பெண்கள் தவறியும் கூட இந்த 3 தவறுகளை மட்டும் செய்யவே கூடாது. பெண்களின் முக ராசி, கை ராசி, அழகு குறைந்து போவதற்கு இது கூட ஒரு காரணம் தான்.

women
- Advertisement -

சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் அனைத்தும் பெண்களுக்கு மட்டும்தான் சொல்லப் பட்டுள்ளதா. ஆண்களுக்கு எதுவுமே இல்லையா? என்று, யோசிக்கும் பெண்களுக்கு சாஸ்திரமும் கிடையது, சம்பிரதாயங்களும் கிடையாது. ஒரு வீட்டினுடைய பெண்கள் தான், அந்த வீட்டிற்கு கண்கள். ஒரு பெண் எப்படி இருக்கின்றாளோ, அதன் அடிப்படையில் தான் அந்த குடும்பம் இருக்கும். அந்தப் பெண் செல்லக்கூடிய பாதையை பின் தொடர்ந்து தான் அந்த குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களும் செல்வார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை. இதை ஒப்புக் கொள்ளும் பெண்களுக்கு மட்டுமே இந்த ஆன்மீக ரீதியான பதிவு.

ஆணும் பெண்ணும் சமம் என்பதை யாரும் மறுக்கவில்லை. பெண்ணை அடிமையாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆண்களை அதிகாரத்தோடு இருக்கவேண்டும் என்றும் சொல்லவில்லை. பின் சொல்லக்கூடிய விஷயங்களை பெண்களாகிய நீங்கள் கடைப்பிடித்து வந்தால் உங்களுடைய குடும்பத்தில் ஏற்படக்கூடிய மாற்றம், உங்களுடைய மனதில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் உங்களுக்கே புரியும். உங்களுக்கு சரி என்று பட்டால் மட்டும் இதை பின்பற்றி கொள்ளலாமே தவிர, பெண்கள் கட்டாயம் இதை கடைபிடித்து தான் ஆக வேண்டும் என்று யாரும் உங்கள் மேல் திணிக்க வில்லை. சரி பதிவுக்கு செல்வோம்.

- Advertisement -

முடிந்தவரை பெண்கள் மாலை விளக்கு வைத்த பின்பு, அதாவது ஆறு மணிக்கு பின்பு தலைக்கு குளிக்க கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அடிக்கடி மாலை 6 மணிக்கு மேல் தலைக்கு குளிக்கும் பெண்களுடைய வசீகரம் குறையும் என்றும், பெண்களுடைய கைராசி முகராசி லட்சுமிகடாட்சம் குறைந்து போகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவரை தலைக்கு குளிக்கும் சமயத்தில் மாலை 6 மணிக்கு முன்பாகவே குளித்துவிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தலைக்கு அல்லாமல், மேல் மட்டும் குளஇப்பதாக இருந்தால் நீங்கள் இரவு நேரத்திலும் குளித்துக் கொள்ளலாம் தவறு கிடையாது.

women

மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது, இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வரக்கூடிய சூழ் நிலை என்ற சமயத்திலும், எதிர்பாராத சூழ்நிலையின் காரணமாக தலைக்கு குளிப்பது என்பது வேறு. அடிக்கடி 6 மணிக்கு மேல் காரணமே இல்லாமல் தலைக்கு குளிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக வீட்டிலிருக்கும் பெண்கள் தினம் தோறும் வீட்டில் விளக்கு ஏற்றி தீப வழிபாட்டினை கட்டாயம் செய்ய வேண்டும். குறிப்பாக திருமணமான பெண்கள் மாலை நேரத்தில் முகம் கழுவி பொட்டு வைத்து குங்குமம் வைத்து தீபம் ஏற்றும் போது அவர்களை அறியாமலேயே ஒரு லட்சுமி கடாட்சம் உண்டாகும். மன நிறைவு உண்டாகும். முக பொலிவு ஏற்படும். தினமும் தீபம் ஏற்றி தீப ஒளியை தரிசனம் செய்யாத பெண்களுடைய முகம் கலை இழக்கும். அக்னி பகவானை தரிசனம் செய்யாத, அந்த முகத்தில் மூதேவி பிடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

women1

கூடுமானவரை இரவு உடையை அணிந்து கொண்டு தீபம் ஏற்றும் பழக்கத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் தவிர்த்து பாருங்கள். உங்களுடைய மன நிலைமையில் சந்தோஷத்தில் நிச்சயமாகப் பல நல்ல மாற்றங்கள் தெரியும். முடிந்தவரை பகல் நேரத்தில் இரவு உடையை அணிந்து கொள்ளும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளும்.

deepam

வீட்டில் இருக்கும் பெண்கள் இதை செய்தால், உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகள் உங்களை பார்த்து இந்த நல்ல பழக்க வழக்கங்களை அவர்களும் கற்றுக்கொள்வார்கள். அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைகள் அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும். ஒரு நல்லதை நம் குடும்பத்திற்கு விட்டுச்சென்ற பெருமையும் நமக்கு கிடைக்கும். மேல் சொன்ன விஷயங்களை பெண்கள் பின்பற்றும் போது அவர்களுக்கு ஆன்மீக ரீதியாக நிறைய மாற்றங்கள் ஏற்படுவதோடு, பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கூட நிறைய மாற்றங்கள் உண்டாகும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -