பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் சக்தி ஒரு கைப்பிடி அட்சதைக்கு உண்டு. பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர நினைத்தால் இதை செய்யுங்கள் போதும்.

arthanarishwarar
- Advertisement -

தம்பதிகளாக நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்த எத்தனையோ பேர், இன்று பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை. ஆனால் பிரிந்தவர்களுடைய மனதில் சிலபேருக்கு திரும்பவும் சேரவே கூடாது என்ற எண்ணம் இருக்கும். சில பேருக்கு ஏன் தான் பிரிந்தோம்? மீண்டும் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை விட்டு பிரிந்து இருந்தால், மீண்டும் அவரோடு சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் நல்லது. அந்த சிவபெருமானின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் ஒன்று சேர்ந்து விடுவீர்கள்.

இந்த பரிகாரத்திற்க்கு நமக்கு தேவையான பொருள், அட்சதை. பச்சரிசியில் கொஞ்சமாக மஞ்சள்தூளை போட்டு நெய் அல்லது தண்ணீர் விட்டு கலந்து அட்சதை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை துணையுடைய புகைப்படம் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மனைவியாக இருந்தால், கணவனோடு சேர வேண்டும் என்று நினைத்தால் உங்கள் கணவரது புகைப்படம் தேவை. நீங்கள் கணவராக இருந்து, மனைவியுடன் சேர வேண்டுமென்றால் மனைவியின் புகைப்படம் தேவை. (புகைப்படம் எதுவுமே இல்லை என்றால் வெள்ளை காகிதத்தில் அவருடைய பெயரை எழுதிக் கொள்ள வேண்டும்.)

- Advertisement -

பூஜை அறையிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். பூஜை அறையில் அமர்ந்துகொண்டு குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு, தயார் செய்த அட்சதயை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிண்ணத்திற்கு பக்கத்திலேயே ஒரு தட்டில் உங்கள் வாழ்க்கைத் துணையின் புகைப்படத்தை வைத்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு கணவன் மனைவி வேறு வேறு அல்ல. கணவனில் பாதி தான் மனைவி, மனைவியில் பாதி தான் கணவர் என்பதை நமக்கு உணர்த்த கூடிய அவதாரமான அர்த்தநாரீஸ்வரரை மனதார பிரார்த்தனை செய்து, கிண்ணத்தில் இருக்கும் அட்சதையை ஒரு சிட்டிகை அளவு எடுத்து உங்கள் வாழ்க்கைத் துணையின் புகைப்படத்தின் மீது போட வேண்டும். இப்படி போடும் போது ‘ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி’ என்று சொல்லி பரிகாரத்தை செய்ய வேண்டும். இப்படி 11 முறை இந்த மந்திரத்தை சொன்னால் கூட போதும். மேற்கொண்டு எத்தனை முறை வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை சொல்லிக் கொள்ளலாம். அது உங்கள் இஷ்டம். ஒவ்வொரு முறை மந்திரத்தை சொல்லும்போதும் அட்சதையை எடுத்து புகைப்படத்தின் மீது போடுங்கள்.

- Advertisement -

உங்கள் வாழ்க்கைத் துணையின் மேல் நீங்கள் உண்மையாக அன்பு வைத்திருந்து, உண்மையாக அவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் 48 நாட்களில் நீண்ட நாள் பிரிந்த கணவன் மனைவி கூட சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த பரிகாரத்திற்கு முதல் மூலக்கூறாக இருக்க வேண்டியது நம்பிக்கையும் உண்மையும் தான்.

நம்பிக்கை இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். சரி பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு இந்த அரிசியை என்ன செய்வது. ஓடும் தண்ணீரில் போடுவது சிறப்பு. எல்லோராலும் ஓடும் தண்ணீரில் போட முடியாது. உங்கள் வீட்டின் அருகில் கிணறு ஏதாவது இருந்தால் அதில் போடலாம். அதுவும் முடியாதவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீரை வைத்துவிட்டு, அதில் இந்த அரிசியை கொட்டி விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து விடுங்கள்.

- Advertisement -