள் வீட்டில் என்ன உள்ளதோ அதற்கு முன்பாக இந்த தீபங்கள் ஏற்றுங்கள்.

இவையெல்லாம் எதுவும் இல்லை என்பவர்கள் பிரம்ம முகூர்த்த தீபம் பூஜை அறையில் ஏற்றக் கூடிய தீபம் நிலைவாசவல் தீபம் இவற்றை ஏற்றுங்கள். அதுமட்டுமின்றி அனைவர் வீட்டிலும் பெருமாள் படம் நிச்சயமாக இருக்கும். அவருக்கு முன் ஒரு தீபம் என இந்த தீபங்களையாவது தவறாமல் ஏற்றி விடுங்கள். பெருமாளை நினைத்து ஏற்றக் கூடிய இந்த ஏகாதிசி திதி தீபமானது பெருமாளின் அருளை உங்களுக்கு பரிபூரணமாக பெற்று தரும்.

இதையும் படிக்கலாமே: பணப்பெட்டியில் பணம் சேர பரிகாரம்

அத்துடன் பண வசியம் ஏற்பட்டு பணம் உங்களுக்கு தாராளமாக வந்து கொண்டு இருக்க இந்த தீப வழிபாடு துணை புரியும். இந்த வழிப்பாட்டு முறைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இதை செய்து முழுபலனை அடையுங்கள்.

- Advertisement -