யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சனைகள் தீர யாரிடமும் சொல்லாமல் இதை செய்து விடுங்கள் போதும்.

lady-arasa-maram
- Advertisement -

நம் வாழ்க்கையில் சிலரை பார்த்திருப்போம். எப்பொழுதும் தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். எதைத் தொட்டாலும் நஷ்டம் அவர்களுக்காக யாராவது நல்லது செய்ய நினைத்தாலும் அதை அவர்களால் செய்ய முடியாது. இப்படி அவர்களைப் பற்றி நினைத்தாலே நல்லபடியான விஷயங்கள் நினைவுக்கு கூட வராது. அப்படியான துரதிஷ்டமான நிலையில் பலரும் இருக்கத் தான் செய்கிறார்கள். இந்த துன்பத்தை எல்லாம் அவர்கள் வெளியில் கூட சொல்லாமல் மனதுக்குள்ளயே புழுங்கி கொண்டு இருப்பார்கள். அப்படியானவர்களின் நிலை மாறி அவர்களும் எல்லோரைப் போல நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ இந்த ஒரு எளிய பரிகாரம் உதவியாக இருக்கும்.

தீராத பிரச்சனைகள் தீர பூட்டு பரிகாரம்
நாம் வெளியில் யாரிடமும் சொல்லவும் முடியாமல் அதே நேரத்தில் நம்மால் சரி செய்து கொள்ளவும் முடியாமல் நம்முடைய கர்ம வினைகளாலே நம்மை தொடரேம் இந்த பிரச்சனைகளை சரி செய்ய இந்த பூட்டு பரிகாரம் சிறந்த தீர்வு என்று ஆன்மீகம் சொல்கிறது. இந்த பரிகாரத்தை புதன், வியாழன், வெள்ளி இந்த மூன்று நாட்களில் தொடங்கலாம். தொடங்கியதிலிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நாம் வாங்க வேண்டிய ஒரே பொருள் பூட்டு. கடையில் சென்று சாவிவுடன் சேர்ந்து இருப்பது போன்ற ஒரு பூட்டை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பூட்டை எந்த காரணத்திற்க்கும் கொண்டு திறக்க கூடாது. இது தான் மிக மிக முக்கியமான ஒன்று.

- Advertisement -

இப்போது கடையிலிருந்து வாங்கிய பூட்டை வீட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தை முடிந்த வரையில் புதன்கிழமை செய்ய பாருங்கள். அது உடனடியான பலன்களை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் வாங்கி வந்த பூட்டை இரவு நீங்கள் படுக்கும் முன்பு உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு வேண்டுதலை வைக்க வேண்டும். அதாவது உங்களுக்கே தெரியும் உங்கள் வாழ்க்கையில் இது நடந்தால் என்னுடைய நிலைமை சரியாகிவிடும் என்று அது போன்ற ஒரு பெரிய விஷயத்தை மனதில் நினைத்துக் கொண்டு வேண்டுங்கள்.

அதன் பிறகு இந்த பூட்டை உங்கள் தலையணை அடியில் வைத்து விட்டு உறங்குங்கள். மறுநாள் காலையில் இந்த பூட்டு தலகணி அடியில் அப்படியே இருக்கட்டும் எடுக்க வேண்டாம். அதற்கடுத்த நாள் வியாழக்கிழமை இரவு படுக்கும் பொழுது இதே மாதிரி பூட்டை கையில் எடுத்து உங்களுடைய வேண்டுதல்களை மனதார சொல்லிய பிறகு முதல் நாள் இரவு வேண்டி முடித்த பிறகு எந்த திசையில் எப்படி படித்தீர்களோ அதே போல் படுங்கள். அதன் பிறகு புரண்டு படுத்தால் தவறில்லை.

- Advertisement -

இது போல மூன்று நாட்கள் செய்த பிறகு சனிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு இந்த பூட்டை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் ஆலயத்தில் வைத்து விட்டு வந்து விடுங்கள். அது எந்த ஆலயமாக இருந்தாலும் சரி இந்த பரிகாரத்தை எல்லா மதத்தினரும் செய்யலாம் ஆகையால் கோவில் மசூதி சர்ச் போன்றவற்றில் கூட அவரவருக்கான ஆலயத்தில் வைக்கலாம். ஆலய வழிபாட்டை செய்யாதவர்கள் விருப்பமில்லாதவர்கள் அரச மரத்தடியில் இந்த பூட்டை மதியம் வைத்து விட்டு வந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க விநாயகப் பெருமானை இப்படி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

இந்த பரிகாரம் மிகவும் எளிமையானது தான் இதில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம் பூட்டை திறந்து பார்க்கக் கூடாது அதே போல் வேண்டிய பிறகு நீங்கள் படுக்கும் திசை அடுத்த நாள் படுக்கும் போது மாறக் கூடாது.

- Advertisement -