பெண்களுக்கான துர்க்கை அம்மன் வழிபாடு

durgai1
- Advertisement -

இந்த பூமியில் கஷ்டப்படுவதற்காகவே அவதரித்த ஜென்மம் என்றால் அது பெண் ஜென்மம், அப்படி என்று தான் நம்மில் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது தவறு. பெண்கள் என்றால் அவர்கள் அம்பாளுக்கு சமமானவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும், மரியாதையும், கொடுத்து அவர்களை மதித்து, எந்த குடும்பத்தில் ஒழுங்காக வழி நடத்துகிறார்களோ, அந்த குடும்பம் சீரும் சிறப்புமாக, செல்வ செழிப்போடு இருக்கும்.

பெண்களை இழிவாக நடத்தக்கூடிய குடும்பத்தில், நிச்சயம் கஷ்டங்கள் தொடரத்தான் செய்யும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நீங்களும் பெண்ணாக இருந்து, உங்களுடைய வாழ்வில் படாத கஷ்டத்தை படுபவர்களாக இருந்தால், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்காக மட்டும் தான். வாழ்க்கையில் உங்களுக்கு எவ்வளவு பெரிய துன்பம் இருந்தாலும் சரி, அதை சரி செய்ய இந்த வழிபாடு கை கொடுக்கும்.

- Advertisement -

நீங்கள் திருமணமான பெண்ணாக இருக்கலாம். திருமணம் ஆகாத பெண்ணாக இருக்கலாம், அல்லது குழந்தை பெற்ற தாய்மார்களாக இருக்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களாக இருக்கலாம். யாராக இருந்தாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

பெண்கள் செய்ய வேண்டிய துர்க்கை அம்மன் வழிபாடு

பெண்கள் என்றாலே அவர்கள் அந்த அம்பாளின் ஸ்வரூபம். நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு துர்க்கை அம்மன் வழிபாடு. ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று, 2 மண் அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அந்த அம்பாளுக்கு முன்பாக சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய பிரச்சினைகளை அம்பாளிடம் இறக்கி வையுங்கள்.

- Advertisement -

உங்களுடைய சொந்த தாயிடம் பிரச்சனைகளை சொல்வது போல, அந்த அம்பாளிடம் உங்களுடைய கஷ்டங்களை முறையிட வேண்டும். வழிபாடு இவ்வளவுதான். 27 வாரம் அம்பாளுக்கு செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யக்கூடிய பெண்கள் வாழ்க்கையில் தீர்க்க முடியாத கஷ்டங்கள் என்பது சுத்தமாக வராது. அப்படியே ஒரு சில பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடக்கூடிய தெம்பும் மனப்பக்குவமும் பெண்களிடத்தில் வந்துவிடும்.

27 வாரம் செய்யும்போதே இவ்வளவு பலன் கிடைக்கிறது என்றால், உங்கள் வாழ்நாள் முழுவதும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் துர்க்கை அம்பாளுக்கு விளக்கு போட்டால், சொல்லவே வேண்டாங்க. அளவில்லாத அம்பாளின் ஆசிர்வாதத்தை நீங்கள் பெறுவீர்கள். வாழ்க்கையில் உங்களுக்கு படிப்பு பிரச்சனையாக இருக்கலாம், வேலை பிரச்சினையாக இருக்கலாம், கணவர் பிரச்சனையாக இருக்கலாம், மாமியார் நாத்தனார் கொடுமையாக இருந்தால் கூட, எல்லா பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்கு ஒரு தைரியத்தை கொடுக்கும் வழிபாடு இந்த துர்க்கை அம்மன் வழிபாடு.

- Advertisement -

உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் எலுமிச்சம் பழங்களை வாங்கி கோர்த்து அம்பாளுக்கு மாலை போடுங்க. செவ்வரளி பூக்களை வாங்கி கட்டி மாலையாக போடுங்கள். முடிந்த போது குங்கும அர்ச்சனை செய்யுங்கள். ஆனால் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை ஆனால் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்பாளை மட்டும் வழிபாடு செய்ய மறக்காதிங்க.

கோவிலுக்கு போக முடியல அப்படி என்றால் கூட வீட்டில் பூஜை அறையிலேயே நீங்கள் எப்போதும் ஏற்றக்கூடிய விளக்கை ஏற்றி அம்மா, துர்க்கை அம்மா, என்று மனதில் நினைத்து இந்த வழிபாட்டை செய்யக்கூடிய பெண்கள், அந்த துர்க்கை அம்பாளின் ஸ்வரூபமாகவே மாறி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: திருமணம் நடக்க ஹனுமன் வழிபாடு

வாழவே பிடிக்கல, இந்த பெண் ஜென்மமே பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள், மனதில் கூட நிம்மதியை கொடுக்கக்கூடிய வழிபாடு தான் இது. நம்பிக்கையோடு செய்யும் பெண்களுக்கு நிச்சயம் நல்ல வாழ்வு கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -