பெண்களிடம் எப்போதும் பணம் தங்க பர்சில் இதை வச்சுக்கோங்க.

cash1
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். அவர்களுடைய கையில் எப்போதும் காசு இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் ஆண்கள் மட்டும் சம்பாதித்தாலும் சரி, அந்த வருமானத்தை குடும்ப தலைவியிடம் கொடுத்து, குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த குடும்பம் சீர்படும். நீங்க வேணும்னா மேல் சொன்ன இந்த விஷயத்தை முயற்சி செய்து பாருங்கள்.

உங்களுடைய வீட்டில் சேமிப்பு அதிகமாகும். பணம் காசு அதிகம் சேரும். ஆனால், சில குடும்ப தலைவிகளுக்கு கையில் பணம் தங்காது. கையில் வந்த பணம் வீண்விரயமாகிக் கொண்டே இருக்கும். அவர்கள் எல்லாம் பணத்தை சேமிக்க வேண்டும் என்றால் என்ன செய்யணும். தாந்திரீக ரீதியான, ஆன்மீகம் சொல்லும் சின்ன பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

பெண்கள் கையில் பணம் சேர பரிகாரம்

வெள்ளிக்கிழமை காலையிலேயே சுத்தபத்தமாக எழுந்து குளித்து விடுங்கள். முந்தைய நாள் வியாழக்கிழமையே உங்களுடைய கையில் மருதாணி இட்டுக்கொள்ளுங்கள். இந்த பரிகாரம் செய்யும் போது கையில் மருதானி இருந்தால் அது இன்னும் மகாலட்சுமி அம்சமாக இருக்கும். பிங்க் நிறத்தில் சதுர வடிவில் ஒரு துணி எடுத்துக்கோங்க.

அதில் ஒரு சின்ன ஏலக்காய், சின்ன கட்டி பெருங்காயம், வைத்து முடிச்சு போட்டு இந்த முடிச்சை மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து, குலதெய்வத்தையும், லட்சுமி தேவியையும் மனதார வேண்டி அந்த முடிச்சை எடுத்து பரிசில் வச்சுக்கோங்க. வெள்ளிக்கிழமை எப்போதும் போல பூஜை செய்வீர்கள் அல்லவா.

- Advertisement -

அந்த பூஜையில் இந்த முடிச்சை வைத்து எடுத்து பர்ஸில் வைக்கும் போது, உங்களுடைய பர்ஸில் மேலும் மேலும் நிறைய பணம் சேரும். பணம் வீண்விரயம் ஆகாமல் இருக்கும். இந்த முடிச்சை மூன்று வாரத்திற்கு ஒருமுறை மாற்றி விடுங்கள். ஏலக்காயின் வாசம் போனால் பரிகாரத்துக்கு பவர் இருக்காது.

சில பெண்களுக்கு சில சமயத்தில் உடம்பு அசதியாக இருக்கும். ஏதோ கண்திருஷ்டி பட்டது போல இருக்கும். முகம் தெளிவாக இருக்காது, பொலிவாக இருக்காது. அப்படிப்பட்ட சமயத்தில் குளிக்கின்ற தண்ணீரில் கொஞ்சமாக படிகார கட்டியை தூள் செய்து போட்டு கரைத்து, பிறகு அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தீய சக்திகளை விரட்டி பணவரவை அதிகரிக்க வாராகி அன்னையின் மந்திர வழிபாடு

இதை செய்தால் பெண்கள் உடம்பை பிடித்த தரித்திரம் விலகும். பெண்கள் உடம்பை தரித்திரம் அடைந்து இருந்தாலும் கையில் காசு சேராது என்பது குறிப்பிடத்தக்கது. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -