செல்வம் பெருக பெருமாள் வழிபாடு

perumal kalasa valipadu
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியான பண தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு அன்றாட உணவு உண்ணவே பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இன்னும் சிலரோ தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் கஷ்டப்படுவார்கள். இன்னும் சிலரோ தங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக சேமிக்க முடியவில்லை என்று வருத்தப்படுவார்கள். இன்னும் சிலரோ தொழிலில் அதிக அளவு லாபம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவார்கள்.

இன்னும் சிலரோ தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சேமிப்பை உயர்த்த வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி பணம் ரீதியாக ஒவ்வொரு நபரும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு வருத்தப்படுபவர்கள். இப்படி பணரீதியாக ஏற்படக்கூடிய அனைத்து விதமான வேண்டுதலையும் பூர்த்தி செய்யும் வகையில் பெருமாளை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக விளங்க கூடியவர் மகாலட்சுமி தாயார் என்றாலும் மகாவிஷ்ணுடன் சேர்ந்து மகாலட்சுமி தாயாரை நாம் வழிபடும் பொழுது முழுமையான பலனை நம்மால் பெற முடியும் என்பது நிதர்சனமான உண்மை. நாராயணா என்று மட்டும் கூறினாலே மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் நம்முடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் பணரீதியாக இருக்கும் அனைத்து விதமான பிரார்த்தனைகளை நிறைவு செய்யவும் பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

இந்த வழிபாட்டிற்கு பெருமாளின் படம் தேவைப்படும். இந்த வழிபாட்டை என்றைக்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். வளர்பிறை நாளாக பார்த்து ஆரம்பிப்பது மிகவும் சிறப்பு. அன்றைய தினம் பூஜை செய்பவர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய பெருமாள் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு கலச செம்பை எடுத்து அந்த செம்பிற்குள் தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீரில் பச்சை கற்பூரத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அம்மனுக்கு சிறியதாக சாற்றப்படும் பாவாடை துணியை வாங்கி வந்த அந்த கலசத்திற்கு கட்டி விட வேண்டும். செம்பிற்கும் மேலே ஒற்றைப்படை எண்ணிக்கையில் மா இலைகளை வைக்க வேண்டும். பிறகு நல்ல தேங்காயாக பார்த்து ஒரு தேங்காயை எடுத்து அதில் மஞ்சள் தடவி நடுவில் பெருமாளின் நாமத்தை போட்டு அந்த கலச செம்பின் மேல் வைத்து விட வேண்டும். இந்த கலசத்தை நாம் மகாலட்சுமி ஆக பாவித்து கொள்ள வேண்டும். பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் வாசனை நிறைந்த மலர்களை சூட்ட வேண்டும்.

இப்பொழுது பூஜையை ஆரம்பிக்கலாம். முதலில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து அவருக்கு அருகம்புல்லை வைத்து முழு மனதோடு வணங்கிக் கொள்ள வேண்டும். பிறகு பெருமாளின் படத்திற்கு முன்பாக கலசத்தை வைத்து கலசத்திற்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாசனை மிகுந்த குங்குமத்தை வாங்கி வந்து பெருமாளுக்கும் கலசத்திற்கும் ஒன்றாக சேர்த்து குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி குங்கும அர்ச்சனை செய்யும் பொழுது விஷ்ணு சகஸ்ரநாமம் தெரிந்தவர்கள் அதை கூறலாம். தெரியாதவர்கள் “லட்சுமி நாராயணரே போற்றி” என்னும் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்யலாம். இப்படி அர்ச்சனை செய்த குங்குமத்தை நாம் தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். இந்த பூஜையை தொடர்ந்து 16, 48, 90 நாட்கள் என்ற வீதம் நம்மால் எவ்வளவு நாட்கள் தொடர்ச்சியாக செய்ய முடியுமோ அவ்வளவு நாட்கள் செய்ய வேண்டும்.

48 நாட்கள் தொடர்ந்து குங்கும அர்ச்சனை செய்யும்பொழுது குங்குமத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்னும் பட்சத்தில் அந்த குங்குமத்தை கோவில்களுக்கு கொண்டு போய் கொடுக்கலாம் கால் படாதவாறு போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர மிளகு தீப வழிபாடு

இந்த முறையில் நாம் பெருமாள் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் நம்முடைய செல்வ செழிப்பு அதிகரிக்கும். இதனால் கடன் பிரச்சனை குறைவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய நியாயமான தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும்.

- Advertisement -