இந்த 1 தவறை நீங்கள் செய்தால், நீங்கள் செய்யக்கூடிய புண்ணிய காரியத்திற்கு எந்த பலனும் உங்களுக்கு கிடைக்காது.

dhanam
- Advertisement -

ஆயிரம் பேருக்கு வஸ்திர தானம் செய்து, லட்சம் பேருக்கு அன்னதானம் செய்து, தான தர்ம காரியதில் எவ்வளவு புண்ணியத்தை தேடினாலும் சரி, அந்த புண்ணியத்திற்கெல்லாம் பலன் கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்களுடைய வீட்டில் இந்த ஒரு தவறை மட்டும் செய்யக்கூடாது. இது ஒரு சின்ன தவறு என்று தான் நாம் செய்வோம். ஆனால், இந்த தவறு தான் நம்முடைய குடும்ப கஷ்டத்திற்கு மூலகாரணமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு தவறு என்ன தவறாக இருக்கும் என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி எழுகிறதா? சரி, அதற்கான பதிலை இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆனால் இந்த ஒரு தவறு என்ன என்று நீங்கள் தெரிந்து கொண்ட பிறகு, அந்த தவறை நீங்கள் நிச்சயம் திருத்திக் கொள்வேன் என்று மனதார உறுதிமொழி எடுத்துக் கொண்டு, இந்த பதிவினை படிக்க தொடருங்கள்.

வளர்ந்து வரும் நாகரீக உலகத்தில் உறவுகளுக்கான மதிப்பும் மரியாதையும் சுத்தமாக அழிந்து வருகிறது. உடன் பிறந்த அண்ணன், தம்பி, அக்கா தங்கை, என்ற பாச உணர்வு என்பது சுத்தமாக இல்லை. ஏன் தாய் தந்தை என்ற உறவுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. அந்த வரிசையில் நம் வீட்டில் பிறந்த பெண் பிள்ளைகளையும் நாம் மதிப்பதே கிடையாது.

- Advertisement -

ஒரு வீட்டில் ஆண் வாரிசுகளேக்கு கொடுக்கக்கூடிய மதிப்பும் மரியாதையும், அந்த வீட்டு பெண் வாரிசுக்கு கிடைப்பது கிடையாது. பெண்ணை திருமணம் செய்து வேறு ஒருவர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டால் அதோடு முடிந்தது. அந்தப் பெண்ணின் நிலைமை எப்படி இருக்கிறது என்று, பிறந்த வீட்டில் இருக்கக் கூடியவர்கள் சிந்திப்பதே கிடையாது. இது மிகப்பெரிய தவறு.

உங்கள் வீட்டின் பெண்பிள்ளைகளை நீங்கள் இன்னொருவர் வீட்டிற்கு திருமணம் செய்து அனுப்பி வைத்து இருந்தாலும் சரி, அந்த பெண் கண்கலங்காமல் வாழ்கின்றாளா என்பதை பார்க்க வேண்டும். அவளுக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் அந்த கஷ்டத்திற்கு பிறந்த வீட்டில் இருப்பவர்கள் முடிந்த உதவியை செய்ய வேண்டும். உங்கள் வீட்டுப் பிறந்த பெண் கண்ணீர் வடிப்பதை பார்த்துக் கொண்டு அப்படியே விட்டு விடக்கூடாது.

- Advertisement -

உங்கள் வீட்டு பிறந்த பெண்ணிற்கு வருடத்திற்கு ஒருமுறையாவது புத்தாடை ரவிக்கைத் துணி, வெற்றிலை பாக்கு, மஞ்சள், தட்சனை வைத்து கொடுக்க வேண்டும். வயிறார சாப்பாடு போட்டு இந்த மரியாதையை உங்கள் வீட்டு பிறந்த பெண்ணிற்கு செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டு பிறந்த பெண்கள் சந்தோஷமாக கண்கலங்காமல் இருந்தால்தான், உங்கள் குடும்பம் தழைக்கும். உதாரணத்திற்கு ஒரு குடும்பம் இருக்கின்றது. அந்த குடும்பத்தில் ஒரு ஆண் வாரிசு, ஒரு பெண் குழந்தை உள்ளது. பையனுக்கு திருமணம் ஆகிவிட்டது. பெண்ணுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அந்த குடும்பத்தில் தாய் தந்தையர் இல்லை. இருப்பினும் அந்த ஆண் வாரிசு அண்ணன் ஸ்தானத்தில் இருந்தாலும் சரி, தம்பி ஸ்தானத்தில் இருந்தாலும் சரி, அந்த வீட்டில் பிறந்த பெண்ணுக்கு வருடா வருடம் இந்த வஸ்திரத்தை வாங்கி மனதார தாம்பூலத்துடன் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அந்த வீட்டில் பிறந்த பெண் தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்து, வயிறார சாப்பிட்டு, மனம் குளிர்ந்து அந்த வஸ்திரத்தை தாம்பூலத்தை, மனத் திருப்தியோடு பெற்றுக்கொண்டால் உங்கள் குடும்பம் தழைக்கும். உங்கள் வீட்டு பிறந்த பெண் கண்கலங்குவதற்கு, நீங்கள் எப்போதுமே காரணமாக இருக்கக் கூடாது. அப்பா அம்மாவாக இருந்தாலும் சரி, அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் சரி, சொத்துக்காக கூட அவர்களோடு சண்டை போடாதீர்கள். மனத் திருப்தியோடு அவர்களுக்கு செய்யவேண்டிய விஷயங்களை சரியான முறையில் செய்து விடுங்கள்.

நீங்கள் எவ்வளவுதான் தான தர்ம காரியங்களை செய்து வந்தாலும், உங்கள் வீட்டுப் பிறந்த பெண் சந்தோஷமாக இல்லை என்றால், நீங்கள் செய்த தர்ம காரியத்திற்கு உண்டான பலன் நிச்சயமாக உங்களுக்கு கிடையாது. இதன் நிதர்சனமான உண்மை. நம்முடைய முன்னோர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை.

சரி, எங்கள் வீட்டில் பெண் வாரிசு கிடையாது. எல்லாருமே ஆண் வாரிசுகள் தான். மூன்று பேர், நான்கு பேர் அல்லது இரண்டு பேரும் ஆண் பிள்ளைகள் என்றால் என்ன செய்வது. உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் அனைவரும் வருடத்தில் ஒருமுறை ஒன்றாகக்கூடி குல தெய்வத்திற்க்கு புதிய வஸ்திரம் எடுத்துக்கொடுத்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அண்ணன் தம்பிகள் என்றால் அண்ணன் தம்பிகளுடைய குடும்பமும் குழந்தைகளும் சேர்ந்ததுதான். குடும்பம் எல்லோரும் ஒட்டுமொத்தமாக உறவுகளாக கூடி நின்று குலதெய்வ வழிபாடு செய்வது அவருடைய குடும்பத்திற்கு நன்மையை கொடுக்கும்.

- Advertisement -