பெண்கள் தினமும் இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தாலே போதும். அவர்களுடைய முகம் லட்சுமி கடாட்சதுடன் இருக்கும்.

kungumam-kumkum
- Advertisement -

குங்குமம் என்றாலே அது பெண்களுக்கு உரிய மங்களகரமான பொருள். திருமணமானவர்களாக இருந்தாலும், திருமணமாகாதவர்கள் ஆக இருந்தாலும், நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக்கொள்வது என்பது பெண்களுக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். இப்படி தினந்தோறும் பெண்கள் தங்களுடைய நெற்றியில் இட்டுக்கொள்ளும் குங்குமத்தை வசிய குங்குமம் ஆக எப்படி மாற்றுவது என்பதை பற்றிதான் ஆன்மீக ரீதியான ஒரு தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பின் சொல்லக்கூடிய முறைப்படி பூஜை செய்த குங்குமத்தை பெண்கள் தினம்தோறும் நெற்றியில் இட்டு வந்தால், அவர்களுடைய முகம் பொலிவாகும், அதாவது முகம் லட்சுமி கடாட்சம் தோடு இருக்கும். இந்த குங்குமத்தை இட்டுக் கொண்டு நீங்கள் எந்த நல்ல காரியத்திற்கு சென்றாலும் அது உங்களுக்கு வெற்றி தரக் கூடியதாக அமையும்.

வசிய திலகம் தயாரிக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோமா. இந்த குங்குமத்தை தயாரிப்பதற்கு நமக்கு நல்ல மனம் நிறைந்த தாழம்பூ குங்குமம் தேவை. நாட்டு மருந்து கடைகளில் தாழம்பூ குங்குமம் என்று கேட்டாலே நமக்கு கிடைக்கும். அந்த குங்குமத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு சுத்தமான குங்குமப் பூ நமக்கு தேவைப்படும். இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்.

- Advertisement -

ஒரு வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்யுங்கள். வெள்ளிக்கிழமை எப்போதும் போல உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து மகாலட்சுமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் தீபங்கள் ஏற்றி வைத்து விடுங்கள். மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பு ஒரு சிறிய கிண்ணத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய கைகளில் ஒரு கிண்ணத்தில் தாழம்பு குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக உங்கள் கையில் இருக்கும் குங்குமத்தை மோதிர விரலாலும் கட்டை விரலாலும் ஒவ்வொரு சிட்டிகை எடுத்து மகாலட்சுமி தாயாரின் முன்பு இருக்கும் கிண்ணத்தில் போடவேண்டும். குங்கும அர்ச்சனை செய்வது போலவே செய்யுங்கள். ஒவ்வொரு முறை குங்குமத்தை எடுத்து போடும் போது, இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான வசிய மந்திரம் இதோ.

- Advertisement -

ஓம் நமசிவாய,
சகலரும் சகலமும் வசி வசி.

இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து, 108 முறை உங்கள் கைகளால் குங்குமத்தை எடுத்து மகாலட்சுமி பாதங்களில் இருக்கும் கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு ஒரே ஒரு குங்குமப்பூவை எடுத்து இந்த குங்குமத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். அதன்பின்பு வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அந்த அர்ச்சனை செய்யப் பட்ட குங்குமமானது மகாலட்சுமி தாயாரின் பாதங்களிலேயே இருக்கட்டும். பூஜையை முடித்து விட்டு அதிலிருந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.

அவ்வளவு தான். வசிய திலகம் தயார். இந்த குங்குமத்தை திருமணம் ஆன பெண்களாக இருந்தால் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். வகுட்டிலும் வைத்து கொள்ளலாம். திருமணமாகாத பெண்கள் நெற்றியில் மட்டும் இட்டுக் கொள்ளுங்கள். காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளும் போது இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த குங்குமம் உங்களுக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். நீங்கள் தொட்ட காரியம் வெற்றி அடையும். நீங்கள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். எல்லா விஷயங்களும் உங்கள் வசப்பட இந்த திலகம் உங்களுக்கு துணை புரியும். தவறாக எந்த விஷயத்தையும் சாதிக்க முடியாது. அந்த மகாலட்சுமி தாயார் இறங்கி வந்து உங்கள் நெற்றியில் குடி கொள்வாள். அவ்வளவு தான். இதனுடைய அர்த்தம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -