பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது மறக்காமல் இதை மட்டும் செய்து விடுங்கள். புகுந்த வீட்டுக்கும் செல்வ செழிப்பு கிடைக்கும். பிறந்த வீட்டிலும் செல்வ செழிப்பு ஊற்றெடுக்கும்.

marriage
- Advertisement -

ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால் நம்முடைய வீட்டிற்கு மகாலட்சுமி வந்துவிட்டது என்றுதான் வழக்கத்தில் சொல்லுவோம். ஆனால் அந்த பெண் குழந்தையை வளர்த்து அடுத்தவர்கள் வீட்டுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவோம். அப்போது நம் வீட்டு மகாலட்சுமியாகப்பட்டவள் அடுத்தவர்கள் வீட்டிற்கு செல்வதாக தானே அர்த்தம். அப்போது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துவிட்டால் நம்வீட்டு மகாலட்சுமி அடுத்த வீட்டிற்கு சென்று விட்டதாக தானே அர்த்தம். என்னங்க கேள்வி இது. காலம் காலமாக இதுதானே நம்முடைய பாரம்பரியத்தில் நடந்து வருகிறது. இதில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்று நிறைய பேர் சிந்திக்கலாம்.

ஆனால் சில பேர் வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் அதிர்ஷ்டமும் பிறக்கும். அந்த பெண் குழந்தை திருமணமாகி சென்ற பின்பு, அதிர்ஷ்டமும் அந்த பெண் குழந்தையோடு சென்றுவிடும். ‘என்னுடைய பிள்ளை பிறந்த போது, என் வீட்டிற்கு அதிர்ஷ்டம் வந்தது. என் பிள்ளையை கட்டிக் கொடுத்தவுடன் அதிர்ஷ்டம் அவளோடவே சென்று விட்டது’ என்று சிலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லவா.

- Advertisement -

இப்படி நம் வீட்டுப் பெண் பிள்ளையை கட்டிக் கொடுத்த பின்பும் நம் வீட்டு அதிர்ஷ்டம் நம்மை விட்டு செல்லாமல் இருக்க என்ன செய்வது. இந்த பரிகாரத்தை செய்தால், பிறந்த வீட்டிலும் செல்வ செழிப்பு உண்டாகும். அந்தப் பெண் செல்லக்கூடிய புகுந்த வீட்டிலும் செல்வ செழிப்பு இருக்கும். உங்கள் வீட்டில் இருந்து பெண் பிள்ளை திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் போது, அவளுடைய கையில் ஒரு கைப்பிடி அளவு சில்லறை காசை கொடுத்து விடுங்கள். அந்த சில்லரை காசை அவள் கையாலேயே ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு கட்டி அதை உங்கள் வீட்டு பீரோவில் வைத்து விட சொல்லுங்கள்.

அவள் கையால் உங்கள் வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை இப்போது கொடுத்து விட்டாள். அதன் பின்பு, இரண்டாவதாக உங்கள் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு கிளம்பும்போது இதையும் செய்ய வேண்டும். ஒரு தட்டில் கொஞ்சமாக குங்குமம் போட்டு, தண்ணீர் ஊற்றி கரைத்து விடுங்கள். அந்த தண்ணீரில் உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையின் இரண்டு உள்ளங் கைகளையும் வைத்து, அந்த அச்சை அப்படியே உங்களுடைய வீட்டு சுவரில் வைத்துக் கொள்ளுங்கள். நிறைய வட இந்தியர்கள் இந்த கலாச்சாரத்தை பின்பற்றுவார்கள். இப்படி செய்தால் உங்கள் பெண் பிள்ளையின் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக இருக்கும் என்பது அர்த்தம். (சிறப்பு நிறத்தில் உங்கள் வீட்டு பெண் குழந்தையின் கை அச்சு உங்கள் வீட்டிலேயே இருக்கும். காலப்போக்கில் அது களைந்து விட்டால், அதைப்பற்றி ஒன்றும் கவலைப்பட தேவையில்லை.)

- Advertisement -

இதனால் அந்தப் பெண்ணினுடைய அதிர்ஷ்டம் புகுந்த வீட்டில் வேலை செய்யாதா? அதிர்ஷ்டத்தை எல்லாம் பிறந்த வீட்டிலேயே அந்தப் பெண் விட்டு சென்று விட்டாளா? என்ற சந்தேகத்திற்கெல்லாம் இடமே கிடையாது. திருமாங்கல்யத்தை கட்டிக்கொண்டு ஒரு பெண் புகுந்த வீட்டில் போய் அந்த வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வைத்து விட்டாலே போதும். புகுந்த வீட்டில் ஐஸ்வர்யம் நிறைவாக இருக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. எங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொடுத்த பின்பு, எங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் இருக்கிறது என்பவர்கள் உங்கள் வீட்டுப் பெண், புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கு வரும்போது, அவருடைய கையால் ஒரு கைப்பிடி சிலரை காசுகளை கொடுத்து மேல் சொன்னது போல, மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு பீரோவில் அந்த முடிச்சை வைத்து பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டின் நிலைமை நிச்சயமாக மாறும். குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று பிறந்த பெண் குழந்தையை, மகாலட்சுமியை திருமணம் செய்து வைக்கும் போது அந்த வீட்டில் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -