வாழ்க்கையில் வரக்கூடிய பெரிய பெரிய கண்டத்தில் இருந்தும் கூட தப்பித்துக் கொள்ளலாம். இன்று மூன்றாம் பிறை சந்திர தரிசனத்தின் போது இதை செய்யுங்கள்.

pirai
- Advertisement -

பொதுவாகவே நாம் வழக்கத்தில் சொல்லுவது உண்டு. இதை மட்டும் நான் செய்திருந்தால் என்னுடைய வாழ்க்கையை தலைகீழாக மாறி இருக்கும். நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன். ஏதோ ஒரு நல்ல நேரம் இந்த வேலையை என்னை செய்ய விடாமல் தடுத்துவிட்டது என்று. அதாவது வரக்கூடிய பெரிய கண்டத்தில் இருந்து ஏதோ ஒரு நல்ல சக்தி நம்மை காப்பாற்றி விடும். இப்படி நமக்கு வரக்கூடிய பெரிய கெடுதலில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு வழிபாடு இந்த மூன்றாம் பிறை தரிசனம்.

இதற்கென்று பெரிய அளவில் எந்த ஒரு பரிகாரங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டாம். பின் சொல்ல கூடிய முறைகளை நீங்கள் பின்பற்றினாலே போதும். உங்களுக்கு வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைத்து விடும். அதாவது மாதம் தோறும்  இந்த மூன்றாம் பிறை தரிசனம் செய்தால், சத்யநாராயண பூஜை செய்த பலனை பெற முடியும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த மாதம் மட்டுமல்ல, மாதம்தோறும் நீங்கள் இந்த பிறை தரிசனத்தை செய்து வர தவறாதீர்கள். இன்று மூன்றாம் பிறை தரிசனம். அதாவது அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் இந்த பிறை தரிசனத்தை செய்ய வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரம் சொல்கிறது. இன்று மாலை சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். மாலை 6.30 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பிறை தரிசனம் ஆனது உங்களுக்கு தென்படும். மேற்கு திசை நோக்கி பார்க்க வேண்டும்.

எல்லா நேரத்திலும் இந்த பிறை நிலவு தெளிவாகத் தெரியும் என்று சொல்லி விட முடியாது. அதுவும் மாலை 6.30 மணியிலிருந்து 7.00 மணிக்குள் தான் இந்த பிறை நிலவு தெரியும். அரை மணி நேரமும் தெரியாது. பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள், இந்த அரை மணி நேரத்திற்குள் எப்போது வேண்டுமென்றாலும் தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. மேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் சமயத்தில் இந்த பிறை நிலவை நம்மால் தெளிவாக பார்க்க முடியும்.

- Advertisement -

இப்போது மாலை நேரத்தில் மழை வரக்கூடிய சூழ்நிலை இருப்பதால் மேகமூட்டங்கள் இருக்கிறது. பிறை நிலவு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. மாலை 6:45 க்கு மேற்கு நோக்கியவாறு பிறை நிலவு இருப்பது போல மனதார ஒரு பாவனையாக நினைத்துக் கொண்டு கூட நீங்கள் சந்திர பகவானை வணங்கிக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் மாலை நேரத்தில் உங்களுடைய கணவர் குழந்தைகள் இருந்தால் குடும்பத்தோடு சென்று இந்த பிறை தரிசனத்தை செய்யுங்கள்.

அதன் பின்பு வீட்டிற்குள் வந்து உங்கள் பூஜை அறையில் ஏற்றி வைத்திருக்கும் விளக்கை பார்த்து குலதெய்வத்தை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பிறகு வாய்ப்பு இருந்தால் உங்கள் வீட்டில் அருகில் ஏதாவது சிவன் கோவிலில் இருந்தால் குடும்பத்தோடு சென்று சிவபெருமானை மனதார வழிபாடு செய்து விட்டு வீட்டிற்கு திரும்புவது மிக மிக நல்ல பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் வர தூங்கும் போது தலையணைக்கு அடியில் இதெல்லாம் வைக்கணுமா? யோகம் தரும் உலோகங்கள்!

மேல் சொன்ன விஷயங்கள் எதுவுமே உங்களால் செய்ய முடியவில்லையா. நீங்கள் வேலையாக வெளியிடங்களில் இருக்கிறீர்களா. நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அங்கேயே இருந்தபடி, இன்று மாலை 06:45 மணிக்கு மேற்கு நோக்கி நின்று சந்திர பகவானை மனதில் நனைத்து கொண்டு சிவசிவா என்று சொல்லி, மனதிற்குள்ளேயே சாமி கும்பிட்டுக்கோங்க.  வீட்டில் இல்லாமல் மற்ற வெளியிடங்களில் நீங்கள் இருந்தால் கூட இந்த முறைப்படி சந்திர பகவானை நினைத்தாலே போதும். பிறை நிலவு பார்த்த பலன் உங்களுக்கு கிடைத்துவிடும்‌.

- Advertisement -