பணத்தடை நீங்கி பண வசியம் உண்டாக மிளகு பரிகாரம்

money pepper
- Advertisement -

இன்றைய காலத்தில் பணத்தை சம்பாதிப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. பணத்தை சம்பாதிப்பது எந்த அளவுக்கு கடினமோ அதைவிட பல மடங்கு கடினமாக இருப்பதுதான் பணத்தை நம்முடன் தக்க வைத்துக் கொள்வது. பலரும் கைநிறைய சம்பாதித்தும் ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒரு ரூபாய் கூட தங்கள் கையில் இல்லாமல் அனைத்தும் கரைந்து போய் கடன் கேட்கும் நிலைமைக்கு கூட ஆளாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது பண வசியம் இல்லாததுதான்.

யார் ஒருவருக்கு பண வசியமோ பண ஈர்ப்பு சக்தியோ இருக்கிறதோ அவர்களிடம் தான் பணம் தங்கும். அப்படி ஒருவருக்கு பண வசியமோ பண ஈர்ப்பு சக்தியோ இல்லை என்றால் முதலில் அவர்களிடம் எதிர்மறையாற்றல்கள் இருக்கிறது என்று அர்த்தம். அந்த எதிர்மறை ஆற்றல்களை நீக்கினால் தான் பணத்தடை என்பது விலகும் பிறகுதான் பணத்தை நம்மால் வசியம் செய்ய முடியும். இவை அனைத்தையும் சரி செய்வதற்குரிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பண வரவை அதிகரிக்க வழிபாடு

மாதம் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்து மாதத்தின் முதல் நாளில் சம்பளத்தை கையில் வாங்குவோம். வாங்கிய அடுத்த நாளே கையில் ஒரு பைசா கூட இல்லாமல் அனைத்தும் காலியாகிவிடும். இதற்கு அவர்களிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் ஒரு வித காரணமாக தான் திகழ்கிறது. அதோடு மட்டுமல்ல இன்னும் சிலர் இருக்கிறார்கள் கஷ்டப்பட்டு உழைப்பார்கள். ஆனால் அந்த உழைப்பிற்கு ஏற்ற பணம் என்பது அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். இதைத்தான் பணத் தடை என்று கூறுவோம். இந்த எதிர்மறை ஆற்றல்களையும் பணத்தடையையும் நீக்குவதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் செய்ய வேண்டும். இயன்றவர்கள் இந்த மூன்று கிழமையிலும் செய்யலாம். அது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் இந்த மூன்று கிழமையில் ஏதாவது ஒரு கிழமை செய்ய வேண்டும். இதற்கு நான்கு மிளகு மட்டும்தான் வேண்டும். வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறீர்களோ அத்தனை நபர்களும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி பணத்தடை விலகி பண வசியம் உண்டாகும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் அனைவரின் கையிலும் நான்கு மிளகுகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து விடுங்க. ஒவ்வொருவராக தங்களுடைய கையில் இருக்கக்கூடிய மிளகை வைத்து தலையை மூன்று முறை வலது புறமாகவும் இடது புறமாகவும் சுற்றிவிட்டு இந்த நான்கு மிளகுகளையும் நான்கு திசைகளில் போட்டு விட வேண்டும். வீட்டிற்குள் மட்டும் போட வேண்டாம். மத்தபடி பக்கத்தில் விழுந்தாலும் எந்த பிரச்சினையும் இல்லை.

இதே போல் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நபர்களும் தங்களுடைய தலையை வலப்புறமாக மூன்று முறையும் இடப்புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு மிளகை போட்டுவிட்டு அந்த மிளகு எந்த இடத்தில் விழுந்தது என்பதை பார்க்காமல் வீட்டிற்குள் வந்து விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகும். அதோடு பணத்தடையும் நீங்கும். இவை இரண்டுமே நீங்கி விட்டால் நாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணமானது நம்மிடம் வந்து நிரந்தரமாக நிலைத்து இருக்கும்.

இதையும் படிக்கலாமே: படிப்புக்கேற்ற வேலை கிடைக்க ராஜராஜேஸ்வரி வழிபாடு

கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை நம்முடனே தக்க வைத்துக் கொள்ள நான்கே நான்கு மிளகு போதும் இந்த நான்கு மிளகை பயன்படுத்தி நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணத் தடையை நீக்கி பண வசியத்தை ஏற்படுத்தி நலமுடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -