பெண்கள் இந்த திலகத்தை மட்டும் வைக்கவே கூடாது, இந்த திலகத்தை வைத்து பூஜை செய்யும் பெண்கள் வீட்டில் செல்வம் தங்காமல் போவதுடன், தெய்வ சக்தியும் பலம் இழந்து விடும்.

- Advertisement -

பெண்கள் தங்களை என்ன தான் அழகு படுத்திக் கொண்டாலும் கடைசியில் அவர்கள் வைக்கும் நெற்றி பொட்டில் தான் அழகானது முழுமை பெறும். அந்த பொட்டை எப்படி வைத்தால் அவர்களுக்கு லட்சுமி கடாட்சமும், வீட்டிற்கும் சுபிட்சமும் கிடைக்கும் என்பதை பற்றியும், எந்த பொட்டை அவர்கள் வைத்தால் வீட்டில் துன்பம் வரும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் அதற்கு பதில் ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் பழக்கம் நடைமுறையில் வந்து விட்டது. ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் எந்த ஒரு பயனும் கிடையாது. அதிலும் இந்த மெருன் கலர் ஸ்டிக்கர் பொட்டு வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. இப்போது பொட்டு இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு வைத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அழகு வேண்டுமானாலும் இருக்கும் என்று நம்பி கொள்ளலாமே தவிர, உண்மையில் அது நல்லது இல்லை.

- Advertisement -

பெண்கள் வைக்ககூடாத திலகம்:
பொட்டு என்றாலே அது சிகப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் பெண்களை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை படுத்தும் விதமாகத் தான் இந்த சிகப்பு பொட்டு வைத்தார்கள். அது மட்டும் சிகப்பு தான் மங்கள நிறம். இந்த நிற குங்குமத்தில் தான் மஹாலக்ஷ்மி தாயாரும் வாசம் செய்கிறார். நெற்றி நிறைய பொட்டு வைத்து இருப்பவர்களை பார்த்து தான் மகாலஷ்மி போல இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். அப்படியானால் அந்த இடத்தில் மஹாலக்ஷ்மி இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்.

பெண்கள் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொள்வதே தவறு என்னும் போது, கடவுளின் படத்திற்கு கூட ஸ்டிக்கர் பொட்டை வைத்து பழகி விட்டோம். இதை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, சுத்தம் செய்வதும் சுலபம், வேலை நேரமும் குறைவு என்று ஆயிரம் காரணங்களை சொல்லி கடவுளுக்கும் கூட ஸ்டிக்கர் பொட்டு வைத்து பழகி விட்டோம். இது கண்டிப்பாக செய்யக் கூடாத விஷயம், பொட்டு என்பது பெண்களுக்கும், கடவுளுக்கும் ஒரு வரப் பிரசாதம். நீங்கள் இந்த பொட்டை பயன்படுத்துபவராக இருந்தால் இந்த முறையை கண்டிப்பாக மாற்றிக் கொள்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது.

- Advertisement -

இப்போது வழிபாடுகளில் கூட இந்த ஸ்டிக்கர் பொட்டு வந்து விட்டது. அதாவது சில வழிபாடுகளில் ஸ்வாமி படத்தில் ஒரு நாளைக்கு ஒரு பொட்டு வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நாட்கள் பூஜை செய்வார்கள், அத்தகைய வழிபாட்டிற்கு கூட இப்போது எல்லாம் தினம் ஸ்டிக்கர் பொட்டை வைத்து பயன்படுத்துகிறார்கள் இப்படி செய்வதின் மூலம் வழிபாடு செய்ததற்கான பலனே இவர்களுக்கு கிடைக்காது.

பெண்கள் குங்குமப் பொட்டை வைக்க முயற்சி செய்ய வேண்டும். வெளியில் செல்லும் போது வைக்க வில்லை என்றாலும் வீட்டில் இருக்கும் போதாவது இந்த பொட்டை வைக்க வேண்டும். இதில் ஆன்மிகம் மட்டும் இல்லை அறிவியலும் கலந்து இருக்கிறது.

- Advertisement -

இந்த குங்குமத்தை பெண்கள் இரண்டு புருவங்களுக்கு இடையில் வைக்கும் போது அங்கு உள்ள சுரப்பிகள் தூண்டப்பட்டு மூளையில் உள்ள நரம்பு அனைத்தும் நன்றாக செயல்பட உதவும். இதனால் அவர்கள் உடல் மனம் இரண்டுமே அமைதியான நிலையில் வைத்து இருக்க இந்த பொட்டு பெரிதும் உதவும். அது அழகாக வட்டமாக உங்களுக்கு வரவில்லை, இத்தனை நாட்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்து பழகி விட்டோம் இனி மாற்ற முடியாது என்றால், மெரூன் நிறத்திற்கு பதிலாக சிகப்பு நிறத்தை வைத்தால் உங்களுக்கும் நல்லது குடும்பத்திற்கும் நல்லது. அப்படி வைக்கும் ஸ்டிக்கர் பொட்டின் நடுவில் கொஞ்சம் குங்குமத்தை வைத்து விடுங்கள் அது பார்க்கவும் தெரியாது, அதே நேரத்தில் குங்குமப் பொட்டு உங்கள் நெற்றியில் வைத்தது போலவும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த சத்தம் உங்கள் காதில் விழுந்தால் தாமதிக்காமல் உடனே இதை செய்து விடுங்கள். நமக்கு வரவிருக்கும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

நாம் சில விஷயங்களை இது தானே என்று சாதாரணமாக நினைத்து விடுகிறோம், ஆனால் பெரிய பிரச்சனைக்களுக்கு இந்த சின்ன சின்ன விசயங்கள் தான் காரணமாகவே இருக்கும். அது போலத் தான் இந்த பொட்டும். இப்படித் தான் வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் பெரிய வரையறையையே வைத்திருந்தார்கள் அதையெல்லாம் கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் குறைந்தது இதையாவது செய்துவது குடும்பத்திற்கு நல்லது.

- Advertisement -