உங்கள் குழந்தைகள் படிப்பில் கவனம் காட்டவில்லையா? பிள்ளைகளை இரண்டு நாட்கள் இவர்களுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தால், அவர்கள் தான் படிப்பில் நம்பர் 1.

navagram
- Advertisement -

கடந்த இரண்டு வருடங்களாக லாக்டவுன் காரணமாக குழந்தைகளால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. திடீரென்று இப்போது தினம் தோறும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். பாடம் படிக்க வேண்டும். வீட்டுப்பாடம் எழுத வேண்டும் என்றால் சில பிள்ளைகளுக்கு அது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் விளையாட்டிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகளை திட்டி, கஷ்டப்படுத்தி வறுத்தி படிப்பை தினிக்க வேண்டாம். ரொம்பவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டால், பிறகு சிறு வயதிலேயே அவர்கள் படிப்பை இன்னும் வெறுக்கத்தான் ஆரம்பிப்பார்கள். ஆகவே குழந்தைகளை கஷ்டப்படுத்தாமல் படிப்பின் மீது ஆர்வத்தை அவர்களுக்கு கொண்டு வர வேண்டியது பெற்றவர்களின் கடமை. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

படிப்பில் ஆர்வம் இல்லாத, ஞாபக சக்தி குறைந்த அறிவாற்றல் குறைந்த குழந்தைகளுக்கு அவர்களுடைய திறமையை வளரச் செய்ய ஆன்மீக ரீதியாக ஏதேனும் பரிகாரம் உள்ளதா என்று கேட்பவர்களுக்கு ஒரு சில பரிகாரம் இந்த பதிவின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு இதை செய்பவர்களுக்கு நிச்சயம் கை மேல் பலன் உண்டு.

- Advertisement -

புத்திசாலித்தனத்தோடு செயல்பட, அறிவாற்றலை வளரக்க ஞாபக சக்தியை கொடுக்க கூடிய கிரகம் என்றால் அது புதன் பகவான். புதன்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வாரந்தோறும் வரக்கூடிய புதன்கிழமை அன்று 5 ஏலக்காய் களைகளை குழந்தைகளின் கையில் கொடுத்து நவகிரகத்தில் இருக்கக்கூடிய புதன் பகவானின் பாதங்களில், அந்த ஏலக்காயை வைத்து உங்களுடைய பிள்ளைகளின் பெயரைச் சொல்லி ஒரு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

பிரசாதமாக வைத்த ஏலக்காய்களை மீண்டும் நீங்கள் திரும்ப வாங்கி அந்த ஏலக்காய்களை குழந்தைகளுக்கு பாலில் கலந்து அல்லது ஏதாவது ஒரு இனிப்பு பலகாரத்தில் கலந்து சாப்பிட கொடுத்து விடலாம். வெறும் ஏலக்காய்களை அந்த குழந்தைகள் சாப்பிட்டால் இன்னும் சிறப்பு. வாரம் தோறும் புதன்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். உங்கள் வீட்டின் அருகில் ஐங்கிரிவரின் சன்னிதானம் இருந்தால் அந்த ஐயங்கரிவருக்கு புதன்கிழமை அன்று 50 ஏலக்காய்களை தொடுத்த மாலையை ஒரு முறை குழந்தையின் கையால் போட்டு ஐங்கிரிவருக்கு தீபம் ஏற்றி, வழிபாடு செய்ய சொல்லுங்கள். இதுவும் ஒரு நல்ல பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

குழந்தைகள் வீட்டில் படிக்கக்கூடிய இடம் நல்ல சூரிய வெளிச்சம் காற்று கிடைக்கக்கூடிய இடமாக இருக்கட்டும். குறிப்பாக வடகிழக்கு திசையில் முடிந்தால் குழந்தைகளை அமர வைத்து படிக்கச் செய்வது அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு தாய்மாமன் இருந்தால் அந்த தாய் மாமனோடு இரண்டு நாட்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். புதன் என்றால் ஐந்தாம் இடத்தை குறைக்கின்ற பாகம். ஐந்தாம் இடம் என்பது தாய் மாமனுக்கு உரியது. ஆகவே பிள்ளைகள் தாய் மாமனோடு சேரும் போது, புதன் கிரகம் நீச்சம் பெற்று இருந்தாலும் அது சரியாகி பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதிலும், படிப்பிலும் அதிக கவனம் காட்டுவார்கள். நம்பிக்கையோடு ஒரு சில விஷயங்களை முயற்சி செய்யும்போது நமக்கு நிறைய பலன் கிடைக்கும். மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றித்தான் பாருங்களேன். பிள்ளைகளுக்கு நன்மை நடந்தால் அதைவிட சந்தோசம் பெற்றவர்களுக்கு வேறு என்ன உள்ளது.

- Advertisement -