வாழ்க்கையில் இனி சேர்ந்து வாழவே முடியாது என்று சொல்லிப் பிரிந்த கணவன் மனைவி கூட இணைந்து இன்பமாய் இல்லற வாழ்க்கை தொடங்க இந்த மந்திரத்தை தினமும் ஜெபித்தால் போதும்.

ragavendhirar manthiram
- Advertisement -

மேலை நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம் நம் நாட்டைப் பார்த்து ஆச்சரியப்படும் விஷயங்களில் முக்கியமானது என்று சொன்னால் அது நம்முடைய கலாச்சாரம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதிலும் நம்முடைய குடும்பத்தில் உள்ள உறவு முறைகள் சார்ந்த கலாச்சாரங்களும் இந்த உறவு பின்னல்களும் மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவு போற்றுதல் கூறியதாக உள்ளது என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அப்படியான இந்த கலாச்சாரத்தில் நாமே வியந்து போற்றக் கூடிய ஒன்று கணவன் மனைவி உறவு.

இத்தகைய பலமான குடும்ப அமைப்பைக் கொண்ட நம்முடைய வாழ்க்கை முறையில் கணவன் மனைவி உறவு என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இந்த உறவு தெய்வீகத்தன்மை வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. ஆகையால் தான் இந்த உறவு முறையிலும் கூட மற்ற நாடுகளில் இல்லாத அளவிற்கு நம் நாட்டில் பெருமை படக்கூடிய விஷயமாக இன்றளவும் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த உறவில் ஒரு விரிசல் என்றால் இது இரண்டு பேருக்குமானதாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. இதை சுற்றி உள்ள அனைவரையும் பாதிக்க கூடிய ஒன்று தான். அப்படி சூழ்நிலை காரணமாக பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான ஒரு அற்புதமான பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர
இந்த பரிகாரத்தை நாம் வியாழக்கிழமை அன்று தொடங்குவது மிகவும் நல்லது. அப்படி செய்ய முடியாதவர்கள் மற்ற நாட்களிலும் செய்யலாம் ராகவேந்தரை குருவாக பாவித்து செய்வதால் அவருக்கு உகந்த நாளான இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறந்தது. இந்த பரிகாரத்தை செய்ய நீங்கள் ராகவேந்திரர் படத்தை கட்டாயமாக வாங்கி கொள்ள வேண்டும் . இந்த படத்தை வாங்கி உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

பரிகாரத்தை தொடங்கும் நாள் அன்று படத்தை சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு மல்லிகை மலர்களால் மாலை தொடுத்து போடுங்கள். இந்த மலர் மாலையை முடிந்த வரையில் உங்கள் கைகளால் தொடுத்து போடுங்கள். அதன் பிறகு ராகவேந்திருக்கு உங்களால் முடிந்த அளவு ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை படைத்து ஒரு சிறிய பூஜை போல செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக அவருக்கு முன்பு ஒரு பட்டுத் துணியை விரித்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த நிறம் துணியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பட்டு துணியாக தான் இருக்க வேண்டும். அதில் அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

- Advertisement -

ஓம் ஸ்ரீரீம் கீரீம் ஸ்ரீரீம்
என்று இந்த மந்திரத்தை உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ அதை சொல்லுங்கள். இதை பிரிந்த கணவன் மனைவியின் யார் சேர வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களே அமர்ந்து சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தான் இருப்பார்கள் ஆனால் கருத்து வேறுபாடு அதிகமாக இருக்கும் இருவருக்குள்ளும் சரியான பேச்சு வார்த்தை இருக்காது. ஆனால் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். அப்படியான சூழ்நிலையில் இருவரும் ஒன்றாக அமர்ந்தும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

இது மட்டும் இன்றி வீட்டில் சில நேரங்களில் தேவையில்லாத எதிர்மறை ஆற்றல்களால் எப்போதும் குடும்பத்திற்குள் சண்டை, எரிச்சல், குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் அந்த சமயங்களிலும் இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஆனால் இது சம்பந்தப்பட்ட கணவன் மனைவி மட்டுமே செய்ய வேண்டும் அவர்களுக்காக மற்றவர் செய்தால் பலன் அளிக்காது.

இதையும் படிக்கலாமே: வரவே வராது என்று நீங்கள் நினைத்திருந்த பணம் கூட இந்த மூட்டையை வீட்டில் கட்டுவதன் மூலம் உங்களை தேடி வந்துவிடும்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் விட்டுச் செல்லுதலோ, விலகி செல்லுதலோ என்றைக்கும் தீர்வாகாது. மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அத்துடன் இது போன்றதொரு சிறந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடித்து அற்புதமான இந்த உறவை அழகாக வாழ வழி தேடி கொள்ளுங்கள்.

- Advertisement -